tag:blogger.com,1999:blog-95404202024-03-07T23:43:45.901-08:00கறுப்பிகறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comBlogger150125tag:blogger.com,1999:blog-9540420.post-37115988565891144802009-09-17T06:05:00.000-07:002009-09-17T06:11:58.627-07:00“புரிஞ்சுக்கோ”நீயில்லாக் கட்டிடத்தின் முன் குந்தியிருக்கின்றேன்.<br />வீடு மாறி விட்டாயாம்,<br />உறுதிப்படுத்த,<br />உன் தொலைபேசி இலக்கம் கூட என்னிடமில்லை.<br />இருந்தும் என்ன?<br /><br />மேப்பிள் இலைகள் நிறம்மாறிவிட்டன.<br />உன் பல்கனிப் புறாக்குஞ்சுகளும்<br />செட்டை முளைத்துப் பறந்துபோயிருக்கலாம்.<br />தேயிலை முடிந்துது வாங்கி நிரப்பிக்கொள்.<br />நானிட்ட மருந்தில் கரப்பான் பூச்சிகள் அழிந்தனவா?<br /><br />நம் நினைவுகளைத் தாங்கி<br />உன்னோடலைந்த வீதிகளில் தனியாய் அலைகின்றேன்.<br />உன்னோடிருந்த வீட்டின் முன்னால்<br />நீ விட்டுச் சென்ற சுவாசத்தின் ஒரு துளி தேடி<br />குந்தியிருக்கின்றேன்.<br />யார் கண்டது?<br />எனை இழுத்துவந்த ஏதோ ஒன்று<br />உனையும் ஒருநாள் இங்கே இழுத்துவரலாம்.<br /><br />“புரிஞ்சுக்கோ” என கண்கலங்க<br />என் கண்பார்த்துச்சொல்லிவிட்டுச் சென்றாய்.<br />பின்நவீனத்துவம்,<br />பிரேம்-ரமேஷ்,<br />சிக்மென் பிரைட்,<br />நீட்ஷே<br />புரிந்துகொண்ட என்னால்<br />உன் “புரிஞ்சுக்கோ”வை புரிந்து கொள்ள முடியவில்லை.<br /><br />பனிப்போர்வைக்குள்<br />உன் “புரிஞ்சுக்கோ”வைப் புரியாமலேயே<br />நான் விறைத்திருக்க<br />நீ கடந்து போகலாம்<br />அது நானென்று புரிஞ்சுக்காமல்.கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9540420.post-27230140301307353652009-09-14T11:17:00.000-07:002009-09-14T11:30:53.928-07:00உறையும் பனிப்பெண்வீட்டின் முன் மரக்கதவைத் திறந்தவுடன் ஒரு சின்ன ஹோல். அதன் இடப்பக்கத்தில் சாப்பாத்துகளை அடுக்கி வைப்பதற்கான வேலைப்பாடுகளுடன் சேர்ந்த மரத்தாலான சிறிய அலுமாரி. வலப்பக்கம் விருந்தினர்கள் ஜக்கெட்டைக் கழற்றி வைப்பதற்காக நான்கு கண்ணாடிகளைக் கொண்ட க்ளோசட். இவற்றைக் கடந்து மரத்தாலான வளைந்து செல்லும் படிக்கட்டுக்கள் படுக்கை அறைக்கு எடுத்துச் செல்லும். சின்ன ஹோலை அடுத்து, ஒரு சிறிய அறை. அதை பார்த்த உடனேயே அம்மா சொல்லி விட்டாள் இது சாமி அறை என்று. அடுத்து நீள் சதுரத்தில் பெரிய சாப்பாட்டு அறை, அதை அடுத்த நவீன வசதிகளுடன் கூடிய குசினி, குசினிக்கு எதிர்ப்பக்கம் சின்னதாக ஒரு சாப்பாட்டு அறை, அதை அடுத்து சிட்டிங் ஹோல் செங்கல்லால் ஆன குளிர்போக்கி அழகு படுத்தப்பட்டிருந்தது. அதனைக் கடந்து முன்பக்கத்தைப் பார்த்த படி ஒரு பெரிய சிட்டிங் ஹோல். மேல் தளத்தில் நான்கு அறைகள் விலாசமான யன்னல்களுடன் அடுக்கடுக்காய், அதற்கு எதிர்ப்பக்கத்தில் நீண்ட மாஸ்டர் பெட்ரூம். இதுதான் உமக்கும் எனக்கும் என்று ராஜன் தனது கையால் கலாவின் இடுப்பைக் கட்டிப்பிடித்துச் சொன்னான். கலா முழங்கையால் அவனை இடித்துத் தன்னை விடுவித்துக் கொண்டாள். இவற்றோடு நிலக்கீழ் அறை தடுப்புகள் இல்லாமல் விலாசமாக விரிந்து கிடந்தது. இந்தளவு பெரிய வீடு எமக்குத் தேவைதானா என்ற கேள்வி கலாவிற்கு எழுந்தாலும் ஆறு அங்கத்தவரைக் கொண்ட குடும்பம் வசதியாக வாழ இப்படியான வீடு தேவைதான் என்றும் பட்டது.<br />---------------<br />முந்தைய வீடு சின்னதாக இருக்கிறதென்று ஐந்து பெரிய அறைகளையும், பெரிய பின் தோட்டத்தையும் கொண்ட வீடு ஒன்றை மார்க்கத்தில் வாங்கிப் போயாகி விட்டது. மார்க்கத்தில் வாங்கும் போது தமிழர்கள் அதிகமில்லாத சுற்றத்;தில் வீடு வாங்கி விட்டதான பெருமை ராஜனுக்கு நிறையவே இருந்தது, காலப்போக்கில் மார்க்கம் தமிழர்களின் முக்கிய குடியேற்றமானதில் அவனுக்கு வருத்தம் அதிகம். அயலவர்கள் தமிழர்களாக இல்லாத சுற்றத்தில் வாழ்வது தனி மதிப்பைக் கொடுப்பதாக நினைக்கும் தமிழர்களி;ல் அவனும் ஒருவன். சுஜா பகிடியாக ஒருநாள் கேட்டாள் “ராஜன் என்ன ஊரிலையும் சைனீசுக்குப் பக்கத்திலையோ இருந்தனீங்கள்” என்று.<br />சுஜாவின் நக்கல் அவனுக்கு ஒருபோதும் விளங்குவதில்லை. முக்கியமாக சுஜாவை அவனுக்குப் பிடிப்பதில்லை. கலாவின் அக்கா மகள். கலாவால் வளர்க்கப்பட்டவள். தனது சொந்த வீடு போல் அடிக்கடி வந்து போவாள். அதைத் தடுப்பதற்கான அதிகாரம் ராஜனிடம் இல்லை.<br />புது வீடு. பார்த்துப் பார்த்து அலங்காரம் செய்தார்கள் ராஜனும், கலாவும். தாம் அலங்காரம் செய்தாலும் முழுநாளும் அந்த வீட்டில் வாழ்ந்து அனுபவிப்பது தனது பெற்றோரும், தனது சகோதரி வனஜாவுந்தான் என்று வீட்டுக்கு வரும் சொந்தங்களுக்குப் பெருமையாகத் தனது பெருந்தன்மையை அவன் அடிக்கடி சொல்லிக்காட்டுவான். மகன் வாங்கி விட்டிருந்த பெரிய வீட்டில் வெளியில் நடக்கப் போக முடியாத கடும் குளிர் காலங்களில் தாம் நன்றாகவே நடந்து திரிவதாக அப்பாவும் அம்மாவும் பெருமைப்படுவார்கள்.<br />“அப்பா ஒண்டுக்குப் போனால் சிந்திப் போட்டு வாறார், மணக்குது ஒருநாளைக்கு ரெண்டு தரமாவது வோஷ் ரூமைத் துடைச்சு விடுங்கோ” ராஜன் அம்மாவிடம் கேட்டுக் கொண்டான். வனஜா துடைப்பாள். விடிய ராஜனின் மகன் சந்தோஷை பள்ளிக் கூடத்திற்கு கொண்டு போய் விட்டு வருவாள். குளிர் இல்லாவிட்டால் பின்னேரம் அப்பா அவனைக் கூட்டிக்கொண்டு வருவார். குளிர் காலங்களில் வனஜா போய் வருவாள். ஒவ்வொருநாளும் ஐந்து அறைகளுக்கும் வைக்கூம் பிடிப்பது, அம்மாவுக்குச் சமையலுக்கு உதவி செய்வது, பின்னேரங்களில் அப்பா, அம்மாவோட சேர்ந்து தமிழ் சீரியல் பார்ப்பது என்று அவள் பொழுது போய் விடும். வனஜாவோடு எல்லோருமே மிகவும் அன்பாக இருந்தார்கள். “வேணுமெண்டா உங்கட வோஷ் ரூமைக் கழுவுங்கோ, எங்கட அறைக்குள்ள இருக்கிறதை நான் வேலையால வந்து கழுவுறன். ஒவ்வொருநாளும் வைகூம் பிடிக்கத் தேவையில்லை கிழமைக்கு ஒருக்காப் பிடிச்சாப் போதும்” கலா எத்தினையோ தரம் சொல்லிப் பார்த்துவிட்டாள் வனஜா கேட்பதாயில்லை. அவர்கள் வீடு வனஜாவின் கவனிப்பில் மிகவும் சுத்தமாக இருந்தது.<br /><br />--------------------<br />ஊரில் இருக்கும் போது விடுபட்டுப் போன அனைத்துச் சந்தோஷங்களையும் ஓடிப்பிடித்து அனுபவித்துக் கொண்டிருந்தார்கள் ராஜன் குடும்பத்;தினர். கோயில், கலியாணம், சாமத்தியச் சடங்கு, பிறந்தநாள் கொண்டாட்டம், தழிழ் திரைப்படம், ஊர்ச் சந்திப்பு அனைத்தையும் ஒன்று விடாமல் ஓடியோடி அனுபவித்தார்கள். வனஜா இழுபட்டாள். அனைத்திற்கும் குடும்பத்துடன் இழுபட்டாள். “ஏய் வனஜா, எவ்வளவு நாளாச்சுக் கண்டு, எங்க உம்மட அவர் வரேலையே?, எத்தினை பிள்ளைகள்? போகும் இடங்களில் கேள்விகள். வனஜா ஒற்றைச் சிரிப்போடு அவர்கள் பிள்ளைகளை இழுத்துக் கொஞ்சுவாள், சுகம் கேட்பாள். ராஜனும் அவன் பெற்றோரும் ஒன்றையும் புரிந்துகொண்டதாகக் காட்டிக்கொள்ளாமல் வாழப்பழகியிருந்தார்கள். கலாவைத் தவிர வனஜாவின் சங்கடத்தை யாரும் கண்டு கொண்டார்களா என்பது சந்தேகந்தான்.<br />கலா ராஜனைக் காதலித்துக் கலியாணம் செய்து கொண்டாளே தவிர, அவன் குடும்பம் கனடா வந்த பின்பு அவர்களின் வாழ்க்கை முறை கலாவிற்குப் புரியாத புதிராக இருந்தது. ராஜன் கூட மாறிவிட்டான். வனஜா பற்றிய அவர்களது அலட்சியம் கலாவை மிகவும் சித்திரவதை செய்தது. வனஜா அவளோடு அன்பாக இருந்தாலும், தான் ராஜனைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டது வனஜாவிற்கு ஒரு திருமணத்தை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு நிச்சயமாகத் தடையாக இருந்திருக்கும். வனஜா மனதுக்குள் தன்னை வெறுக்கக் கூடும் என்ற பயம் அவளை வனஜாவிடம் அதிகம் அன்பாக இருக்க வைத்தது.<br />--------------------------------------<br />ஒரு முழுமையான சேர்க்கைக்குப் பின்பு களைத்துப் போய் குறட்டை விடும் ராஜனை முழுங்கையால் இடித்து எழுப்பி ஒருநாள் கலா கேட்டாள்“வெட்கமாய் இல்லை உங்களுக்கு, ஒரு கிழமையில ரெண்டு மூண்டு தரம் தேவைப்படுது உங்களுக்கு, ஆனால் வனஜாக்கா பற்றி”“ப்ச் திரும்பித் தொடங்காதேம் எனக்குக் களைப்பாய் இருக்கு நாளைக்கு வேலையெல்லே”“வனஜான்ர வாழ்க்கைக்கு நீங்கள் ஒரு முடிவு காணமட்டும் நான் இனித் தனியத்தான் படுக்கப் போறன்” கலா போர்க் கொடி தூக்கினாள்.<br />கலங்கிப் போன ராஜன், வனஜாவைப் பட்டுச் சீலை உடுத்தி விதவிதமாகப் படம் எடுத்து, கல்யாண புரோக்கரிடம் கொடுத்தான். விவாகரத்துச் செய்தவர்கள், மனைவியை இழந்தவர்கள், ஏதோ ஒரு காரணத்திற்காகக் கலியாணமே செய்யாமல் இருந்தவர்கள். காலம் ஓடியதுதான் மிச்சம். அதன் பின்னர் அவளுக்கு வாய்த்தது அவ்வளவுதான் என்று ஒரேயடியாகக் கைவிட்டு விட்டார்கள்.<br />-----------------------------<br /><br />கலா கர்ப்பமாக இருந்த போது ஒருநாள் சாப்பாட்டு மேசையில் அவளுக்குப் பார்த்துப் பார்த்து சாப்பாடு போட்டாள் அம்மா. சுஜாவும் அன்று அங்கிருந்தாள். வனஜா உடம்பு சரியில்லை என்று சாப்பிடாமல் படுத்துவிட்டாள். ஒரு மருமகளை இப்பிடி அன்பாகப் பார்க்கும் மாமியை வேறு எங்கும் தான் பார்த்ததில்லை என்று அப்பா சொன்னார். “மருமகளைப் பார்க்கிற ஆர்வத்தில மகளைக் கை விட்டிட்டீங்கள்” என்று சாப்பிட்டவாறே சுஜா சொன்னாள். சுஜா அடக்கம் தெரியாதவள். பெரியவர்களிடம் எதைக் கதைக்க வேணும் என்ற பக்குவம் இல்லாதவள். இந்தக் காலத்துப் பிள்ளை. இவ்வளவு நாளும் அவள் சொன்னதற்கெல்லாம் அவர்கள் அர்த்தம் கண்டது இப்படித்தான். ஆனால் அவள் இன்று சொன்னது எல்லோரையும் ஒரேயடியாகத் தாக்கியதால் ஒரு பயங்கர மௌனம் அங்கே குடிகொண்டது. அப்பா அவள் அபிப்பிராயத்தால் தாக்கப்பட்டது போல் அவளைப் பார்த்தார். அம்மா அவசரமாக ராஜனுக்கு சோறு போட்டாள். கலா மௌனமாக ராஜனையும், அப்பாவையும் பார்த்தாள். அவள் பார்வை பதிலுக்காகக் காத்திருந்தது. ராஜனுடன் இது பற்றிக் கதைத்துச் சண்டை பிடித்துக் களைத்து விட்டாள். மாமா, மாமியிடம் இது பற்றிக்கதைக்கும் தைரியம் அவளுக்கு இருக்கவில்லை. அனேகமாக வனஜா அந்த வீட்டில் உலாவிக் கொண்டிருப்பது கலாவை அதைப் பற்றிய கதையைத் தொடக்குவதற்குத் தடுத்திருக்கலாம்.<br />அப்பா தொண்டையைச் செருமிக் கொண்டு கண்களை ஒடுக்கிக் குரூரமாக சுஜாவைப் பார்த்த படியே “அவளுக்கு ஒண்டும் பொருந்தி வரேல, அதுக்கு நாங்கள் என்ன செய்யிறது” என்றார். உவளுக்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லத் தேவையில்லை என்பது போல் ராஜன் கொடூரமாக சுஜாவைப் பார்த்தான். “நாங்கள் ஏறாத கோயிலில்லை” என்றாள் அம்மா. “அவளுக்குக் கொடுத்து வைச்சது அவ்வளவுதான், அந்த நேரம் எங்களிட்ட வசதியுமிருக்கேலை, ஒண்டும் சரியா வரேலை” என்றாள் மூக்கைச் சீறிய படியே.மௌனமாக இருந்த கலா “அது சரி மாமா இப்பதான் நல்ல வசதியா இருக்கிறமே” தொண்டையில் முள்ளுச் சிக்கிக் கொண்டது போல் அவள் வார்;த்தைகள் விக்கி விக்கி வந்தது. அப்பா ஏதோ பெரிய பகிடியைக் கேட்டு விட்டது போல் “இந்த வயசிலையோ” என்று விட்டுச் சிரித்தார். சுஜா கதிரையைத் தள்ளிக் கொண்டு எழுந்து போய் விட்டாள்.<br />----------<br />ஒருநாள் மாமி தனியே வீட்டில் இருக்கும் போது, கலா மீண்டும் வனஜா பற்றிய கதையைத் தொடங்கினாள். “ஏன் மாமி வனஜாவை இப்பிடியே வைச்சிருக்கப் போறீங்களே?”மாமியின் முகம் சினத்தால் சுருங்கியது. சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் எங்களை இடையிடையே குற்ற உணர்வைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றாள் என்று கலா மேல் கோவம் வந்தது. “ஏன் தனக்குக் கலியாணம் வேணும் எண்டு வனஜா உன்னை எங்களோட கதைக்கச் சொன்னவளே” வெடுக்கென்று கேட்டாள் மாமி.கலா திகைத்துப் போக, “எனக்கு முப்பத்தெட்டு வயசில சுகமில்லாமல் நிண்டிட்டுது, அவளுக்கு இப்ப நாப்பத்தைஞ்சு வயசாகுது, ஒழுங்கா வருகுதோ தெரியாது, இனிக் கலியாணம் கட்டி என்ன பிரியோசனம்? பிள்ளையும் தங்காது உடம்பும் வத்திப் போயிருக்கும் உணர்ச்சியும் இருக்காது” என்று விட்டு எழு முயன்ற மாமியைத் தடுத்து நின்ற கலா, “மாமி படுக்கிறதுக்கும், பிள்ளைப் பெறுறதுக்கும் மட்டுமே கலியாணம், அதுக்கு மேல எத்தினையோ இருக்கு, அதுக்கு வனஜாக்கு ஒரு நல்ல துணை தேவை” என்றாள். “அதுக்கு மேல என்ன இருக்கு? துணை வேணுமெண்டால் அதுக்குத்தான் நாங்கள் இருக்கிறமே, இதை விட நல்ல துணை எங்கையிருந்து வரப்போகுது” சொன்னபடியே கலாவைத் தள்ளாத குறையாக எழுந்து சென்றுவிட்டாள்.உடம்பை அலட்சியமாக அசைத்து அசைத்துச் செல்லும் மாமியின் பின்புறத்தைப் பார்த்த படியே நின்ற கலா, அறுபது வயது கடந்த பிறகும் படுக்கையறைக்குள் அவள் அடிக்கும் கூத்தை அருவருப்போடு நினைத்துப் பார்த்தாள்.<br />---------------------<br />ராஜனின் மாமா மகள் கவிதாவிற்குக் கலியாணம். சின்ன வயது. படிப்பு முடியு முன்பே நல்ல இடத்திலிருந்து கேட்டு வந்திருந்தார்கள். மாமா வசதியற்றவர். தொடர்மாடிக் கட்டிடத்தில் வசிப்பவர். எனவே ராஜனின் வீடு பொம்பிளை வீடாக மாறியது. சொந்தங்கள் அடிக்கடி வீட்டிற்கு வருவதால் வீடு கலியாணக் களை கட்டியது. கவிதாவின் அதிஸ்டம் முக்கிய தலைப்பாகப் பல முறை அலசப்பட்டது. கலியாணமான பெண்கள் தங்கள் காதல் கதைகள், தாங்கள் பொம்பிளைப் பார்க்கப்பட்ட நாள், எதிர்பார்ப்புக்கள், நிராகரிப்புக்கள் அங்கீகரிப்புக்கள் பிரவச வேதனை, உடல் மாற்றங்கள், மார்பகங்களில் பால் கட்டிக்கொண்டது, பால் வற்றிப் போனது என்று அங்கு தொட்டு இங்கு தொட்டுக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று கவிதாவின் அம்மா “வனஜா கெட்டிக்காறி இதுகளுக்க ஒண்டும் மாட்டுப்படாமல தப்பீட்டாள்” என்றாள். இன்னுமொருத்தி “உண்மைதான் அக்கா இந்த ஆம்பிளைகளோட இழுபடுகிறதெண்டாச் சும்மாவே எனக்கு காணும் எண்டு கிடக்குது” என்றாள் வெக்கத்தோடு.<br />“என்ன, மனுசன் இரவிரவாக் கரைச்சல் படுத்துதே” என்று விட்டுச் சிரித்தாள் இன்னுமொருத்தி<br />அதுவரை பொறுமையோடு இருந்த கலா “அக்கா இஞ்ச ஒருக்கா வாங்கோ” என்று வனஜாவை அந்த இடத்திலிருந்து அடுத்த அறைக்குக் கூட்டிக்கொண்டு போனாள். “எனக்குக் கொஞ்சச் சாமான்கள் வாங்க இருக்குது வாறீங்களே ஒருக்கா தமிழ் கடைக்குப் போயிட்டு வருவம்?”<br />வனஜாவிற்கு சிரிப்பாக வந்தது பெண்ணே எத்தனை வருடங்கள் எத்தனை கேள்விகள் அவமானங்கள்ஏமாற்றங்கள்எள்ளல்கள்உன்னால் எவ்வளவு காலம்தான் என்னைக் காக்க முடியும்?<br />வனஜா கலாவைப் பார்த்துப் புன்னகைத்தாள். கலா தாக்குண்டவளாய் மறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.<br />ஆண்கள் ஒரு கூட்டமாய் வேறு ஒரு மூலையில் தமக்குத் தெரிந்த ஒரே தலைப்பான இலங்கை அரசியல் பற்றி கதை அளந்து கொண்டிருந்தார்கள். வனஜா வழமை போல் ஒருவரின் உரையாடலிலும் கலந்து கொள்ளாமல் அவர்களுக்குத் தேனிர் கொடுப்பது, சாப்பிட ஏதாவது கொடுப்பது என்று சுழன்று கொண்டிருந்தாள். இலங்கை அரசியல் பற்றி ஆண்களோடு சேர்ந்து கொண்டு அவளால் கதைக்கத்தான் முடியுமா? இல்லா விட்டால் பெண்களோடு சேர்ந்து கொண்டு பெண் பார்க்கப்பட்ட நாள் பற்றியோ, பிள்ளைப்பேறு, போடப்பட்ட தையல் பற்றியோ அவளால் அலச முடியுமா? உரு அற்ற நிழல்போல் அவள் அலைந்து கொண்டிருந்தாள்.<br />-----------------------------<br />ஒருநாள் உடம்பு சரியில்லாமல் போனதால் கலா வேலைக்குப் போகவில்லை. உடம்பு சரியில்லையோ இல்லா விட்டால் மனம்தான் சரியில்லையோ என்ற சந்தேகம் வனஜாவிற்கு. ராஜன் வேலைக்குப் போகும் வரை அனுங்கிய படியே கட்டிலில் கிடந்தவள், ராஜன் வேலைக்குப் போனதும் சந்தோஷைப் பள்ளிக் கூடம் கொண்டு போய் விட்டுவிட்டு, அப்பாவையும், அம்மாவையும் மாமா வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தாள். வனஜா குசினிக்குள் போனபோது கலா அவளைப் பின்தொடர்ந்தாள். சமையல் தொடங்க இருந்த வனஜாவின் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு வந்து சோபாவில் இருக்கச் செய்து தானும் பக்கத்தில் இருந்தாள். வனஜா கேள்விக் குறியோடு அவளைப் பார்த்தாள். கலாவின் கண்கள் கலங்கியிருந்தது. தொண்டை அடைக்க அசட்டுச் சிரிப்பு சிரித்தவள் செருமிய படியே வனஜாவின் முகத்தைப் பார்த்தாள் “அக்கா உங்களோட கொஞ்சம் மனம் விட்டுக் கதைக் வேணும். அதுதான் நான் இண்டைக்கு வேலைக்கு லீவு போட்டனான்”<br />“என்ன கலா ஏதும் பிரச்சனையே”<br />“வனஜா என்ன இது எவ்வளவு காலத்துக்கு இப்பிடியே”<br />வனஜா குழம்பிப் போனாள். நெருப்புச் சுட்டு விட்டது போல் திடுக்கிட்டது அவள் உடம்பு. சில விஷயங்கள் பற்றிக் கதைக்கக் கூடாது. ஏன் அது நடந்தது என்று ஒருவருக்குமே தெரியாது. அவள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று எல்லோரும் முடிவெடுத்துவிட்டார்கள். இனிக் கதைப்பதற்கு என்ன இருக்கிறது.வனஜா மௌனமானாள். “அக்கா உங்களப் பற்றி இஞ்ச ஒருத்தருக்கும் அக்கறையில்லை. எல்லாரும் சுயநலமா இயங்கிக் கொண்டிருக்கீனம், நீங்களும் ஒண்டிலையும் அக்கறையில்லாதமாதிரி இயங்கிக் கொண்டிருக்கிறீங்கள், நான் ராஜனோடை சண்டை பிடிச்சுப் பாத்திட்டன். வயசு போட்டுதெண்டு சாட்டுச் சொல்லுறார். அக்கா நாற்பத்தைந்து வயதில கலியாணம் கட்டுறது ஒண்டும் பிழையில்லை. நீங்களா யாரையாவது தேடிக்கொண்டால் தவிர இவேல் ஒண்டும் செய்யப் போறேலை, நீங்கள் ஏன் வீட்டுக்குள்ளேயே அடஞ்சு கிடக்கிறீங்கள், வேலைக்குப் போங்கோ, இல்லாட்டி ஏதாவது படிக்கப் போங்கோ அப்பதான் நீங்கள் ஆரையாவது சந்திக்கலாம். இப்பிடியே இருந்தீங்களெண்டா இந்த வீட்டில இருந்து சமைச்சு, அப்பான்ர மூத்திரம் துடைக்கிறதோட உங்கட வாழ்க்கை முடிஞ்சிடும்<br />வனஜா மௌனமாக இருந்தாள். கலா எவ்வளவு முயன்றும் அவளிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. காதலிப்பது தறவென்ற மனநிலையில் ஊறி வளர்ந்தவள் அவள். இளம் வயதில் அவளை ஒருவரும் பெண் கேட்டு வரவில்லை. சீதணமாய் அள்ளிக் கொடுத்துக் கட்டி வைக்கும் அளவிற்கு அவர்களிடம் பணம் இருக்கவில்லை. இருந்ததையெல்லாம் கொடுத்து ராஜனை கனடா அனுப்பி வைத்தார்கள் அவன் எதையாவது செய்வான் என்ற நம்பிக்கையில். வந்த கடன் கொடுத்து முடித்த போது ராஜனுக்கு முப்பது வயதாகி விட்டிருந்தது. கலாவோடு காதல் வேறு. வீட்டிற்குக் சொல்லாமல் கொள்ளாமல் கலியாணம் செய்து கொண்டான். குற்ற உணர்வு. வசதி வந்ததும் குடும்பத்தை கனடாவிற்குக் கொண்டு வந்து விட்டான். வனஜா கனடா வந்து இறங்கிய போது அவளுக்கு நாற்பது வயது. இனி அவளுக்கெதுக்குக் கலியாணம் என்று தாமே முடிவெடுத்து வாழ்ந்து வருகின்றார்கள். “வேண்டாம் கலா நான் இப்ப சந்தோஷமாத்தான் இருக்கிறன், நீங்கள் கவலைப் படாதேங்கோ” சொல்லி விட்டு குசினிக்குள் எழுந்து போய் விட்டாள்.<br />கலா அவளைத் தொடர்ந்து போனாள். “ஏன் நீங்கள் இப்பிடித்தனியா இருக்க வேணும், நான் யாரைவாவது பாக்கிறன் நீங்கள் ஓம் எண்டு மட்டும் சொல்லுங்கோ”<br />“ நான் எங்கை தனியா இருக்கிறன்” சினந்தவள் “கலா ப்ளீஸ் நான் உங்களோட இருக்கிறது பிடிக்கேலை எண்டாச் சொல்லு நான் எங்கையாவது போறன்”.<br />“போ போ வனஜா அப்பிடிப் போனாலாவது நீ உன்ர விருப்பத்துக்கு இருப்பாய்..நீ யாரையாவது சந்திப்பாய்.. இப்பிடியிருந்தாயெண்டா இதுக்குள்ளையே உன்ர வாழ்க்கை முடிஞ்சிடும்”<br />வனஜா கலாவை முறைத்துப் பார்த்தாள் பின்னர் தன் அறைக்குள் போய் கதவைப் பூட்டிக்கொண்டாள்.<br />அதன் பிறகு கலா வனஜாவிடம் எதுவும் கேட்கவில்லை.<br />கனடாவில் வருடங்கள் பாய்ந்து பாய்ந்து கடந்து கொண்டிருந்தன. சுஜா ஒரு வெள்ளைக்காறனைக் காதலித்து கலியாணம் செய்து கொண்டாள். தனக்கு இது முதலியேலே தெரியும் என்று நக்கலாகச் சிரித்தான் ராஜன். அவனது பகிடி கலாவிற்கு விளங்கவில்லை. பெண்கள் தாமாகவே துணையைத் தேடிக்கொள்வது தவறு என்பதில் இன்றும் உறுதியாக இருந்தான் ராஜன். கலா குடும்பம் பற்றி எப்போதுமே ஒரு இளக்காரம் அவனுக்கு. கலியாணம் செய்து கொண்டதும் முதலில் கணவனோடு கலாவைப் பார்க்க வந்த சுஜா, 5வனஜாவின் கையால் நூடில் செய்யச் சொல்லிச் சாப்பிட்டு விட்;டுப் போனாள். போகும் போது “கொஞ்சமாவது சுயநலமாக இருக்கப் பழகுங்கோ வனஜாக்கா” என்றாள். அதன் பிறகு சுஜா கலா வீட்டிற்கு வருவதை நிறுத்திக் கொண்டாள். ராஜனையும் அவனது பெற்றோரையும் தன்னால் இனிமேலும் சகித்துக் கொள்ள முடியவில்லை என்று அவள் கலாவிற்கு தொலைபேசியில் அழைத்துக் கூறியிருந்தாள். -------------<br />ராஜனின் சொந்தம் ஒன்று லண்டனிலிருந்து கனடா குடிபெயர்ந்து ராஜன் வீட்டில் தங்கியது. ராஜனின் அப்பா அம்மாவின் வயதில் ஒரு தம்பதியும், ராஜனிலும் இரண்டு வயது குறைவில் சித்தார்தனும், இருபது வயதில் கௌரியும் வந்திருந்தார்கள். வந்த உடனேயே கௌரி வனஜாவுடன் ஒட்டிக்கொண்டு விட்டாள். அவளின் நகைச்சுவையான கதை வனஜாவிற்குக் கலகலப்பாக இருந்தது. சித்தார்த்தன் எப்போதும் சிகரெட்டும் கையுமாக, குழம்பிய தலையுடன் இருந்தான். அவன் வாயிலிருந்து எப்போதுமே தத்துவங்கள் கொட்டியபடியிருக்கும். அவன் கலியாணம் பற்றிக் கேட்டால் பெரிதாக ஒரு லெக்ஷர் அடிப்பான். “கட்டுற பொம்பிளை பெரிய வீடு, கார் வேணுமெண்டு அதிகாரம் பண்ணினால் நான் இரவு பகலா வேலைதான் செய்ய வேணும், அது எனக்குச் சரி வராது, பிறகு டிவோசிலதான் போய் முடியும், அதோட இப்பிடியான ஒரு உலகத்துக்கு இன்னுமொரு உயிரைக் கொண்டு வந்து சித்திரைவதைப் படுத்த நான் விரும்பேலை”“ஏன் சித்தாத்தன் பிள்ளை வேண்டாம் எண்டு சொல்லுற ஒரு பொம்பிளையப் பாத்துக் கட்டலாம் தானே” கலா கேட்டாள்.<br />“அதென்ன பிள்ளை வேண்டாம் எண்டிற பொம்பிள, அப்பிடியும் ஒருத்தி இருப்பாளோ”அம்மா அதிசயித்தாள்.<br />“அண்ணா படு கள்ளன். ஊருக்கொரு கேர்ள் ப்ரெண்டா வைச்சுக் கொண்டு தத்துவம் கதைக்கிறார்” கௌரி கலாவின் காதுக்குள் குசுகுசுத்தாள்.<br />“கனடா வந்தாச்சு இனி நல்ல வடிவான பெட்டையா ஒண்டைப்; பாத்துக் கட்டி வைப்பம்” ராஜன் சொல்ல, கலா முகத்தைச் சுழித்துக் கொண்டாள்.<br />“ஐயோ என்னை விட்டிடுங்கோ, முதல்ல வீடு எடுக்கிற அலுவலைப் பாப்பம், பிறகு நான் ட்ரவல் பண்ணிறதா இருக்கிறன், ரெண்டு மூண்டு மாசம் இஞ்ச நிக்க மாட்டன், போய் வந்துதான் வேலை ஏதாவது தேட வேணும்” என்றான் யன்னல் பக்கத்தில் போய் நின்று சிகரெட்டை ஒன்றைப் பற்ற வைத்த படியே.<br />வனஜா எல்லோருக்கும் தேத்தண்ணி கொடுத்தாள். சாப்பாடு விதம் விதமாய்ச் சமைத்தாள். சனிக் கிழமைகளில் எல்லோருமான டொரொன்றோவைச் சுற்றிப் பார்க்கப் போனார்கள். சித்தார்தன் வனஜா சமையல் பற்றிப் புகழும் போது வெட்கப்பட்டாள். சித்தார்த்தன் கவிதை சொன்னான். கலியாணம் செயற்கையான பரிசோதனைக் கூடம் என்றான். கடவுள் இல்லை என்று வாதாடினான். சுஜாவின் இடத்திற்குப் புதிதாக ஒருத்தர் வந்துவிட்டார் என்று ராஜன் கலாவிடம் படுக்கையில் சொன்னான். வீடு கலகலப்பாக இருந்தது. வனஜாவில் சிறிது மாற்றம் ஏற்பட்டதை ஒருவரும் கவனிக்கவில்லை. சாப்பாட்டுப் பட்டியலில் சித்தார்தனுக்குப் பிடித்த சாப்பாடு அதிகம் காணப்பட்டது. பகல் நேரத்தில் சிகரெட்டை ஊதி;ய படியே சித்தார்தன் வனஜாவிற்கு இறைச்சி வெட்டிக்கொடுத்தான். சிகரெட் மணம் வனஜாவைக் கிறங்கச் செய்தது. கௌரி அண்ணனின் காதல் லீலைகள் பற்றி, மரக்கறி வெட்டிய படியே வனஜாவிற்கு நகைச்சுவையோடு சொல்ல வனஜா வாய் விட்டுச் சிரித்தாள். வனஜா உணர்வுகள் அற்றவள். ஒட்டு மொத்தமாகக் குடும்பமே முடிவெடுத்திருந்ததால் சந்தேகத்திற்கு அங்கே இடமிருக்கவில்லை. கலா இருக்கும் போது மட்டும் வனஜா சிரிப்பதைக் குறைத்துக் கொண்டாள். கலா கெட்டிக்காறி தனது தடுமாற்றத்தை அவளால் உடனேயே அடையாளம் காண முடியும். கலாவை முதல் முதலாக இடைஞ்சலாக உணர்ந்தாள் வனஜா. எனக்குக் கிடைத்திருக்கும் அற்ப சுகம் இது. இதைக் கூட முழுமையாக அனுபவிக்க முடியாமல் கலா குறுக்கே நிற்கின்றாள் என்று வனஜாவிற்குத் தோன்றியது.<br />----------------<br />கௌரியை தமிழ் உடுப்புக் கடைக்குக் கூட்டிக்கொண்டு போகும் போது சித்தார்தனும் வந்தான். கௌரிக்கு ஒரு சீலை வனஜாவிற்கு ஒரு சீலை வாங்கிக் கொடுத்தான். சாப்பிடப் போனார்கள். நடந்து இடம் பார்க்கப் போனார்கள். எல்லாமே ஒரு கனவு போலிருந்தது வனஜாவிற்கு. ராஜனிலும் விட இரண்டு வயது குறைவு சித்தார்தனுக்கு. அவன் மேல் காதலை வளர்த்துக் கொள்வது கேவலமாக அவளுக்குப் பட்டது. இருந்தும் மனம் அவள் கட்டளையை கடந்து காததூரம் போய் விட்டிருந்தது. என்ன கலியாணமா செய்யப் போகிறேன். எங்களுக்குள் ஒரு உறவு வளர்கிறது. அவனுக்கும் என்னை நிச்சயம் பிடித்துத்தான் இருக்கின்றது. ஒருநாள் நான் அறிந்திரா சுகத்தை அது எனக்குத் தரப்போகிறது. அந்த ஒருநாள் அதிக தூரத்தில் இல்லை. அந்த ஒருநாள் போதும் நான் என் வாழ்க்கையின் மீதியை சந்தோஷமாகக் கழிப்பதற்கு. சித்தார்தனி;ன் கண்களில் அவள் காதலோடு கலந்த காமத்தைக் கண்டாள். சரி தவறு என்பதற்கு மேலால் அவள் உணர்வுகள் வளர்ந்து விட்டிருந்தன. பல வருடங்களுக்குப் பின் தன் அழகு மேல் முதல் முதலில் அவள் அக்கறை கொள்ளத் தொடங்கினாள். கர்ப்பம் கொள்ளாமல் இறுகிப் போய் இருக்கும் வயிறு. சற்று உயர்ந்து தொங்கும் பால் சுரக்காத முலைகள், தொடைகளின் நடுவே நரைத்த ஈரமற்ற உதிரும் சுருள் மயிர். மாதவிடாய் நின்று விட்டது. வனஜா சுருங்கிக் கொண்டாள். இந்த சதைப் பிண்டத்தை ஒருவன் விரும்புவானா? விரும்புவான். விரும்புகின்றான்.<br />அலுமாரியில் அடியிலிருந்த புதிய உடைகள் வெளியே வந்தன. நரையை மறைத்தாள். சிரித்தாள். சிரித்தாள். அவன் எங்கு கேட்டாலும் செல்வதற்குத் தன்னைத் தயாராக்கிக் கொண்டிருந்தாள். யாருக்குத் தெரியப் போகிறது. தெரிந்தால்தான் என்ன? யாருக்கு என்மேல் என்ன அக்கறை? முதல் முதலாய்த் தன் குடும்பத்தின் மேல் அவளுக்கு வெறுப்பு வந்தது. சித்தார்த்தனைத் தவிர்த்து அனைவரையும் வெறுத்தாள். எப்பிடி முடிந்தது என் குடும்பத்தால். சீதணம் இல்லை. ஒருவரும் கேட்டும் வரவில்லை. எனவே இப்பிடியே பேசாமல் இருக்க வேண்டும். வேலைக்குப் போகட்டும், ஏதாவது படிக்கட்டும் என்று கலா சொன்னபோது ஒரு பதிலில் ராஜன் அவளை அடக்கி விட்டான். “அக்காவை உயிருள்ள வரை வைச்சு நான் பாப்பன் ஆரும் அதில தலையிட வேண்டாம்”. வெளியே விட்டால் நான் யாரோடாவது படுத்திட்டு வந்து விடுவேன் என்ற பயம் அவனுக்கு.உன்னால சாப்பாடு போட முடியும், உடுப்பு வாங்கித் தர முடியும். அதுக்குக்கு மேலால் எனக்கொரு தேவை இருக்கின்றது என்பது எப்பிடி உனக்குத் தெரியாமல் போனது ராஜன்? இரவில் உன் அறையில் கட்டிலின்; சத்தம் என்னை ஒன்றும் செய்யாது என்று எப்பிடி நம்பினாய்? அப்பா அம்மா கூட இப்பவும். ச்சீ எதையெல்லாம் என் மனசு நினைக்கிறது. எதுக்காக சித்தாத்தன் இங்க வந்தான்.<br />-----------<br />அன்று பள்ளிக் கூட விஷயமாக கௌரி வெளியே போயிருந்தாள். ராஜனுக்கும் கலாவுக்கும் வேலை. அப்பா அம்மாவோடு சித்தார்தனின் அப்பா அம்மாவையும் யாரோ சொந்தக்காறரைப் பார்க்க வென்று சித்தார்த்தன் கூட்டிகொண்டு போயிருந்தான். வனஜா வீட்டி வேலைகளைச் செய்து விட்டு ரிவி பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென்று கதவு திறக்கும் சத்தம் கேட்டது. சித்தார்தன். கையில் ஒரு சாப்பாட்டுப் பொட்டலம். சிரித்த படியே “சமைக்காதேங்கோ நான் நல்ல சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்திருக்கிறன்” என்றான்.<br />வனஜாவின் மனம் கனமானது. “நீங்கள் அங்க சாப்பிடப் போறீங்கள் எண்டு” வனஜா தொண்டை வறள உளறினாள்.<br />“அப்பிடியெண்டுதான் போனனான், அங்க அப்பா அம்மான்ர வயசில ரெண்டு பேர் இருக்கீனம், அங்க இருந்து நான் என்ன செய்யிறது. நான் மெல்லமா வெளிக்கிட்டு வந்திட்டன். சரி போறனான் ஏதாவது ஸ்பெஷலா வனஜாக்கு சாப்;பிட வாங்கிக் கொண்டு போவம் எண்டு நல்ல சைனீஸ் சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்திருக்கிறன்”. வனஜாவின் கண்களை நேரடியாகப் பார்த்து விட்டு நெடுகலும் நீங்கள்தானே சமைக்கிறீங்கள்” என்றான்.<br />வனஜாவின் கால்கள் நடுங்கத் தொடங்கியது. இதுதான் நான் எதிர்பார்த்த அந்த நாள். நெஞ்சம் கனத்து உடல் படபடத்தது. வருத்தத்திற்குக் கூட ஆண் மருத்துவரை அணுகாத வனஜாவின் ஐம்பது வயது உடம்பை இன்று இவன் தொடப்போகின்றான். நான் என்ன செய்ய வேண்டும். இந்த முத்திய உடம்பு அவனுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தால்? அவள் உடல் எதிர்பார்ப்போடு தன்னைத் தளர்த்திக் கொண்டது. மனம் அலறியது. “என்னால் இனிமேலும் பொறுக்க முடியாது, என்னை அணைத்து விடு சித்தார்த்தா” கால்கள் தளர “ரீ போடட்டே என்றாள்”<br />“இ;ல்லைச் சாப்பிடுவமே நேரமாகுது” என்றான்<br />அவன் சொன்னதின் அர்த்தம் விளங்காமல் அவனைப் பார்த்தாள் வனஜா. சித்தார்த்தன் குசினிக்குள் போய் இரண்டு பீங்கானை எடுத்து வந்தான். மேசை மேல் வைத்து சாப்பாட்டைப் பிரித்தான். கிளாசில் தண்ணீர் வைத்தான். வனஜாவைச் சாப்பிடச் சொன்னான். கதிரையில் இருந்து சாப்பிடத் தொடங்கினான் சித்தார்த்தன்.<br />மௌனமாகச் சாப்பி;ட்டாள் வனஜா. சாப்பாடு முடிந்து தண்ணீர் குடித்து இனி என்ன என்பது போல் சித்தார்தனை அவள் பார்த்தாள். அவள் உணர்வுகள் வடிந்து போயிருந்தன. நெஞ்சின் கொதிப்பு குளிர்காணத் தொடங்கியது.<br />ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்த படியே சித்தார்த்தன் சொன்னான் “நான் ஒரு கேர்ளைச் சந்திக்கப் போக வேணும், அதுதான் அம்மா அப்பாக்கும் சொல்லாமல் அவசரமா வெளிக்கிட்டு வந்தனான். வரேக்க உங்கட நினைப்பு வந்தது. தனிய இருப்பீங்கள். சமைச்சீங்களோ தெரியாது அதுதான். சாப்பாடு நல்லா இருந்தது என்ன? கேட்டு விட்டுத் தனக்கு நேரமாகி விட்டதென்று அவசரமாக வெளியேறினான். கதவைப் பூட்டும் போது “இரவைக்கு அனேகமா வரமாட்டன்” என்றான்.<br />பிரமாண்டமான அந்த வீட்டில் தனியே விடப்பட்ட வனஜா, தனது ஐம்பதாவது வயதில் வாய் விட்டழுததை அந்த வீட்டின் சுவர்கள் கூடக் கேட்காதது போல் முகம் திருப்பிக் கொண்டன.<br />இனிப் பின்நேரம் ஆகும், வனஜா வழமை போல் சதீஸை பாடசாலையில் இருந்து அழைத்து வருவாள்.<br />---------------------------------------<br /><span style="font-size:85%;">நன்றி உயிர்நிழல்- January-July/2009<br /></span>கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9540420.post-58093498467670863332009-09-06T09:50:00.000-07:002009-09-09T09:08:17.956-07:00A Good Indian Wife<p style="MIN-HEIGHT: 12px; MARGIN: 0px; FONT: 12px Bamini"><span style="LETTER-SPACING: 0px"></span><br /></p><p style="MARGIN: 0px; FONT: 12px Arial"><span style="LETTER-SPACING: 0px">A Good Indian Wife - by Anne Cherain</span></p><p style="MIN-HEIGHT: 12px; MARGIN: 0px; FONT: 11px Arial"><span style="LETTER-SPACING: 0px"></span><br /></p><p style="MARGIN: 0px; FONT: 11px Georgia; TEXT-ALIGN: centercolor:#003264;" ><span style="LETTER-SPACING: 0px">'Tis my opinion every man cheats in his own way, and he is only honest who is not discovered ~</span></p><p style="MARGIN: 0px; FONT: 9px Arial; TEXT-ALIGN: rightcolor:#000099;" ><span style="LETTER-SPACING: 1px; TEXT-DECORATION: underline"><a href="http://www.finestquotes.com/author_quotes-author-Susannah%20Centlivre-page-0.htm">Susannah Centlivre</a></span></p><br /><span class="Apple-style-span" style="font-family:aAvarangal;font-size:14;"></span><span class="Apple-style-span" style="font-family:aAvarangal;font-size:85%;">அண்மையில் நான் வாசித்த பல இந்தியப் பெண் எழுத்தாளர்களின் ஆங்கில நாவல்கள், பேச்சுத் திருமணத்தைத் தளமாக் கொண்டு அமைந்திருந்தன. இந்தியப் பெண் எழுத்தாளர்களின் நாவல்களைத் தெரியும் போது அவை தற்செயலாகவே இக்கருப்பொருளுக்குள் சுழன்று கொண்டிருப்பதைக் காணக்கூடியதாகவிருக்கின்றது. போராட்டத்தைத் தவிர்த்து ஈழப்போராளிகளின் படைப்புக்களை அண்மைக்காலங்களில் எப்படிக் காண இயலாதோ அதே போல், அண்மைக் காலங்களில் நான் தெரிவு செய்த இந்தியப் பெண் எழுத்தாளர்களின் படைப்பும், ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து பேச்சுத் திருமணத்தை எதிர்கொள்ளும் நடுத்தர வர்க்கப் பெண்களின் சவால்களை விடுத்து அமைந்திருக்கவில்லை. இன்றும் உங்கள் நாட்டில் பேச்சுத் திருமணங்கள் இடம்பெறுகின்றனவா எனக் கண்களை விழித்து கேட்டாள் எனது பிரேசில் நண்பி. எமது நாட்டில் மட்டுமல்ல கனடாவில் வாழும் எமது சமூகத்திலும் இது தொடர்கின்றது என்பதை அவள் நம்பத்தயாராகவில்லை. மாதம் ஒரு நாவலைத் தெரிவு செய்து வாசித்துக் கலந்துரையாடுவதென்று சில நண்பிகள் சேர்ந்து முடிவெடுத்துத் தெரிந்த இந்த மாதப்புனைவு ஆன் செரெனின் “<span class="Apple-style-span" style="WHITE-SPACE: pre;font-family:'Lucida Grande';" >A Good Indian Wife </span>” இந்திய நண்பியின் தெரிவு இது. அடுத்த மாத எனது தெரிவில் One & Only ஷோபாசக்தியின் “கொரில்லா” வை அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கின்றேன். </span><br /><span class="Apple-style-span" style="font-family:aAvarangal;font-size:85%;"></span><br /><span class="Apple-style-span" style="font-family:aAvarangal;font-size:85%;">வாசிப்பும் பகிர்வும் - “<span class="Apple-style-span" style="WHITE-SPACE: pre;font-family:'Lucida Grande';" >A Good Indian Wife </span>” சுதந்திரத்தை மட்டுமே சுவாசிக்க விரும்பி குடும்ப வாழ்வை நிராகரிக்கும் சுனில், பெயரைச் சுருக்கி நீல் ஆக்கிய இந்திய, அமெரிக்கவாச (ஸான் பிரான்சிஸ்கோ) சிறந்த மருத்துவர். ஸ்போட்ஸ் கார், அன்ரிக் தளபாடங்கள், சொந்த ஜெட் கொண்ட அழகான சுகபோகி. அவன் வேலைசெய்யும் மருத்துவமனை வரவேற்பாளர்களில் ஒருத்தியான கரோலினை அவள் அழகிற்காகவும், குறும்புக்காகவும் மாய்ந்து காதலிக்கும் நீல், தனது கல்வித் தகைமைக்கு கரோலின் நிரகற்றவள் என்பதனால் திருமணம் என்ற பேச்சுக்கே இடம்கொடுக்காமல் கரோலினுடனான தனது உறவை மறைத்தே வைத்திருக்கின்றான். இருந்தும் இவ்வுறவு அங்குமிங்குமாகக் கசிந்ததை அவனால் தடுக்க முடியவில்லை. புகழ்பெற்ற அழகான, பணக்காற நீலை இவைகளுக்காக மட்டுமே காதலிக்கும் கரோலினின் முழு எண்ணமும் அவனைக் கணவனாக்கிக் கொள்வதே. இறுக்கமான கலாச்சாரத்தைக் கொண்ட இந்தியக் குடும்பத்தில் பிறந்த சுனிலுக்கு குடும்பகௌரவம், பெற்றோர்கள், சமூகம் என்பதும் முக்கியமாகவே இருக்கின்றன. கே.பாலச்சந்தரின் “47 நாட்கள்” திரைப்படத்தை நினைவிற்குக் கொண்டு வரும் இந்நாவல், கடந்த பல வருடங்களாக இந்திய சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளின் ஒரு துளியை எடுத்துச் சொல்கின்றது. மேற்குலக நாடுகளுக்கு குடிபுகுந்து மாற்றுக்கலாச்சாரத்திற்குள் தம்மை தொலைத்து இரு கலாச்சாரத்தின் தாக்கங்களோடு ஒரு காலை அங்கும், ஒரு காலை இங்குமாக வைத்து வதைபடுபர் பலர், குறிப்பாக ஆண்கள், தமது சந்தோஷத்தைப் பார்ப்பதா குடும்பகௌவத்தைப் பார்ப்பதா என்று தடுமாறிய நிலையில் பெற்றோரின் விருப்பை எதிர்க்க முடியாது அவர்களின் விருப்பிற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதும், பின்னர் அவளை நிர்க்கதியாக இந்தியாவில் விட்டு விட்டுப் பறந்து வந்து தமது காதலியுடனான குதூகல வாழ்வைத் தொடருவதும், மேற்குலக நாடுகளில் தொடரும் ஒன்று. கனடாவைத் தளமாகக் கொண்டு அலி கசீமீ எனும் இயக்குனர் ‘Run away Groom’ ; எனும் விவரணப்படத்தை எடுத்திருக்கின்றார். பல பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நேர்காணலை உள்ளடக்கிய இப்படைப்பு Hot Doc விழாவில் திரையிடப்பட்டு சிறந்த விவரணத்திரைப்படத்திற்கான விருதையும் பெற்றிருக்கின்றது. </span><br /><span class="Apple-style-span" style="font-family:aAvarangal;font-size:85%;"></span><br /><span class="Apple-style-span" style="font-family:aAvarangal;font-size:85%;">“<span class="Apple-style-span" style="WHITE-SPACE: pre;font-family:'Lucida Grande';" >A Good Indian Wife" </span>புனைவு ஏற்கனவே அறியப்பட்ட கருப்பொருளைத் தளமாகக் கொண்டாலும், புனைவாளரின் கதை சொல்லும் திறமை நுணுக்கம் என்பன வாசகர்களை பாத்திரங்களோடு ஊடுருவிச் செல்ல வைக்கின்றது. ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தைச் செய்யலாம். சுனிலின் தாய் ஒரு பொய்யை மட்டும் சொல்லி சுனிலை உடனடியாக இந்தியாவிற்கு அழைத்து விடுகின்றாள். சுனிலை சிறுவயதிலிருந்து வளர்த்த தாத்தா மரணப்படுக்கையில் இருக்கின்றார் என்ற செய்தி சுனிலை உடனேயே இந்தியாவிற்குப் பறக்க வைக்கின்றது. உயிருடன் தாத்தாவை ஒருமுறையாகவது பார்த்து விடவேண்டும் என்ற தவிப்போடு இந்தியாவில் காலடி எடுத்த வைத்த சுனிலை சிரித்த முகத்தோடு வரவேற்கின்றார் தாத்தா. குடும்பத்தின் அன்பு வலையிலிருந்து அவனால் அறுத்துக் கொண்டு ஓடிவிட முடியவில்லை. குழம்பிப் போன சுனில் தாத்தாவின் கையைப் பிடித்துத் தன்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றுமாறு கேட்கின்றான். தாயார் சேர்த்து வைத்திருக்கும் பெண்கள் பட்டியலிலிருந்து சுனில் இலகுவில் நிராகரிப்பதற்கான அனைத்துத் தகைமைகளையும் கொண்ட லைலாவை பெற்றோரைச் சமாதானப் படுத்துவதற்காக பெண்பார்க்கச் சம்மதிக்க வைக்கின்றார் தாத்தா. ஒரேயொரு பெண்ணை மட்டும் பார்ப்பேன் பிடிக்காவிட்டால் உடனேயே பறந்து போய்விடுவேன் என்ற நிபந்தனையோடு லைலாவைப் பெண்பாரக்கச் செல்கின்றான். விளைவு அவளைத் திருமணம் செய்து, அவனோடேயே ஸான் பிரான்ஸிஸ்கோவிற்கு அழைத்து வருவதில் வந்து முடிகின்றது. லைலா படித்த, அழகிய நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த முதிர்கன்னி. அதிஸ்டவசமாகத் தனக்குக் கிடைத்த வாழ்க்கையில் சந்தோஷத்தில் மிதந்தவளுக்கு புதிய நாடும், புதிய கணவனும் ஏமாற்றத்தையே கொடுக்கின்றன. வீட்டில் மனைவி, வெளியில் காதலி, இரட்டை வாழ்வு வாழும் சுனிலில் நடத்தை லைலாவிற்குச் சந்தேகத்தைக் கொடுக்க அனைத்தையும் முறித்து கொள்ள நினைக்கும் அவளை பெற்றோர், குடும்பகௌரவம் என்பன தடுத்து நிறுத்துகின்றன. லைலாவை அமெரிக்க வாழ்க்கைக்குப் பழக்கப்படுத்தி விட்டு மெல்ல மெல்ல அவளிடமிருந்து விலகி, கரோலினிடமே அடைக்கலம் புகநினைக்கும் சுனிலை தனது முற்போக்கு, இலக்கிய சிந்தனைகளால் திகைக்க வைக்கின்றாள் லைலா. மருத்துவத்துறையில் மட்டும் புகழ்பெற்றுத் திமிருடன் அலைந்த அவனுக்கு உலகின் இன்னொரு பக்கத்தின் அறிமுகம் லைலாவால் கிடைக்கின்றது. இலக்கிய ஆசிரியையாகப் பணியாற்றிய அனுபவம் லைலாவை சுனிலின் நண்பர்களுடன் சரளமாகவும், அறிவுபூர்வமாகவும் உரையாடி இலகுவில் நெருக்கதை உண்டாக்க வைக்கின்றது. கரோலினிடமிருந்த மோகம் சிறிது சிறிதாகக் கரைந்து போக லைலாவுடன் நெருங்கி வருகின்றான் சுனில். லைலைவை நன்கு அறிந்த அவனது தாத்தா திட்டமிட்டே இத்திருமணத்தைச் செய்துவைத்தார் என்ற உண்மையை அவர் மரணப்படுக்கையில் சுனிலுக்குக் கூறுகின்றார். சுனில் புன்னகைக்கின்றான். புனைவு இத்தோடு நிறைவு பெற்றாலும், அடிக்குறிப்பாக புனைவாளர் சிறிய தத்துவம் ஒன்றையும் விட்டுச் சென்றிருக்கி;ன்றார்.</span><br /><span class="Apple-style-span" style="font-family:aAvarangal;"><span style="font-size:85%;"><span class="Apple-style-span" style="font-family:Arial;">“Once a liar always a liar</span>” என்று கோடிட்டு, குடும்பவாழ்வை விரும்பாத நீல் மீண்டும் தனது சுதந்திரமான குதூகல வாழ்விற்கு ஏங்கி கரோலினுடன் தனது தொடர்வை நீடிக்கலாம். கரோலின் சம்மதிக்காவிடத்தில் அவன் இன்னுனொரு கரோலினை நாடிச்செல்வது தவிர்க்க முடியாதது.</span></span>கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-9540420.post-30655310668679256752009-07-30T06:03:00.000-07:002009-07-30T07:51:18.201-07:0040 +தான் அன்றைக்கு ஆஷாவோட கதைக்க வேண்டியதை எல்லாம் திரும்பத் திரும்பச் சொல்லிப்பாத்துக் கொண்டான் சந்திரகாந்தன். பல தடவைகள் சொல்லிப் பார்த்துக் கொண்டதால் முதல் தடவை சொன்னது மறந்து போனதோடு அதுதான் அழகான வார்த்தைளோடு அமைந்திருந்தது என்ற ஏக்கமும் அவனுக்குள் வரத் தொடங்கியது. மறந்ததை நினைவுபடுத்த முனைய உள்ளதும் மறந்து போய்..சரி ஒண்டும் வேண்டாம் முதல்ல இருந்து சொல்லிப்பாப்பம், திரும்ப ஒவ்வொரு வார்த்தையாக கோர்க்கத் தொடங்கினான். அவன் வாய் வார்த்தைகளைக் கோர்க்க மனம் ஆஷாவோடு கட்டில் வரை போய் நிற்றது. கதவை டொக் டொக் என்று யாரோ ஊன்றித் தட்டினார்கள். கட்டிலில் இருந்து நினைவை இழுத்து இறக்கி நிலத்திற்கு வந்து“என்ன ஆர்” எண்டான்“அப்பா எனக்கு இண்டைக்கு எக்ஸ்சாம் இருக்கு, நான் குளிக்க வேணும்” சினத்தோடு மகள் காவேரி கத்தினாள்.“வாறனம்மா முடிஞ்சுது” குரல் குழைந்தாலும், மனம் புறுபுறுத்தது. அவசரமாக மீசையின் எல்லா வெள்ளையையும் மூடி கறுப்பு டையை அடித்து முடித்தான். திடீரென்று மனம் சோர்ந்து தவித்தது. தவித்ததை திரும்ப உலுப்பி சமாதானம் சொல்லி நிமிர்த்தி வைக்கும் கைங்கரியம் அவனுக்கு இப்போதெல்லாம் இயல்பாகவே வந்தது. மனச்சோர்வு அளவுக்கு மீறினால் உடனே ஏதாவது ஒரு தத்துவப் புத்தகத்தில் தான் வாசித்த வாழ்க்கைத் தத்துவங்கள் சிலவற்றை தன் வாதத்துக்கு ஏற்ப கண்டு பிடித்து, அதைத் தன் வாழ்க்கையோடு தொடர்பு படுத்தி தன்னைத் திருப்திப் படுத்திக் கொள்வான். இல்லாவிட்டால் யாராவது ஒருவரின் வாழ்க்கை முறையை நினைவிற்கு கொண்டு வந்து அதில் பல பிழைகளைக் கண்டு பிடித்து அதோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்து தான் ஒன்றும் பிழை விடவில்லை என்று திருப்திப் பட்டுக் கொள்வான்.<br />காவேரி கடந்து போன போது வாயுக்குள் நமட்டுச் சிரிப்பு ஒன்றைச் சிரித்தாள். சாப்பாட்டு மேசையில் மூன்று பிள்ளைகளும் தங்களுக்குள் சுரண்டி கண்காட்டிச் சிரிப்பதைக் காணாதது போல் தவிர்த்தான். ஆஷாக்கு காவேரியிலும் விட எத்தின வயசு கூட இருக்கும். மனம் கணக்குப் பார்த்தது. ஆஷாவிடம் அவன் இன்னும் வயசு கேட்கவில்லை. ஆனால் நிச்சயமா அவளுக்கு முப்பதுக்குக் கிட்ட இருக்கும்.<br />“அம்மா, அப்பான்ர மீசையைப் பாத்தீங்களே?” சித்து திடீரென்று சிரித்த படி கேட்டான். “உன்னச் சாப்பிடேக்க கதைக்க வேண்டாம் எண்டு எத்தின தரம் சொன்னனான்” அவன் தலையில ஒரு தட்டுத் தட்டி “ஏன் இப்ப எல்லாருந்தானே டை அடிக்கீனம், அப்பா அடிச்சா என்ன?” கௌரி சொன்ன படியே காந்தனின் மீசையைப் பார்த்தாள். “வடிவாயிருக்கப்பா” என்றாள்.<br />“கௌரி கௌரி இப்பிடி அசடா இருக்காதை நான் உனக்குத் துரோகம் செய்யிறன்” திடீரெண்டு விக்கி விக்கி அவளின்ர காலில விழுந்து அழுந்து மன்னிப்பு கேட்கும் பெரிய ஒரு தியாகி போலவும், எப்பவும் உண்மை கதைக்கும் ஒரு உத்தமன் போலவும் தன்னைக் கற்பனை பண்ணிப் பார்த்தான். குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம். அப்பிடி நான் செய்தால் என்னுடைய மதிப்பு எவ்வளவு உயர்ந்து போகும். அதுவும் கொஞ்சம் மனம் சஞ்சலிச்சுப் போனன், ஆனால் எனக்குக் குடும்பந்தான் பெரிசு எண்டு இப்ப உணர்ந்திட்டன்” போன்ற வசனங்களை எடுத்து விட்டால் எவ்வளவு கௌரவமாக இருக்கும். கௌரி அவனின் தலைய எடுத்து தன்ர நெஞ்சோட சாய்ச்சு “அப்பா ஏதோ தெரியாமல் பிழை விட்டிட்டியள், ஆம்பிளைகள் இப்பிடித்தான் யோசிக்காமல் பிழை விட்டிடுவீனம் பிறகு குழந்தைப் பிள்ளைகள் மாதிரி விக்கி விக்கி அழுவீனம். நான் உங்களக் கோவிக்க மாட்டன். என்னிலதான் முழுப் பிழையும் நான் உங்களுக்கு ஒரு நல்ல பொஞ்சாதியா இருந்திருந்தால் இப்பிடியெல்லாம் நடந்திருக்குமே” என்று கண்களைக் கசக்கிவிட்டுப் பின்னர், இனிமேல் நாங்கள் சந்தோஷமா இருப்பம் அப்பா” என்பாள். காந்தன் விக்கினான். சாப்பாட்டு மேசையில் ஒருத்தரும் இல்லை.<br />கௌரி கட்டி வைச்ச சாப்பாட்டுப் பெட்டியை எழுத்துக் கொண்டு திரும்பவும் ஒருக்காத் தன்னைக் கண்ணாடியில் பாத்து, வயித்தை எக்கி உள்ளே தள்ளி அது தந்த உருவத்தில் திருப்தி கொண்ட படியே வெளியே போனான். இப்ப எத்தின வருஷமா ஜிம்முக்குப் போக வேணும் எண்டு நினைச்சு நினைச்சுக் கடத்திப் போட்டான். என்ர உயரத்துக்கு இந்த வயிறு மட்டும் கொஞ்சம் இறுக்கமா இருந்தா என்ன வடிவாயிருக்கும். ஆஷா நல்ல உயரத்தோட நல்ல இறுக்கமான உடம்போட இருக்கிறாள். என்னை முதல் முதல்ல உடுப்பில்லாமல் பாக்கேக்க அவளுக்கு அரியண்டமா இருந்தாலும் இருக்கும். அவனுக்குக் கவலையாய் இருந்தது. எதுக்கும் முதல் முதலாச் செய்யேக்க இருட்டுக்க வெளிச்சம் வராத மாதிரிப் பாத்துக் கொள்ளுவம். பிறகு பழகீட்டுது எண்டால் அவள் பெரிசா என்ர வயிறக் கவனிக்க மாட்டாள். அதுக்கிடேலை ஏலுமெண்டா ஜிம்முக்குப் போய் வயிற இறுக்கிக் கொள்ளலாம். இனிமேல் சோத்தைக் கொஞ்சம் குறைக்க வேணும். கௌரி சொன்னாலும் கேக்கமாட்டாள் எந்த நாளும் கடமைக்கு ஒரு சோத்தை அவிச்சு வைச்சிருப்பாள்.<br />காந்தனுக்கு திடீரென்று நெஞ்சுக்குள் ஏதோ செய்தது. கௌரியின் மேல் அவனுக்கும் அன்பு நிறையவே இருக்கிறது. ஆனால் காதல், காமம் என்பது ஏனோ அவனுக்கு அவளைக் காணும் போது எழுவதில்லை. கொளரி கூட தான் ஒரு நல்ல அம்மாவாக இருப்பதைத் தவிர வேறு ஒன்றிலும் அக்கறை காட்டவில்லை. காமம் உச்சத்துக்கு ஏறும் சில இரவுகளில் ஒரு பெண் உடலில் அதை தீர்க்க வேண்டிய கட்டாயத்தால் அவன் இரவு வேளையில் கௌரியை அணைப்பதுண்டு. கௌரி காந்தனின் பசிக்குத் தீனி போடுவது தன் கடமை என்று எண்ணி கெதியாக முடித்துக் கொண்டால் கெதியாக நித்திரை கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு வெறும் மரக்கட்டையாய் இயங்குவாள். இரண்டு இயந்திரங்கள் எதையோ செய்து முடித்து விட வேண்டும் என்பதுக்காய் அவசரமாக இயங்கும்.<br />இந்த நிலை காந்தனுக்கு வெறுப்பைத் தர, அதன் பின்னர் தொடர்ந்த ஒவ்வொரு தழுவலிலும் மனதில் வேறு ஒரு பெண்ணை மனப்பிரமை செய்யத் தொடங்கினான். இது அவனின் குறியை விறைக்கப் பண்ணவும், இயக்கத்தை கெதியாக முடித்துக் கொள்ளவும் உதவியாக இருந்தது. தொடக்கத்தில் குற்ற உணர்வை அது கொடுத்தாலும், பின்னர் அது பழக்கப்பட்ட ஒன்றாகி விட்டது. காலப்போக்கில் அது கூட அவனுக்கு பிடிக்காத ஒன்றாய்ப் போய் உடல் உறவு என்ற ஒன்றிலிருந்து விலகி நிம்மதியா நித்திரை கொண்டால் போதும் என்ற நிலை வந்துவிட்டது. வேலை முடிய சில நண்பர்களுடன் பாருக்குச் சென்று ரெண்டு பியர் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டுப் படுத்தால் செக்ஸ் பற்றிய நினைவு அவனுக்கு எழுமலேயே இருந்து விடும். வயது போய் விட்டது. இது இயற்கை என்று நம்பியிருந்தவனுக்கு வேலையிடத்தில் அம்பதுகளில் இருக்கும் நண்பர்கள் நகைச்சுவையாகத் தமது காதல் வாழ்க்கை பற்றி அலசும் போது தனக்கு உடலில் ஏதாவது குறை வந்து விட்டதோ என்ற சந்தேகம் எழத் தொடங்கியது. கௌரிக்குத் தெரி;யாமல் நீலப்படங்களை எடுத்துப் பார்த்தான் அவன் உணர்வு கட்டவிழ்த்து விட்டது போல் புடைத்துக் கொண்டு எழத் தொடங்கியது. ஆண்களை விடப் பெண்களுக்கு காம உணர்வு ஏழு மடங்கு கூடுதலாக இருக்கும் என்று எங்கோ வாசித்த ஞாபகம் வர காந்தன் குழம்பிப் போனான். கௌரியும் காந்தனும் உடலுறவில் ஈடுபட்டு பல மாதங்கள் ஆகி விட்டன. நான் இப்படிக் குழம்பித் தவிக்கிறேன் ஆனால் கௌரி நல்ல சந்தோஷமா நிம்மதியாக இருக்கிறாள். கோயிலுக்கு என்று அடிக்கடி வெளியில் போய்விட்டு வருகிறாள். நான் தான் அசடு மாதிரி ஏமாந்து கொண்டிருக்கிறேனோ. காந்தன் காரை ரோட்டுக் கரையில நிப்பாட்டினான். கௌரி நல்லவள். வளந்த பிள்ளைகள் இருக்கேக்க பிழை ஒண்டும் செய்யக் கூடியவள் இல்லை. அவளுக்கு பெரிசா உணர்ச்சி இல்லைப் போல. விரதம் விரதம் எண்டு எப்ப பாத்தாலும் கடவுளின்ர நினைப்பில இருக்கிறதால அவளுக்கு வேற நினைவொண்டும் இல்லை. தானே வார்த்தைகளைப் பொருத்தித் தன் மனதுக்கு திருப்தி தரும் பதில் ஒன்றைக் கண்டு பிடித்து நிம்மதியாகினான். இதுதான் சரி இதைவிட வேறமாதிரி ஒண்டும் இருக்க ஏலாது. இருக்காது.கௌரி என்று வரும் போது “பிழை”, என்றும் தான் என்று வரும் போது “குற்றமில்லை” என்பதற்கான அத்தனை காரணங்களையும் கண்டு பிடித்து நிம்மதி கொண்டான்.<br />விலகி விலகி இருந்து விட்டு இப்போது நீலப் படங்கள் பார்த்து உணர்சியை மீண்டும் மீட்டெடுத்து இரவு வேளைகளில் கௌரி மேல் கைபோட அவள் தட்டி விட்டு தள்ளிப் படுத்துக் கொண்டாள். அவன் வாய் விட்டுக் கேட்டால் கூட தனக்கு ஏலாமல் இருக்கு, சுகமில்லாமல் நிக்கப் போகுது போல அதால உடம்பை உலுப்பி எடுக்குது எல்லா இடமும் ஒரே நோகுது என்னால இனிமேலும் ஏலாது எண்டு அவள் முற்று முழுதாக விலகிக் கொண்டாள். கடைசியா கௌரியோட அவன் உறவு கொண்ட நாள் நினைவுக்கு வந்த போது மனம் அவமானத்தால் குறுகிப் போய் பழி வாங்கும் மூர்க்கம் அவனுக்குள் எழுந்தது. ஒரு சனிக்கிழமை இரவு குடும்பத்தோட பார்ட்டி ஒன்றுக்குப் போய்விட்டு வந்து, மனம் முழுக்கச் சந்தோஷத்தோடும், உரிமையோடையும் கட்டிலில் படுத்திருந்த கௌரியை கட்டிப்பிடித்த காந்தனை தனக்கு நித்திரை வருகுதென்று தள்ளி விட்டாள் கௌரி. கொஞ்சம் குடிச்சிருந்ததாலையோ, இல்லாட்டி பார்ட்டியில் பல பெண்களோடு நடனமாடி உணர்ச்சி உசுப்பப் பட்ட நிலையில் இருந்ததாலையோ என்னவோ கௌரியின் புறக்கணிப்பை அவன் கணக்கெடுக்காமல் அவளை இறுக்கி அமுக்கி தன் வேகத்தைத் தீரத்துக் கொண்டான். அவள் சத்தம் போடமல் மூக்கை உறிஞ்சும் போது அவன் நித்திரையாய் போயிருந்தான். அடுத்தநாள் நித்திரையால் எழும்பி கீழே வந்த காந்தன், டைனிங் ஹோலில குசினிப் பக்கமா ஒரு கேட்டிண் போட்டு, அம்மாக்கு படியேறக் கால் சரியா நோகுதாம், என்று ஒரு சின்ன கட்டிலோட ஒரு பெட் ரூம் செட்டப்பாகியிருந்ததைக் கண்ட பிறகுதான் அதின் சீறியஸ் அவனுக்கு விளங்கியது. எவ்வளவோ மன்றாடி மன்னிப்புக் கேட்டுப் பார்த்தும் அவள் ஒரு ஞானியைப் போல அவனைப் பார்த்து ஒரு சின்னச் சிரிப்பு சிரித்து விட்டு தன் இரவுகளை அங்கேயே முடித்துக் கொண்டாள். காந்தன் பிள்ளைகளுக்குத் தெரிந்திருக்குமோ என்று முதல்லில் அவமானத்தால் ஒடுங்கிப் போனான். பிறகு காலப்போக்கில தான் குடுத்து வைச்சது இவ்வளவுதான் என்று தன்னைக் கட்டுப் படுத்திக்கொள்ளப் பழக்கிக் கொண்டான். கட்டுப்படுத்த முடியாத இரவுகளில் குற்ற உணர்வோட கையை உபயோகித்தான். எல்லாமே அவனுக்குக் குற்றமாகப்பட்டது. இயற்கையாக நடக்க வேண்டிய ஒன்று தடைப்பட்டு இப்ப தான் ஒரு குற்றவாளியோல கூனிக் குறுகிப் போவதை நினைத்து அவனுக்கு சிலநேரங்களில கோவம் தலைக்கு மேல் ஏறுவதுண்டு. நீலப்படங்கள் பார்ப்பதை முற்றாக நிறுத்திக் கொண்டான். மீண்டும் நண்பர்களோடு பாருக்கு சென்று பியர் குடித்து வீட்டிற்கு தாமதித்து வந்து சாப்பிட்டு விட்டுப் படுப்பதைப் பழக்கப்படுத்திக் கொண்டாலும் கௌரி தன்னை நிராகரிப்பது அவனுக்குள் காமத்தைத் தூண்டச் செய்தது.<br />உடலின் விந்தை அவனுக்குப் புரியவில்லை. காதல் அற்ற நிலையில் அவ்வப்போது எழும் காமத்தை அடக்க இயந்திரம் போல் இருவரும் இயங்கினோம். அந்த வேளையில் கௌரியின் உடல் மட்டும்தான் அவனுக்குத் தேவையாகியிருந்தது. உருவம் யாராவது ஒரு கவர்ச்சி நடிகையாகவோ, இல்லாவிட்டால் வேலைத்தளத்தில் பார்க்கும் ஒரு இளம் பெண்ணாகவோ இருந்து வந்தது. அப்போது நான் யாருடன் உடல் உறவு கொள்ளுகின்றேன். மனதில் வரிந்து கொள்ளும் அந்தப் பெண்ணுடனா? இல்லை கௌரியுடனா? என்ற கேள்வி அவனுக்கு அடிக்கடி எழுவதுண்டு. பின்னர் அதைக் கூட மனம் விரும்பவில்லை. தானாகவே கௌரியை விட்டு விலகிக் கொண்டான். சரி இனி காமத்தின் தொல்லை விட்டது என்று நிம்மதி கொண்டாலும் தனக்கு வயது போய் விட்;டது அதனால் உணர்வுகள் அடங்கி விட்டன என்ற எண்ணம் அவனுள் எழுந்து மனஉளைச்சலைக் கொடுக்கும். இந்த நிலை தனக்கு மட்டுமா இல்லை நாற்பதுகளில் ஆண்கள் எல்லோருக்குமே ஏற்படும் ஒன்றா? பதில் தெரியாமல் குழப்பம்தான் அவனுக்குள் மிஞ்சிக் கிடந்தது. இளம் வயதில் கௌரியை எப்பிடியெல்லாம் காதலித்தேன். ஆனால் இப்போது அவளை வெறுக்கவில்லை. ஆனால் அவளின் வடிவம் எனக்குள் எந்த உணர்வையும் எழுப்பவில்லை. அதே நிலைதான் கௌரிக்கும் என்று அவனுக்குள் விளங்கிய போத அவள் மேல் கொஞ்சம் கோவம் வந்தது. உடல், உணர்வு, காமம், காதல் என்று எல்லாமே அவனுக்கு விந்தை காட்டும் மர்மர்களாகத் தெரிந்தது.<br />வேலைத் தளத்தில் சாப்பாட்டு வேளைகளில் அதிகம் தனிமையில், கையில் கிடைக்கும் ஒரு பத்திரிகையோடு நேரத்தைக் கழிக்கும் அவன், தற்போதெல்லாம் தனிமையைத் தவிர்க்க விரும்பியும், காதல், காமம் பற்றி மற்றவர்களின் புரிதலைப் தெரிந்து கொள்ளும் எண்ணத்துடனும் வேற்று நாட்டு ஆண்கள் பெண்களுடன் தனது சாப்பாட்டு நேரத்தைக் கழிக்கத் n;தாடங்கினான். அவர்களின் வக்கிரக் கதைகள் மீண்டும் அவனின் உணர்வுகளை தட்டி எழுப்பி விட்டன.. இது நிரந்தரமான உடல்பசி. வேகம் கூடும் குறையும் ஆனால் மனிதன் இறக்கும் வரை இருந்தே தீரும் என்பதை அவன் புரிந்து கொண்டான். தியானத்தால் மட்டும் இதனைக் கட்டுப்படுத்தலாம் என்று ஒரு புத்தகம் அவனுக்குக் கூறியது. கௌரி தேவரத்தின் மூலம் இதனைக் கட்டுப்படுத்துகிறாள் என்றும் அவனுக்குப் பட்டது.<br />இப்போது என்ன செய்வதென்று தெரியாத நிலை காந்தனுக்கு. இதைப் பற்றி யாரோட கதைக்கலாம் என்று அவனுக்குத் தெரியவில்லை. கலியாண வயசில் பொம்பிளப் பிள்ளை வளர்ந்து நிற்கும் போது நான் இதைப் பற்றி யாரிடமாவது கேட்டால் சிரிக்க மாட்டார்களா?. அப்ப டிவோர் எடுத்த, பொஞ்சாதி செத்த, இல்லாட்டி கலியாணமே கட்டாத ஆம்பிளைகளெல்லாம் என்ன செய்கின்றார்கள். அவனுக்குத் தெரியவில்லை. யாரிடம் கேட்பது என்றும் விளங்கவில்லை. மருத்த ஆலோசனை பெறலாம் என்று மனம் சொன்னாலும் அதற்கான துணிவும் அவனிடமில்லை. ஆனால் தன்னால் இதற்க்கு மேல் ஏலாது என்ற நிலையில அவன் தவிச்சுக் கொண்டிருக்கும் போது தான் ஆஷா அவன் வேலைத் தளத்திற்கு வந்து சேர்ந்தாள். முதல் பார்வையில் அவனுக்கு ஆஷாவைப் பிடிக்கவில்லை. அவளின்ர உடுப்பும் எடுப்பும். உதுகள் உப்பிடி உடுப்புப் போட்டு அலையிறதாலதான் ஆம்பிளைகளின்ர மனம் அல்லாடுது. தமிழ் பெட்டை அதுவும் தன்ர டிப்பார்மெண்டில என்ற போது காந்தனுக்கு ஆவேசம் வந்தது. ஆஷா வடிவாக இருப்பதும், உடுப்பதும் அவனுக்கு எரிச்சலைத் தந்தது. அவள் உடையில் எப்பவும் பிழை கண்டுபிடிக்க முனைந்து தனது மனதுக்கு திருப்தி தரும் விதத்தில் அதைக் கண்டும் பிடித்து வந்தான். வீட்டில் சாப்பாட்டு மேசையில் தேவையில்லாமல் ஆஷாவை இழுத்துக் கொச்சை படுத்தினான். இவ்வளவுக்கும் வெறும் “ஹெலோ” ஒன்றை மட்டும்தான் அவள் அதுவரை சொல்லியிருந்தாள்.<br />ஆஷா அவனைக் கடந்து போகும் நேரங்களில் வேண்டு மென்றே காணதுபோல் திரும்பிக் கொள்வான். ஒருநாள், வேலையில் சில சந்தேகங்களைக் கேட்க ஆஷா அவனிடம் வரவேண்டியிருந்தது. உடனே தன்னை முற்று முழுதாக மாற்றிக் கொண்டு அப்போதுதான் அவள் அங்கு வேலை செய்வதே தனக்குத் தெரிந்தது போல் மிகவும் இயல்பாகச் சிரித்த படியே “நீங்கள் சிறீலங்காவா?, எந்த இடம்?, எப்ப வந்தனீங்கள்?” போன்ற கேள்விகளை மிகவும் நட்போடு கேட்டு, “எப்ப உங்களுக்கு சந்தேகம் இருந்தாலும் தயங்காமல் என்னட்ட வாங்கோ, இங்க இருக்கிறதுகள் சரியான எரிச்சல் பிடிச்சதுகள் ஒண்டும் சொல்லித் தராதுகள்” என்று குரலைத் தணித்துச் சொன்னான். அதன் பின்பு தேவையில்லாத காரணங்களோடு அவளிருக்கும் இடத்துக்கு அடிக்கடி போய் வரத்தொடங்கினான். தான் செய்வது சின்னத்தனமாக இருப்பது போல அவனுக்குப் பட்டாலும் அதையும் சரிப்படுத்த தனக்கான காரணத்தைக் கண்டுபிடித்து தன்னைத் தானே சமாதானம் செய்தான். “அது சின்னப்பிள்ளை என்ர மகளின்ர வயசிருக்கும். சும்மா எங்கட ஊர் பிள்ளை எண்ட அக்கறைதான்”. இப்பிடி மனதுக்குள்ள ஒரு சின்னப் புலம்பல்.<br />ஒருநாள் சாப்பாட்டு நேரம் ஆஷா அவனிடம் வந்து, கிட்டடியில ஏதாவது நல்ல ரெஸ்ரோரண்ட் இருக்கிறதா சாப்பிட, என்று கேட்டாள். உடனேயே குரலைச் செருமி தனக்குத் தெரிஞ்ச அத்தின ரெஸ்ரோறண்டையும் அடுக்கி, இது நல்லா இருக்கும், இதில சாப்பாடு வாயில வைக்கேலாது என்று தான் வகை வகையாக ரெஸ்ரோரெண்டில் சாப்பிடுவது போல கையை அங்கும் இங்கும் ஆட்டி பாதை காட்டினான். “நீங்கள் சாப்பாடு கொண்டு வராட்;டி வாங்கோவன் ஒரு நல்ல ரெஸ்ரோறண்டில போய் லன்ஜ் எடுப்பம்” என்றாள் ஆஷா. காந்தன் முதலில் கொஞ்சம் திடுக்கிட்டு, பிறகு சிரித்த படியே “இல்லை நான் கொண்டு வந்திருக்கிறன் பிறகு ஒருநாளைக்குப் பாப்பம்” என்ற போது அவனின் கைகள் குளிந்து போயிருந்தன. தன்னுடைய பதில் அவனுக்குத் திருப்தியாக இருந்தது. நாற்பது வயதில் படியேறக் கால் நோகுது என்று சொல்லி டைனிங் ஹோலில் கட்டில் போட்டு இரவு ஒன்பது மணிக்கே தேவராப் புத்தகத்தை கையில் பிடித்து முணு முணுக்கும் கௌரி தனக்கு மனைவியாய் வந்திருந்தாலும் தன் மனம் அலையவில்லை என்று தன்மீதே அவன் பெருமை கொண்டான். ஆஷா “ஓகே” என்று விட்டுப் போய் விட்டாள். காந்தன் அங்குமிங்கும் பார்த்து விட்டுத் தன்னைக் குனிந்து பார்த்தான். அவனுடைய சேட் கொஞ்சம் கசங்கியிருப்பது போலவும பாண்ஸ்சிற்கு அவ்வளவாக பொருத்தாதது போலவும் இருந்தது. அதற்குப் பிறகு அவசரமாக ஆறு சோடி உடுப்பு வாங்கிவிட்டான். இரண்டு தரம் ஆஷாவோட சாப்பிடவும் போய் வந்தான். ஒரே வேலைத்தளத்தில் வேலை செய்யும் இரண்டு பேர் கஸ்சுவலாக சாப்பிடப் போகின்றார்கள். தன் மனதுக்கு சமாதானம் சொல்ல அவன் கண்;டுபிடித்த வசனம் இது. காந்தனின் நடையில் இப்போது ஒரு துள்ளலும், கதையில் கொஞ்சம் அவசரமும் கலந்து கொண்டது.<br />இப்ப பிள்ளைகள் என்ன கேட்டாலும் கேள்வி கேட்காமல் வாங்கிக் குடுக்கிறான். தனக்குள் இருக்கிற குற்ற உணர்வைப் போக்க தான் பிள்ளைகளுக்குக் குடுக்கும் லஞ்சம் அது என்று அவனுக்கு விளங்கினாலும், அதை மறுத்தான். பிள்ளைகளுக்குத் தேவையிருக்குது அதால கேக்கின்றார்கள் நான் உழைக்கிறேன் வாங்கிக் குடுக்கிறேன். அவ்வளவுதான். “வேலையிடத்தில புறொமோஷன் ஒண்டு கிடைக்கும் போல இருக்கு அதால கொஞ்சம் நீட்டா இருக்க வேணும் நேரத்துக்குப் போக வேணும், லேட்டானாலும் நிண்டு வேலைய முடிச்சிட்டு வரவேணும்” என்று ஒருவரும் கேட்காமலே சாப்பாட்டு மேசையில் அடிக்கடி சொல்லத் தொடங்கினான்.<br />இப்பவெல்லாம் கௌரி தனிக்கட்டிலில்ல கீழே படுக்கிறது அவனுக்குச் சாதகமா இருந்தது. இரவு வேண்டி நேரம் வரை ஆஷாவோட கற்பனையில் சல்லாபிக்க முடிந்தது. தலாணியை எடுத்து ஆஷா, ஆஷா என்று அளைய முடிந்தது. “ஒரு நல்ல இங்லீஷ் படம் வந்திருக்கு உங்களுக்கு ரைம் இருந்தா வெள்ளிக்கிழமை இரவு போவமா?” என்று ஆஷா அவனைக் கேட்ட போது காந்தனின் துடைகள் இரண்டும் நடுங்கி ஆடியது. இது “அது”தான் என்ற முடிவை அவன் அப்போதுதான் நிச்சயம் செய்து கொண்டான். “வெள்ளிக்கிழமையா..” என்று இழுத்து யோசித்து.. தான் அதிகம் யோசித்தால் ஆஷா வேண்டாம் என்று சொல்லி விடக் கூடும் என்ற பதட்டத்துடன். “ம்..எனக்கு ஒரு வேலையுமில்லை.. அக்ஸ்சுவலி.. அண்டைக்கு கௌரியும் பிள்ளைகளும் கோயிலுக்குப் போகீனம்.. நான் ப்ரியா இருப்பன்.. ப்ரெண்ஸ் ஆரேடையாவது எங்கையாவது போகலாம் எண்டு நினைச்சிருந்தனான்.. லுக் இப்ப நீங்களாவே கேட்டிட்டீங்கள்.. நான் வாறன்” என்றான்.. ஆஷா “தாங்க்ஸ்” என்று விட்டுப் போய் விட்டாள். தான் கொஞ்சம் கூடுதலா வழிந்து விட்டது போல் அவனுக்குப் பட்டது. எவ்வளவு வடிவாப் பொய் சொல்லுறன் என்று தன் மேல் பெருமை கொண்டான். அவன் மனதில் படம் பார்க்கும் அந்த வெள்ளி இரவு படமாய் விரிந்தது. படம் பார்க்கும் போது அவளின் உடம்பில் தான் முட்டாத மாதிரி இருக்க வேணும். ரிக்கெட் தான் தான் எடுக்க வேணும். குடிக்க, சாப்பிட ஏதாவது வாங்க வேணும். இங்கிலீஸ் படமெண்டா கட்டாயம் ஏதாவது ஏடா கூடமா காட்சி வரும் அந்த நேரம் நெளியாமல் நல்ல இறுக்கமா இருக்க வேணும். படம் முடிய சாப்பிடப் போகக் கேக்கலாம். கம் பக்கெட் ஒண்டு வாங்க வேணும். ஒரு வேளை அவளா கைய கிய்யப் போட்டால் என்ன செய்யிறது. அவனுக்கு உடம்பு கூசியது. அந்தக் கூச்சம் சுகமாக இருந்தாலும் பயமா இருந்தது. அவசரப்பட்டு இடம்கொடுத்து பிறகு ஏதாவது பிரச்சனையில மாட்டீட்டா. திடீரெண்டு அவனுக்குப் பயம் வந்தது. வடிவா இளமையா இருக்கிறாள். எதுக்காக என்னோட இப்பிடிப் பழகிறாள். காசு கீசு அடிக்கிற யோசினையோ? இல்லாட்டி வீக்கான பெட்டையாக்கும், உப்பிடி எத்தின பேரோட பழகீச்சோ.. வேலையெண்டு போற போற இடமெல்லாம் ஒண்டை வைச்சிருக்குமாக்கும். ஏதாவது வருத்தம் இருந்து எனக்கு வந்திட்டா.. இவ்வளவும் அவனின் மனதுக்குள் உருண்டாலும்.. எல்லாத்தையும் தள்ளி விட்டு, என்னை அவளுக்குப் பிடிச்சிருக்கு அதுதான் உண்மை. வேற ஒண்டுமில்லை. வேற ஒண்டாவும் இருக்க ஏலாது என்று முற்றுப்புள்ளி வைச்சான். எனக்கும் அவளைப் பிடிச்சிருக்கு.<br />வெள்ளிக்கிழமை வேலை முடிய ஆஷா அவனைக் கூட்டிக்கொண்டு “புளோர்” சினிமாக்குள் நுழைந்தாள். சனம் மிகக் குறைவாகவே இருந்தது. ஆஷா வேணுமென்றே சனமில்லாத தியேட்டரைத் தெரிவு செய்திருக்கிறாள் என்று காந்தனுக்குப் பட்டது. அவன் முகம் சிவந்து உணர்வுகள் அல்லாடத் தொடங்கியது. இந்த அளவிற்கு வந்தாகிவிட்டடது. இனி நிச்சயமாக அடுத்தது “அது” வாகத்தான் இருக்கும். அதுக்காக அவன் எவ்வளவு காசோ, நேரமோ செலவிடத் தயாராகவிருந்தான். தனக்கு கௌரிமேல் காதல் இ;ல்லாமல் போய் விட்டதை நினைக்கும் போது அவனுக்கு வேதனையாகவிருந்தாலும் தான் தொலைத்து விட்டதாக நினைத்திருந்த இளமை திரும்பிவந்துவிட்டதென்பதை நினைக்கும் போது வாழ்கை என்பதே அனுபவிப்பதற்காகத்தான் அதை அனுபவிப்பது குற்றம் அற்றது என்று தன்னைத் தேற்றிக் கொண்டான்.<br />ஆஷா படத்திற்கு டிக்கெட்களை எடுத்து விட்டு படம் தொடங்க நேரம் இருப்பதால் கோப்பி குடிக்கலாம் என்றாள். கோப்பி குடித்த படியே பல கதைகளையும் கதைத்துக் கொண்டிருந்தவள் தான் தனியாக ஒரு அப்பாட்மெண்டில் இருப்பதாகவும் ஒரு நாளைக்கு கௌரியையும் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு தன்னுடைய அப்பாட்மெண்டிற்கு சாப்பிட வரும் படியும் கேட்டாள். காந்தன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான். தான் தனியாக இருப்பதைச் சொல்லி என்னை அங்கே சாப்பிடக் கூப்பிட விரும்புகிறாள், அதை நேரடியாகச் சொல்லக் கூச்சப்பட்டு குடும்பத்தோடு வரும்படி கேக்கிறாள். நல்ல கெட்டிக்காறிதான் என்று நினைத்துக் கொண்டான். காந்தன் மௌனமாக இருந்தான். ஆஷா கோப்பியைக் குடித்த படியே அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு ஒரு பெருமூச்சை விட்ட படியே “எனக்கு இப்ப முப்பத்திரெண்டு வயசாகுது என்ர வாழ்கைய எப்பிடி அமைச்சுக் கொள்ள வேணுமெண்டு எனக்குத் தெரியும்தானே, நான் முந்தி அண்ணா அண்ணியோடதான் இருந்தனான். பிறகு ஒத்து வரேலை அதால தனிய ஒரு அப்பாட்மெண்ட் எடுத்து இருக்கிறன்” என்றாள். காந்தன் சின்னதாகச் சிரித்தான் இதற்கு என்ன சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆஷாவே தொடர்ந்தாள். “அவேலுக்கு நான் கலியாணம் கட்ட வேணும் பிள்ளைப் பெறவேணும், அவேலில பிழையில்லை எங்கட ஆக்களுக்குத் இதைத் தவிர வேற என்ன தெரியும்” என்றாள் அலுப்போடு. காந்தனுத்தான் தான் ஏதாவது பிழையாகச் சொல்லி விடுவேனோ என்ற பயம் வர அதே சின்னச் சிரிப்பைத் தொடர்ந்தான். “நான் நினைக்கேலை நான் கலியாணம் கட்டுவனெண்டு, லிவிங் டு கெதர் இஸ் ஓக்கே வித் மீ.. ஆனால் எனக்கு நல்லாப் பிடிச்ச ஆளா இருக்கோனோம் அதுக்குத்தான் வெயிட்டிங்” என்றாள் சிரித்த படியே..காந்தனுக்குக் குழப்பமாக இருந்தது.. தான் என்ன சொல்ல வேண்டும் என்ற தெளிவு அவனுக்கு வரவில்லை. ஆனால் தன் முகத்தில் மாற்றம் வருவது அவனுக்கு விளங்கியது. அதை அவள் கவனித்து விடக்கூடாது என்பதில் கவனமாகவிருந்தான். கதையை வேறு பக்கம் திருப்ப “படத்துக்கு இன்னும் எவ்வளவு நேரமிருக்கு” என்றான். ஆஷா நேரத்தைப் பார்த்து விட்டு “அரை மணித்தியாலத்துக் கிட்ட இருக்கு வேணுமெண்டா உள்ள போயிருப்பம்” என்றாள்.உள்ளே அங்கொன்றும் இங்கொன்றுமானச் சிலர் இருந்தார்கள். இருந்தார்கள். “என்ன படம் இது சனத்தைக் காணேலை” என்றான் காந்தன் சந்தேகத்தோடு.“ஓ இது ஹொலிவூட் படமில்லை தியேட்டர் நிரம்பிறதுக்கு, இது ஒரு டொக்குமென்ரி, உங்களுக்கும் பிடிக்குமெண்டு நினைக்கிறன்’ ச் என்று தலைய ஆட்டியவள் ‘என்ர ப்ரெண்ஸ் ஒண்டும் வரமாட்டுதுகள் எண்டிட்டுதுகள், என்று விட்டு, “நான்ஜிங்” எண்டு ஜப்பான் சைனாவைப் பிடிச்சு செய்த அநியாயத்தையெல்லாம் டொக்குமென்றியாக்கியிருக்கிறாங்கள்.. நான் ரிவியூ வாசிச்சனான்.. வாசிக்கவே நெஞ்சுக்க ஏதோ செய்துது.. எனக்கு இப்பிடி டொக்குமென்ரீஸ் எண்டா நல்ல விருப்பம்.. அவங்கள் செய்த அநியாயம் கேள்விப்பட்டீங்களோ தெரியாது.. பாத்தீங்கள் எண்டாத் தெரியும்.. எங்கட நாட்டிலையும் இதுதானே நடக்குது.. போரால பாதிக்கப்படுறது பொம்பிளைகளும் குழந்தைகளும்தான்.. நினைச்சாலே வேதனையா இருக்கு’ என்றாள். காந்தனுக்கு இந்த நேரத்தில் தான் ஏதாவது சொல்வது தனது கடமை என்று பட்டது. ‘அதை நினைச்சாலே சரியான வேதினை தான் ம்.. என்ன செய்யிறது எங்கட கைய மீறின அலுவல் எங்களால கவலைப் படத்தான ஏலும்’ என்றான். கொஞ்ச நேரம் மௌனமாக இருந்த ஆஷா ‘செக்ஸ் எண்டு வந்திட்டா இந்த ஆம்பிளைகளுக்குக்கெல்லாம் கண்மண் தெரியிறேலை..” முகம் சிவக்க சொன்னவள், காந்தன் திடுக்கிட்டதைக் கண்டு தன்னைச் சுதாகரித்துக் கொண்டு “ஐ ஆம் ஸொறி’ என்றாள், பின்னர் தானாகவே ‘இந்த வோர் அதால பாதிக்கப்படுகிற பொம்பிளைகள்.. தீஸ் மென் ஆர் அனிமல்ஸ்’ என்றாள்.. திரும்பவும் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு 'நீங்கள் ஜென்ரில்மென். நான் மீட் பண்ணின நல்ல சில ஆம்பிளைகளுக்க நீங்களும் ஒராள்.. என்றாள் சிரித்த படியே.. படம் ஆரம்பித்தது.<br /><br /> <em><strong>‘ஒரு சைனீஸ் சிறுமியின் உடைகளைக் களைந்து விட்டு அவளை கதிரையில் கால்களை அகல விரித்து இருக்குமாறு துவக்கைக் காட்டிப் பணிந்த ஜப்பானிய இராணவவீரன் சிரித்துக் கொண்டிருந்தான் திரையில்..’<br /><br /></strong></em><span style="font-size:85%;"><span style="font-size:78%;">2008 ஆம் ஆண்டு கனேடிய “கூர்” இலக்கிய இதழில் வெளியான சிறுகதை</span>.</span>கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9540420.post-15889088340978414062009-07-27T16:53:00.000-07:002009-07-27T17:05:15.634-07:00தேக்கநிலை<span class="Apple-style-span" style="color: rgb(51, 51, 51); font-size: 14px; line-height: 23px; "><p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 15px; margin-left: 0px; "> அண்மையில் என் நண்பர் ஒருவர் இந்தப் புத்தகம் வாசித்து விட்டீர்களா? என்று ஒரு படைப்பைக் குறிப்பிட்டு மட்டக்களப்பிலிருந்து மின்அஞ்சல் போட்டிருந்தார். எனது shelfari யில் “I’ve read” shelf ஐ விட “I plan to read” shelf இல் படைப்புக்கள் அதிகரித்து விடுமோ என்று பயமாகவுள்ளது.</p><p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 15px; margin-left: 0px; "> என் வாழ்க்கை முறைக்குள் கிடைக்கும் நேரத்திற்குள் முடிந்தவரை வாசித்துக்கொண்டிருந்தாலும் என் நண்பர்களோடு ஒப்பிடும் போது நான் ஒன்றையும் வாசிக்கவில்லையோ என்று பயமாயிருக்கின்றது. நான் என் வாசிப்பு முறையை மீள்ஆய்வு செய்து பார்த்தேன். கடந்த இரண்டு மாதங்களில் ஐந்து நாவல்களை, மூன்று சிறுகதைத் தொகுதிகளையும், மூன்று கவிதைத் தொகுதிகளையும் வாசித்து முடித்திருக்கின்றேன். இத்தனை படைப்புக்களை வாசித்து முடித்திருந்தாலும் வார இறுதிநாட்களில் நண்பர்களைச் சந்தித்து உரையாடும் போது அவர்கள் கலந்துரையாடும் எந்த ஒரு படைப்பையும் நான் வாசிக்காமல் கலந்துரையாடலில் கலந்து கொள்ள முடியாமல் தொலைந்தவளாய் இருக்கின்றேன். அவர்கள் “நீங்கள் வாசிக்கவில்லையா?” என்று கேட்கும் எப்படித் தவறினேன் என்ற தடுமாறுகின்றேன்.. அடுத்த கிழமை அவர்களை மீண்டும் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்குமெனின் அதற்கிடையில் அவற்றையெல்லாம் வாசித்து என்னை “அப் டு டேட்” ஆக வைத்திருக்க முயல்வேன். இருந்தாலும் நான் அவர்களை ஒருபோதும் எட்டியது கிடையாது. கையில் தாராளமான நேரத்தை வைத்துக்கொண்டிருக்கும் இளசுகளுடன் நட்பை வைத்திருந்தால் இதுபோல சங்கடங்களுக்கு ஆளாகவேண்டி வரும் என்பதை உணராமல் வயதுக்கு மீறிப் போட்டிபோட்டுக்கொண்டிருக்கின்றோனோ தெரியவில்லை.</p><p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 15px; margin-left: 0px; "> அண்மைக் காலங்களில் விமர்சனத்திற்குட்படுத்தப்பட்ட ஈழத்து எழுத்தாளர்களான அ.முத்துலிங்கம், கருணாகரமூர்த்தி, ஆகியோரின் படைப்புகள் பற்றி எனது நண்பர்கள் விவாதங்களைச் செய்த போது குற்ற உணர்வில் நான் கதவுக்குப் பின்னால் ஒதுங்கிக் கொண்டேன். இவர்களின் படைப்புக்கள் வீட்டிலிருந்தும் நான் இன்னும் வாசிக்கவில்லை. ஏன் வாசிக்கவில்லை என்று எனக்கே தெரியவில்லை. என் தெரிவில் வேறு படைப்புக்கள் முன்னுரிமை பெற்றுக் கொண்டு செல்வதனால் என்னையறியாமல் இவற்றை நான் வாசிக்கத் தவறவிட்டிருக்கின்றேன். ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்களை வாசிக்காமல் ஒரு ஈழத்து இலக்கியவாசகி இருக்க முடியாது என்று என் நண்பன் சொன்னான். (சோபாசக்தியின் எந்தப் படைப்பும் இதுவரை விடுபடவில்லை). இந்த இலட்சணத்தில் என் எழுத்துக்களை வாசகர்கள் வாசிக்க வேண்டும் என்று நான் எப்படி எதிர்பார்க்க முடியும்? அண்மைக்காலங்களின் என் வாசிப்பு என்னை அறியாமலேயே இந்தியப் பெண் எழுத்தாளர்களின் பக்கம் திரும்பியிருக்கின்றது.</p><p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 15px; margin-left: 0px; ">எனது வாசிப்பின் சில பகிர்வுகள்:-</p><p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 15px; margin-left: 0px; "><strong style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; ">For Marimonial Purposes</strong> by: Kavita Dashwani</p><p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 15px; margin-left: 0px; "><em style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; ">‘Quickly becoming a spinster by her culture’s standards, she is eager to escape the community that views her as a failure. After pleading with her parents for permission, she boards a plane bound for the United States and a dream of a career. And although husband-hunting isn’t any easier in New York City, at least she’s got company’</em></p><p align="right" style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 15px; margin-left: 0px; "><em style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; "><a href="http://www.kavitadaswani.com/matrimonal.htm" style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; color: rgb(0, 96, 255); text-decoration: underline; ">http://www.kavitadaswani.com/matrimonal.htm</a><span class="Apple-style-span" style="font-style: normal; "></span></em></p><p align="right" style="text-align: left;padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 15px; margin-left: 0px; "><em style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; "><span class="Apple-style-span" style="font-style: normal; ">எனக்கு ஒரு கணவன் வேண்டும். பேச்சுத் திருமணம் என்பது ஒரு விரல்சொடுக்கில் நடந்து முடிந்து விடக் கூடியது. கல்வி, பணம், அழகுஅனைத்தும் எனக்கிருக்கின்றது. நான் மாநிறம். கவனிக்க கறுப்பல்லமாநிறம். எனது சித்தி அடிக்கடி என்னை வெள்ளையாக்க மருந்துவகைகளை அனுப்புவாள். திருமணம் தடைப்பட இது ஒரு காரணமில்லை. வேறு எத்தனையோ காரணங்கள் இருந்தன. எண்ணெய் தலையை படிய இழுத்துவிட்ட, கறுப்பு “பாண்ட்ஸ்” இற்கு வெள்ளை “சொக்ஸ்” போட்ட அக்ரா காறனை நான் மறுத்தது என் அப்பாவிற்குக் கோவம். லண்டனில் ஒரு வெள்ளைச்சியுடன் குடியிருப்பவன் பெற்றோருக்குப் பயத்தில் என்னைத் திருமணம் செய்யச் சம்மதித்து என்னோடு இரண்டு முறை வெளியே கோப்பி குடிக்க அழைத்துச் சென்று என் அழகில் மயங்கிப் போனது என்னவோ உண்மைதான். அவன் கதை அம்பலமாகிக் கல்யாணம் தடைப்பட்டதற்கு எனது நிறம் காரணமாகாது. எனது நண்பிகள் அடுத்தடுத்துத் திருமணமாகிக் குழந்தைகள் பெற்றுக்கொள்வதும், என்னிலும் வயது குறைந்த எனது உறவுக்காறர் பெண்கள் திருமணத்திற்கு நான் சென்று எல்லோரின் இரக்கத்திற்கு உள்ளாவதும், என் படித்த அழகான தம்பிகளுக்கு சம்பந்தங்கள் குவிந்த வண்ணமிருக்க அக்காவின் திருமணத்தின் பின்னர்தான் தமது திருமணம் என்று பொறுமையாக இருக்கும் அவர்களை தினம் தினம் குற்ற உணர்வோடு பார்ப்பது என்பதும் இலகுவான விடையமல்ல விரதங்கள், சாமிகள்,</span></em></p><p align="right" style="text-align: left;padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 15px; margin-left: 0px; ">பூசாரிகள் இத்யாதி, இத்யாதி எதுவும் எனக்கு ஒரு கணவனைத் தேடித் தரவில்லை. வயது மட்டும் ஏறிக்கொண்டே போனது. மாற்றம் வேண்டி நியூயோர்க் சென்று சிறுகச் சிறுக உலகை என்னைப் புரிந்து கொண்டேன். இருந்தும் எனக்கு வேண்டியது ஒரு கணவன். இது அஞ்சுவின் கதை.</p><p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 15px; margin-left: 0px; "><strong style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; "><em style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; ">Animal’s People</em></strong><em style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; "> -by: Indra Sinha</em><br />ஒருகாலத்தில் நான் “மனிதர்களைப் போல்” இரண்டு கால்களில் நடப்பேனாம் என்னை சின்னவயதில் அறிந்தவர்கள் கூறுவார்கள். நான் மிகுந்த குறும்புக்காரன் என்பாள் எனது வீட்டுக்காறி. துருதுருவென்று ஒரு இடத்தில் நிற்காமல் ஓடித்திரிவேனாம். “அந்த இரவு” என்னை மாற்றிவிட்டது. தற்போது நான் ஒரு மிருகம். நான் மிருகம் இல்லை மனிதன்தான் என்கின்றார்கள் மனிதர்கள். நான் நாலுகாலில் நடப்பவன். நாலுகாலி;ல் மனிதன் நடப்பானா? மிருகம் தானே நடக்கும் எனவே நான் ஒரு மிருகம். என்னை எந்தச் சட்டமும் ஒன்றும் செய்ய முடியாது. நான் மிருகமாக அனைத்துச் சட்டத்தையும் மீறிக்கொண்டிருந்தேன் நிஷாவைக் காணும்வரை.<br />நிஷாவைக் கண்ட பின்னர்தான் எனக்கு இரண்டு காலில் நடக்க வேணும் என்ற ஆசையே எழுந்தது. அமெரிக்காவிலிருந்து வந்த டொக்டர் எலி என்னை அமெரிக்கா அழைத்துச் சென்று இரண்டு காலில் நடக்க வைப்பதாகச் சத்தியம் செய்து கொடுத்திருந்தாள். ஆனால் பிறகுதான் தெரிய வந்தது அவள் “அவர்களின்” ஆள் என்பது. “அந்த இரவு” எனது பெற்றோரைக் கொன்று போட்டது. எனது ஊரையே அழித்து நாசம் செய்தது. கம்பனிவாலாக்கள் அமெரிக்காவில் ஐஸ்வர்யமாக வாழ்கின்றார்கள். இந்த உலகில் எமக்காக நியாயம் கேட்க யாருமே இல்லையா?<br />போபால் நகரை அழித்த யூனியன் கார்பைட் நச்சுவாயுத் தாக்கத்தைத் தளமாக வைத்து இந்நாவல் எழுதப்பட்டிருக்கின்றது. இவரது முதல் நாவலான “ <em style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; ">The Death of Mr.Love</em>” மும்பையில் நாவான்டி சமூகத்தில் 1957ஆம் ஆண்டு இடம்பெற்ற பெயர்பெற்ற காதல் கொலையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. “காமசூத்ரா”வை மொழிபெயர்த்த<br />இந்ரா சிங்ஹா <em style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; ">Animal’s People </em>நாவல் வெளியான போது அதன் மொழிக்கானப் பல சர்ச்சைக்கு உட்படுத்தப்பட்டது நாவல் நிராகரிக்கப்பட்ட நிலையில் இருந்தது என்றும், சிறிது காலத்தின் பின்னரே இந்நாவல் அடையாம் காணப்பட்டு விருதுகளைப் பெறும் தரத்திற்கு உயர்ந்தது என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.</p><p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 15px; margin-left: 0px; "><em style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; ">“Some readers and critics have said that the bad language was “unnecessary”. I informed Animal, who said, “have these cunts spent even one day in Khaufpur? They can fuck off all, and you too.”</em></p><p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 15px; margin-left: 0px; "><strong style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; ">The Twentieth Wife</strong> -by: Indhu Sundaresan</p><p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 15px; margin-left: 0px; ">வரலாற்றுப் புனைவு. 17ஆம் நூற்றாண்டின் முகல் அரசாட்சியின் போது தனது ஆளுமைக்காக மிகக் கவனத்திற்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகும் இளவரசி மேருனிஷாவின்(நுர்ஜகான்). பிறப்பிலிருந்து புனைவு ஆரம்பிக்கின்றது. இளவரசர் சலீமின் முதல் திருமணத்திற்குச் சென்றிருந்த மெருனிஷாவிற்கு எட்டு வயது. அப்போதே இந்த இளவரசரைத்தான் நானும் மணந்து கொள்ளப் போகின்றேன் என்று உறுதிகொள்கின்றாள் அவள். அரச குடும்பத்தில் பிறக்கா அவளுக்கு அது சாத்தியமற்ற ஒன்று என்று புரிந்து கொள்ள முடியவில்லை. இறுதியாக பல பின்னடைவுகள் சிரமங்களைத்தாண்டி மெருனிஷா சலீமின் இருபதாவது மனைவியாகும் வரை புனைவு நீள்கின்றது.<br />1577ஆம் ஆண்டு கடும் பனிக்காலம் ஒன்றில் ஹண்டகாரில் ஒரு பேர்சியன் தம்பதிகளுக்குப் பிறக்கும் மெருனிஷாவை வறுமை காரணமாக மரத்தடியில் விட்டுச் செல்ல முடிவெடுக்கின்றார்கள் அவளது பெற்றோர். வீதியோரங்களில் யாராவது தமது குழந்தையை எடுத்து நன்றாக வளர்பார்கள் என்ற நம்பிக்கையில் தமது குழந்தைகளை விட்டுச் செல்வது அப்போது வழக்கமாயிருந்தது. கைக்குழந்தையாக மரத்தடியில் விடப்பட்ட மெருனிஷாவை அவளின் பெற்றோரின் நண்பனே கண்டெடுத்து மீண்டும் அவளை பெற்றோருடன் இணைத்து விடுகின்றார். அன்றிலிருந்து மெருனிஷாவை தனித்தன்மை கொண்ட குழந்தையாகப் பார்க்கின்றார் அவளது தந்தை. சாதாரண குழந்தைகளைப் போலில்லாமல் கல்வியிலும், வாசிப்பிலும் அதிகம் ஆர்வம் காட்டும் இதேகுழந்தை, முப்பத்தியேழு வருடங்களின் பின்னர் முகல் மன்னனை மணந்து முகலின் அரசியாகின்றாள்.</p><p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 15px; margin-left: 0px; "><em style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; ">“In her debut novel, Indu Sundaresan takes readers deep inside a 17th-century imperial Mughal court to tell the story of Mehrunissa, a woman who emerged from her husband’s harem to rule as the Empress Nur Jahan. Vivid with period detail and palace politics, </em>The Twentieth Wife<em style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; "> is a richly imagined portrait of extraordinary power and independence</em>.”</p><p align="right" style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 15px; margin-left: 0px; "><a href="http://www.bordersstores.com/features/feature.jsp?file=sundaresan" target="_blank" style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; color: rgb(0, 96, 255); text-decoration: underline; ">BORDERS RECOMMENDS</a> on Borders.com</p><p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 15px; margin-left: 0px; "><strong style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; ">The Feast of the Roses</strong> – Indhu Sundaresan</p><p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 15px; margin-left: 0px; "> முகல் மன்னன் ஜகங்கீர்(சலீம்)ஐ மணந்து மெருனீஷா முகல் அரசியாகி நுர்ஜகான் என்ற பதவிப் பெயரைப் பெறுவதிலிருந்து, ஆரம்பிக்கின்றது இவ்வரலாற்றுப் புனைவு. நுர்ஜகானின் தனித்தன்னை, ஆளுமை அழகு போன்றவற்றிற்கு அடிமையாகின்றான் மன்னன் ஜகங்கீர். அரசியின் கையைப் பிடித்து அரச சபைக்கு அழைத்துச் செல்லும், அதுவரை முகல் அரசு கண்டிராத, சட்டத்திற்குப் புறம்பான புரட்சியை செய்கின்றான் மன்னன் ஜகங்கீர். முகத்திரைக்குப் பின்னாலிருந்து கொண்டே முகல் ஆட்சியைக் கொண்டு நடத்துகின்றாள் நுர்ஜகான். ஆஸ்துமா நோயினால் அவதிப்படும் மன்னன், தன்னைச் சுற்றியிருப்பவர்களின் மேல் கொண்ட அவநம்பிக்கையால் முற்றுமுழுதாக நுர்ஜகானிடமே சரணடைந்து விடுகின்றான். மன்னன் இறக்கும் வரை அவனுக்குத் துணையாயிருந்து முகல் அரசைத் திறம்பட நாடத்திய அரசி ஒரு சிறந்த பெண்ணியவாதியாக அடையாளப்படுத்தப்படுகின்றாள்.</p><p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 15px; margin-left: 0px; "><em style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; ">“…in </em>The Feast of Roses<em style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; ">…several passages are nearly sublime. Whether one wants to see this as an historical romance or a political and feminist statement is up to the reader. What Sundaresan gives us in these two novels, however, is a fascinating story and a worthwhile examination of this…empire that is practically unknown to most Americans. I, for one, hope Sundaresan has much more to tell us about India</em>.”</p><p style="text-align: right;padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 15px; margin-left: 0px; ">—PopMatters.com</p><p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 15px; margin-left: 0px; "> அச்சுப் பிரதிகளை மட்டும் வாசித்தால் போதாது, மின்தளங்களையும் வாசித்து எம்மை நண்பர்களுடன் கலந்துரையாடுவதற்குத் தயாராக வைத்திருத்தல் வேண்டும். இல்லாவிட்டால் எல்லாப் பக்கங்களிலிருந்தும் “அட்டாக்” இற்கு ஆளாக நேரிடும். அண்மையில் பாரீஸ் சென்று என் நண்பன் ஒருவரில் வீட்டில் தங்கியிருந்தேன். அவன் காலை எழுந்ததும் முதல் வேலையாகப் தினசரிப்பத்திரிகை வாசிப்பது போல் மின்தளங்களை வாசிப்பதைக் கவனித்தேன். காலை எழுந்தவுடன் ஐந்து நிமிடமாவது யோகா செய்துவிட்டு வேலைக்குப் செல்லுங்கள், இந்த வயதில் உற்சாகமாக இருக்க அது நிச்சயம் உதவும் என்று இந்தியாவிலிருந்து வந்திருந்த எனது நண்பி எனது வயதை நினைவு படுத்திவிட்டுச் சென்று விட்டாள். அந்த ஐந்து நிமிடமும் கட்டிலில் படுத்திருந்து உருளுவதை விரும்பும் எனக்கு ஐந்து நிமிடங்கள் யோகா, பத்து நிமிடங்கள் மின்தளங்களைப் பார்வையிடல் என்பது பயங்கரமாயிருந்தது. இருந்தாலும் என்னை இழுத்து வைத்து சில மின்தளங்களை “புக்மார்க்” பண்ணி வைத்து வாசிக்கத் தொடங்கியுள்ளேன். முன்பெல்லாம் நண்பர்கள் குறிப்பிட்ட பின்பே ஓடிவந்து ஒரு விடையத்தை வாசிக்கும் நான் தற்போது காலை எழுந்ததும் மேலோட்டமாகவாவது சில மின்தளங்களை வாசிக்கின்றேன்.</p><p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 15px; margin-left: 0px; "> மின்தளங்களை வாசிப்பது என்பது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. படைப்புகள் மூலம் தம்மை தரமான எழுத்தாளர்களாய் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் பல எழுத்தாளர்கள் மின்தளங்களில் குடும்பிப் பிடி சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அத்தோடு எந்தவிதமான தணிக்கையும் இல்லாமல் பிரசுரிக்க முடிந்ததால் ஒவ்வொரு படைப்பாளிகளின் உண்மைப் பக்கங்களையும் எம்மால் காணமுடிகின்றது.<br />அண்மைக் காலங்களில் மின்தளங்களில் ஆதவன்தீட்சண்யா, தமிழ்நதி, சோபாசக்தி போன்றவர்களின் மோதல்களையும், தொடர்ந்து கொண்டிருக்கும் ஜெயமோகன், சாருநிவேதா தாக்குதல்களையும் வாசிக்கும் சந்தர்பங்கள் கிடைத்தன.</p><p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 15px; margin-left: 0px; ">தமிழ்நதியின் தளத்தில் வாசிக்கக் கிடைத்த சுவாரஸ்யமான பதிவு ஒன்று இப்படியிருந்தது :-</p><p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 15px; margin-left: 0px; ">//…<span class="Apple-style-span" style="font-style: italic;">நா</span><span class="Apple-style-span" style="font-style: italic;">ன் அறிந்தவரை புலிப்போராளிகள் மக்களின் பாதுகாவலர்களாக, மக்கள் நலன்களுக்காகத் தங்களை அர்ப்பணிக்கிறவர்களாகவே இருந்தார்கள். இருபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமான போராளிகளும் தளபதிகளும் தம்மைக் களப்பலியாக்கியது அதன் பொருட்டே. பிரபாகரன் அவர்களும் அவ்வாறான கட்டுப்பாடுடைய இயக்கத்திற்குத் தலைவராக இருக்கத்தகு தகுதிகளோடுதான் இருந்தார். அத்தகைய தலைமையின் கீழ் தவறேதும் நடக்க வாய்ப்பில்லை என்று நான் கருதினேன். கடைசிநேரத்தில் அந்த நம்பிக்கை வீண்போயிற்றென்பதை (மக்களை அரண்களாகப் பயன்படுத்தியதில்) நானும் அறிகிறேன். அப்படி நிகழ்ந்திருந்தால் அதை எவ்விதமும் நியாயப்படுத்துவதற்கில்லை. மறுவளமாக, அவ்விதம் நிர்ப்பந்திக்கப்படுமளவிற்கு களநிலைமைகள் மோசமாக அமைந்திருந்தன என்பதும் வருத்தத்திற்குரியதே. அதனால் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட மக்களின் துயருக்கு ஈடாகச் சொல்ல ஒரு வார்த்தைதானும் இல்லை..\\</span><br /> <br /> பிரபாகரன் இன்னும் இறக்கவில்லை ஐந்தாம் படை வருகின்றது என்ற முழங்கிக்கொண்டு சிலரும், மருந்துக்கும், மண்ணுக்கும் என்று கூறிக்கொண்டு மீண்டும் பணம் சேர்க்கும் கலாச்சாரத்தைத் தொடர்பவர்களுக்கிடையில் தமிழ்நதியின் இந்த மாற்றம் எவ்வளவோ பரவாயில்லை.</p><p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 15px; margin-left: 0px; "><br />அடுத்து ஜெயமோகன் தனது தளத்தில் கமலாதாஸ் மரணம் பற்றி எழுதும் போது இப்படிக் குறிப்பிட்டிருந்தார்:-</p><p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 15px; margin-left: 0px; "> //<span class="Apple-style-span" style="font-style: italic;">..கமலாவின் பிரச்சினைகளின் ஊற்றுமுகம் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது. இந்த தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபு பட்ட ஆளுமை அவருடையது. எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் முனைப்பும் தணியாத விளம்பர வெறியும் கொண்டவர் கமலா. செய்தித்தாள்கள் தன்னைப்பற்றி எழுதுவதற்காக அவர் எதையும் செய்வார். ஆபாசமாகப் பேசுவார். ஒன்றுமே தெரியாத மழலையாக நடிப்பார். உயர்வாகக் கருதப்பட்டவைகளை உடைத்து வீசுவார். கீழ்மைகளைப் போற்றுவார். விபரீதமாகவும் தடாலடியாகவும் எதையாவது செய்வார். ஒரு சிறு சந்திப்பில் கூட அப்படித்தான் நடந்துகொள்வார்..\\</span></p><p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 15px; margin-left: 0px; "><span class="Apple-style-span" style="font-style: italic;">//..அந்த தாழ்வுனர்ச்சியினால் விளைந்த அணையாத காம இச்சை கொண்டிருந்தார் என அவரது சுயசரிதை மற்றும் குறிப்புகள் காட்டுகின்றன. தோற்றம் காரணமாக புறக்கணிக்கப்படும் பெண்ணின் ஏமாற்றப்பட்ட காமம் அது. அந்த இச்சையையே அவர் விதவிதமாக வெளிப்படுத்தினார். அல்லது அது ஒருவகை வன்மம்..\\</span></p><p style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 15px; margin-left: 0px; "> கறுப்பாக இருப்பது சிலருக்குப் பிடிப்பதில்லை, குண்டாக இருப்பதும் சிலருக்குப் பிடிப்பதில்லை, ஆனால் இவற்றை அழகல் என்று எந்த அளவுகோலை வைத்து ஜயமோகன் அளவிட்டிருக்கின்றார்? “தாழ்வுணர்ச்சியால் விளைந்த அணையாத காம இச்சை கொண்டிருந்தார்” என்ற ஜெயமோகனின் வரிகளைப் படித்த போது அதற்கு மேல் என்னால் படிக்க முடியாமல் போய் விட்டது. ஒரு எழுத்தாளர் மேல் வைத்திருக்கும் மரியாதை தணிக்கையற்ற அவரது மின்தளத்தைப் பார்க்கும் போது உடைந்து போகின்றது. எமது தளம் எமது கட்டுப்பாட்டில் இயங்கிக்கொண்டிருக்கும் போது யாரும் யாரையும் எந்த வகையிலும் மிக இலகுவாக இகழ்ந்து, கொச்சைப்படுத்தி எழுதிவிடலாம் என்பதை ஜெயமோகன் அறியாதவரும் இல்லை .பின்னர் எதற்கா இத்தனை வக்கிர வரிகள்?<br />மின்தளங்கள் பொழுதைப் போக்க நல்ல இடமாகவிருந்தாலும் நாவல்கள் வாசிக்கும் போது கிடைக்கும் மனத்திருப்தி மின்தளவாசிப்பின் போது ஒரு போதும் எனக்குக் கிடைத்ததில்லை.<br /> </p></span>கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9540420.post-60984079068676575812009-07-12T17:17:00.000-07:002009-07-12T17:29:39.212-07:00எந்த முகம்<span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"><div><br /></div><div><br /></div>இப்ப போகலாமென</span></span><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;">மனம் அடித்துக் கொள்கிறது.</span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;">83இன் பின்னர்</span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;">மறந்து போயிருந்தவையெல்லாம்</span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;">நினைவிற்குள் மீண்டன.</span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap;font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"><br /></span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"> கறுப்பு வெள்ளைப் போட்டோ ஆல்பம்,</span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"> புத்தகக் கவருக்குள் </span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"> ஒளித்து வைத்த காதல் கடிதங்கள்,</span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"> திண்ணைச் சுவரில் </span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"> எண்ணெய் பிசுக்காய்</span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"> அப்பியிருக்கும்</span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"> ஆச்சியின் அடையாளம்.</span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"> பின்முற்றம்</span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"> கக்கூஸ்</span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"> கிணற்றடி</span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap;font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"><br /></span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"> இத்தனை காலமாய் </span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"> மறந்து போயிருந்த அனைத்தையும்</span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"> கூட்டி நினைவிற்குள் மீட்க</span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"> புகாராய் எதுவும் ஒட்டமாட்டேன் என்கிறது.</span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap;font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"><br /></span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"> என் மண்</span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"> என் நாடு</span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"> என் மக்கள்</span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"> படபடக்கின்றது மனம்</span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap;font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"><br /></span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"> தங்குவதற்கு வசதியான இடம்</span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"> சப்ப “சுவிங்கம்”</span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"> சாப்பாட்டு ஒழுங்கும் </span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"> போக முன்பே செய்ய வேண்டும்.</span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap;font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"><br /></span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"> இல்லாதவர்களுக்குக் குடுக்க</span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"> கொஞ்ச பழைய உடுப்பு</span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"> சொக்லேட்டுப் பெட்டிகள்,</span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"> பென்சில்கள், ரப்பர்கள்</span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"> எல்லாவற்றையும் </span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"> பரப்பிவிட்டு</span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"> கையில் “பாஸ்போட”, “ரிக்கேற்ருடன்” விழிக்கின்றேன்.</span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap;font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"><br /></span></span></div><div><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:aAvarangal;"><span class="Apple-style-span" style="font-size:medium;"> எந்த முகத்தோடு போவதென்று தெரியாமல். </span></span></div>கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9540420.post-42976471196852669102009-05-30T08:00:00.000-07:002009-05-30T08:01:44.873-07:00இதுதான் தருணம்.<span class="Apple-style-span" style="font-family: aAvarangal; font-size: 14px; white-space: pre-wrap; "> “வணங்காமண்” என்ற பெயரில் லண்டனில் இருந்து கப்பல் ஒன்றில் மருந்துப் பொருட்களையும், உணவுப்பொருட்களையும் வன்னிமக்களுக்கு அனுப்புவதற்காக சேகரித்திருந்தார்கள். மிகப்பெரிய தொகையில் பொருட்கள் சேகரிக்கப்பட்டதோடு பணமும் தொகையாகச் சேர்ந்து கொண்டதாக அறிகின்றேன். இதுவரை காலமும் போர் தீவிரமடைந்திருந்த நேரம் அப்பொருட்களை அனுப்புவதற்குப் பல தடைகள் இருந்திருக்கும். ஆனால் தற்போது போர் முற்றுப்பெற்ற நிலையில் வன்னி மக்களுக்கு மருந்து உணவுப்பொருட்களின் தேவை அதிகம் இருக்கின்றது. லண்டன் வாழ் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செஞ்சிலுவைச்சங்கம், ஐநாசபை அங்கத்தவர்களுடன் தொடர்பு கொண்டு வணங்காமண் கப்பலுக்காகச் சேகரிக்கப்பட்ட பொருட்களையும், பணத்தையும் வன்னிமக்களுக்குச் சென்றடைவதற்கான ஒழுங்குகளைச் செய்யவேண்டும். பொருட்களையும் பணத்தையும் கொடுத்;துதவிய தமிழ் மக்கள் அப்பொருட்கள் வன்னிமக்களைச் சென்றடைவதற்கு ஒன்றாகக் கூடி செஞ்சிலுவைச் சங்கத்திடமும் ஐநாவிடமும் வேண்டுகோள் விடுத்தால் இது நிச்சயமாகச் சாத்தியப்படும். சாத்தியப்பட வைக்க வேண்டியது லண்டன் வாழ் மக்களின்; கடமை. தேசம் மின்தள உரிமையாளர்களும் வணங்காமண் ஒழுங்காளர்களுடன் தொடர்புகொண்டு அவர்களோடு இணைந்து இதனைச் செய்துமுடிக்கலாம். வன்னிமக்களுக்கு உதவுவதற்கு இதுதான் சரியான </span>கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9540420.post-72912887304059438572009-04-20T17:19:00.000-07:002009-04-20T17:26:56.122-07:00அடுத்தது என்ன-2<div><br /></div><div><span class="Apple-style-span" style="font-family: aAvarangal; font-size: 14px; white-space: pre-wrap; "> கனேடித் தமிழ் காங்கிரஸ், கனேடிய பாராளுமற்ற உறுப்பினர்களுடன் தமக்கு இருக்கும் சார்பு நிலையைப் பயன் படுத்தி, வன்னி மக்களின் பாதுகாப்பிற்காய்த் தம்மால் ஆன போராட்டங்களை ஆர்ப்பாட்டங்கள் அற்ற முறையில், கறுப்புக் கொடியுடன் ஆரம்பித்து வைத்தது. சிங்கள அராஜக அரசு வன்னி மக்கள் மேல் நடாத்தி வரும் மனிதாபதமற்ற தாக்குதல்களைக் கண்டித்து மக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு சிங்கள அரசின் மேல் அழுத்தங்களைக் கொடுப்பதன் மூலம் உடனடிப் போர் நிறுத்தத்தைக் கொண்டு வருவதுடன், உலகநாடுகளிடமிருந்து இலங்கை அரசு பெற்று வரும் உதவிகளைத் தடை செய்வது போன்றவையே இவர்களது போராட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தன. இப்போராட்டங்கள் மூலம் ஜ.நா விற்கு அழுத்தம் கொடுத்து தமிழ் மக்களுக்கு சார்பாக எதையாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் இவர்களிடம் இருந்து என்று அறிய முடிந்தது. கனேடி பாரளுமன்ற உறுப்பினர்களிடம் சிறிதளவேனும் தமிழ் மக்களுக்கான உதவியைப் பெற வேண்டும் எனில் அவர்களது சட்டங்களை மதிக்க வேண்டும் என்பதில் கனேடியத் தமிழ் காங்கிரஸ் மிகவும் விழிப்போடிருந்தது. ஆரம்ப காலப் போராட்டங்கள் கறுப்புக் கொடிகளுடன் அமைதியான முறையில் நடைபெற்றதால் கனடா வாழ் தமிழ் மக்களைப் பற்றிய ஒரு நல்லெண்ணத்தைக் கனேடிய அரசிற்கு நிச்சயம் அது வழங்கியிருந்தது. ஆனால் எமது மக்கள் செய்த பாவமோ என்னவோ திடீரென்று அனைத்துப் போராட்டங்களும் திசைமாறி தமிழர்கள் என்றாலே சட்டத்தை மதிக்கத் தெரியாத வன்முறையாளர்கள் என்று உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாக முத்திரை குத்தும் அளவிற்கு தமிழ் மக்களுக்கான போராட்டம் இப்போது திசைமாறி விட்டது. தாம் என்ன செய்கின்றோம் என்று விளக்கமில்லாது வெறும் உணர்வுகளால் உந்தப்பட்டு, தம் மனச்சாட்சிக்காய், தம் பங்கிற்காய் எதையாவது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பல பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களும் இப்போராட்டங்களின் இணைந்திருக்கின்றார்கள் என்பதுதான் மிகவேதனையா விடையம்.</span></div><div><span class="Apple-style-span" style="font-family: aAvarangal; font-size: 14px; white-space: pre-wrap; "> <div style="text-align: center;">----------------------</div> எமது நாட்டில் அடங்காத் துயரில் இருக்கும் மக்கள் தனது அன்றாட தேவைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களிடம் மிஞ்சியிருப்பது உயிர் ஒன்று மட்டுமே. அவர்களுக்குத் தேவையான உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உடனடி போர்நிறுத்தம் தேவை எனின் நாம் கையேந்தும் நாடுகளின் சட்டங்களை மதித்தே ஆக வேண்டிய நிலையில்தான் நாம் இன்று இருக்கின்றோம். கனேடியத் தமிழ் வானொலி ஒன்றின் கலந்துரையாடலை அண்மையில் கேட்டேன். வன்னி மக்கள் தமது சொந்த நிலத்தில்தான் வாழ வேண்டும் அவர்கள் வெளியேறத் தேவையில்லை என்று கனேடிய அரசியலில் ஈடுபட்டிருக்கும் தமிழர் ஒருவர் கூறினார். பண வசதி இருந்ததால் தனது சொந்த நாட்டை விட்டு, ஊரை விட்டு மூட்டை முடிச்சுடன் ஓடிவந்து கனடாவில் வாழும் இவர்கள் போன்றோர், இங்கு வந்து இறங்கியவுடன் முதலில் செய்தது மிஞ்சியிருக்கும் தமது சொந்தங்ளை இங்கே இறக்கியதுதான். தமது பிள்ளைகளுக்குத் தடிமன் வந்தால் கூடத் துடித்துப் போகும் இவர்கள், தமது உயிரைக் காத்துக் கொள்ள நாட்டை விட்டுக் கடல் கடந்து ஓடி வந்தவர்கள், வன்னி மக்கள் அனைத்தையும் தொலைத்துவிட்டு, மிஞ்சியிருக்கும் உயிர் ஒன்றையே கையில் கொண்டு எங்காவது போய்த் தப்பித்துக் கொள்ளலாமா என்று தவித்திருக்கும் போது அவர்கள் மேல் அக்கறை கொண்டவர்கள் போல் காட்டிக்கொள்ளும் புலம்பெயர்ந்த தமிழர்கள் வன்னிவாழ் மக்களை வன்னியை விட்டு அசையக் கூடாது என்பது விந்தையாக உள்ளது. கனடாவில் வாழப் பிடிக்காமல் திரும்பியவர்கள் கூட இந்தியா போன்ற நாடுகளில் குடியேறியிருக்கின்றார்ளே தவிர வன்னியில் குடியேற அவர்களும் தயாராக இல்லை. வன்னிவாழ் மக்கள் பலர் பல ஊர்களிலும் இருந்து அங்கு வந்து குடியேறியவர்கள் என்பதை இவர்கள் அறியாதவர்களுமல்லை. இதன் பின்புலம் என்ன என்பது அனைவரும் அறிந்ததே. <div style="text-align: center;">------------------------</div> எம்பங்கிற்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற மனப்போராட்டத்தில் பல அமைப்புக்களும் தனி நபர்களும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இப்போது உள்ளார்கள். ஒரு அரசியல் ஆய்வாளரிடம் இதுபற்றிக் கேட்டேன். என்ன செய்ய முடியும் என்று நினைக்கின்றீர்கள்? என்று அவர் என்னிடம் திருப்பிக் கேட்டார். என்னிடம் பதில் இல்லை. நீங்கள் என்ன செய்தீர்கள் என்று யாராவது கேட்டால் சொல்லிக்கொள்ள எதையாவது செய்ய வேண்டுமா? <div style="text-align: center;">------------------------</div> அனைத்து நாடுகளிலும் புலம்பெயர்ந்தோர் மாபெரும் போராட்டங்களை நடாத்தி வருகின்றார்கள் என்று பெருமை கொள்ளும் மக்களுக்கு ஏன் இன்னும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களை வந்து சந்தித்து உரையாற்றுகின்றார்கள் இல்லை என்ற கேள்வி எழுந்த வண்ணமே இருக்கின்றது. (குறிப்பாகக் கனடாவில்) இது பற்றி தமிழ் வானொலியில் உரையாடிய ஆய்வாளர் ஒருவர், எமது அடையாளமான கொடியை நாங்கள் கையில் ஏந்தியிருப்பதை அவர்கள் ஏ<br />ற்றுக்கொள்கின்றார்கள் இல்லை என்றார். தொடர்ந்து அவர் கூறுகையில் தமிழர்கள் மிகவும் திறமையும் புத்திக் கூர்மையும் கொண்டவர்கள், கனேடியப் பாரளுமற்ற உறுப்பினர்களைத் கனேடியத் தமிழர்கள் தான் மெல்ல மெல்ல வளர்த்தெடுக்க வேண்டும் என்றார். வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெற இருக்கும் மாபெரும் உரிமைப் போரின் போது கனேடிய அரசியல் வாதிகளின் போக்கில் கொடிகளை மடித்து வைத்து விடுவோம், அவர்கள் வந்து உரையாடி எம்மக்களுக்காக எதையாவது செய்வதற்கு உடன்படுகின்றார்களா என்று பார்ப்போம் என்று இந்த ஆய்வாளர் தயங்கித் தயங்கி வானொலியில் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து வந்து உரையாடிய உறவுகள் (தற்போது நேயர்கள் அல்ல உறவுகள்) தாம் தமிழரின் அடையாளமான கொடியை ஒருபோது கைவிடமாட்டோம் என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்கள். இல்லை நாங்களும் சிறிது விட்டு<br />க் கொடுத்தால்தான் கனேடிய அரசும் சிறிது விட்டு இறங்கி வரும் என்று கெஞ்சாத குறையாக இவர் கேட்டுக் கொண்டார். வன்னி மக்கள் மேல் கனடாவாழ் தமிழ் மக்களுக்கு எவ்வளவு அக்கறை இருக்கின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். <div style="text-align: center;">----------------------</div> </span></div>கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9540420.post-2313582133878371492009-04-10T20:41:00.000-07:002009-04-10T21:13:21.483-07:00அடுத்தது என்ன?ஒரு புறம் வேடன், மறுபுறம் நாகம் என்ற நிலையில் இன்று வன்னி மக்கள் படும் வேதனை தமிழ் தொலைக்காட்சிகளிலும், மின்தளங்களிலும் பார்த்து மௌனம் ஒன்றைத் தவிர வேறு வழியில்லா நிலையிலும், ஒருநிலைக்கு மேல் மௌனித்திருக்கவும் முடியா நிலையிலும் புலம்பெயர்ந்த எத்தனையே தமிழ் மக்கள் தங்களுக்குள் புலம்பித்தீர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.<br />UN இடமோ இல்லையேல் தாம் புலம்பெயர்ந்து வாழும் நாட்டின் அரசிடமோ வன்னி மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற உதவுங்கள் என்று கையேந்த முடியாத நிலையில் உள்ளார்கள் இவர்கள். காரணம் பயங்கரவாத அமைப்பென்று தடை விதித்த பின்னரும் “அரசே உனது தடை எங்களுக்கு ஒரு வடை” என்று கோஷம் போட்டு தம்மை அகதிகளாக ஏற்றுக்கொண்ட அரசாங்கத்திடமே நாம் புலிக்கொடிகளோடுதான் எமது பேரணியை நடாத்துவோம் என்று திமிருடன் மோதுகின்றார்கள். நீங்கள் புலிக்கொடிகளோடு வந்தால் நாம் பேச்சு வார்த்தைக்கு வரமாட்டோம் என்று ஓட்டாவா பாராளுமன்றத்தின் முன்னால் இடம்பெற்ற பேரணியின் போது வெளியில் வந்து உரையாட இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மறுப்புத் தெரிவித்திருந்த போதிலும் அவர்கள் வராவிட்டால் கிடக்கட்டும் நாங்கள் கொடியோடுதான் போவோம் என்று அறிலித்தனமாக நடந்து கொண்ட இவர்களுக்கு, தாம் இழந்தது எதை என்று புரிந்து கொள்ளும் சிற்றறிவு கூட இல்லாமல் போனதுதான் வேதனை. கனேடிய அரசு இதனால் எதை இழந்தது? இவர்களுடைய வோட்டையா?<br /><br />விடுதலைப்புலிகள் மேல் விதிக்கப்பட்ட தடையை நீங்கும் முகமாக நாகரீகமான முறையில் கோரிக்கைகளை வைத்துக் கொண்டே, கனேடிய சட்டத்தை மதித்து(அது உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ - எமது மக்களுக்காக இதையாவது செய்யாவிட்டால் நீங்கள் தமிழர் என்று சொல்வதில் எந்தப் பெருமையும் இல்லை) எமது மக்களின் அழிவைத் தடுக்க கறுப்புக்கொடிகளோடு இந்தப் பேரணிகளை நடாத்தியிருந்தால் தமிழ் மக்கள் மேல் அரசிற்கு சிறிதளவேனும் கரிசனை வந்திருக்கும். அதை விடுத்து எமது தலைவன் பிரபாகரன், என்று தொண்டை கிழியக் கத்திய வண்ணம் புலிக்கொடிகளை சிறுவர் கைகளில் கொடுத்து ஆட்ட வைத்து கனேடிய அரசை வம்புக்கு இழுப்பதால் தமிழ் மக்களை வன்முறையாளர்கள் என்று மேலும் கணிப்பதைத் தூண்டுவதாகவே அமையும். பயங்கரவாதிகள் என்ற தடை விடுதலைப் புலிகள் மேல் இருக்கும் வரை அதனை ஆதரிக்கும் அனைத்தும் சட்ட விரோதமாகப் பார்க்கப்படும். சட்டத்தை மீறு என்று கனேடிய அரசிடம் வேண்டுகின்றார்களா இவர்கள்?<br /><br />வன்னி மக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதை தற்போது புலம்பெயர் தமிழ் மக்கள் விரும்பவில்லை. ஆரம்பத்தில் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்கள், திடீரென மாறி தற்போது பேரணிகளில் போது எமது தலைவர் பிரபாகரன் எமக்கு வேண்டும் தமிழ் ஈழம் என்றே குரல் கொடுக்கின்றார்கள். மக்களும் இயக்கமும் ஒன்றே பொதுமக்களைப் பிரித்தெடுத்து விட்டால் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அரசிற்கு சில மணிநேரங்கள் போதும் என்பதால், மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை தமது இயக்கத்தைக் காக்க வேண்டும் என்பதே புலம்பெயர் மக்களின் ஒரே குறிக்கோள். புலம்பெயர்ந்த மண்ணில் வாழும் வரை இவர்கள் கோஷம் இதுவாகத்தான் இருக்கும்.<br /><br />அழிவது வன்னி மக்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தமது மனச்சாட்சியின் உறுத்தலைத் தணிக்கப் பணத்தை இயக்கத்திற்குக் கொடுத்து விட்டுச் சுகபோகமாக வாழப்பழகிக் கொண்டவர்கள். தற்போதைய அரசியல் சூழல் அவர்களின் சுகபோக வாழ்க்கை முறையில் எந்த வித மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை. இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி பணம் பண்ணும் வியாபாரிகள்தான் அதிகரித்திருக்கின்றார்கள். வீட்டிற்கு இரண்டு மூன்றென்று புலிக்கொடிகளும், ரீசேட்டும், கார் ஒட்டிகளும் வியாபாரிக்களுக்கு பாரிய அளவில் வியாபாரத்தைக் கூட்டியிருக்கின்றன. (இயக்கத்திற்கு அனுப்பப் பணம் சேர்க்கின்றேன் என்று இனிமேலும் காதில் பூ சுத்த முடியாது) அதே வேளை எந்த அடிப்படை சட்ட அறிவும் இல்லாமல், யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடும் அறிவிலித் தனத்துடன் “வணங்காமண்” என்ற கப்பல் உணவுப் பொருட்களோடு லண்டனில் இருந்து ஈழம் நோக்கிச் செல்கின்றதாம் கனடாவில் இருக்கும் நாங்களும் ஏன் கப்பல் விடக் கூடாது என்று ஏங்குகின்றார்கள் சிலர்.<br />முப்பது வருட போராட்டத்தில் மிகப் பிரமாண்டமாக பேரணிகளைத் தற்போதுதான் உலகெங்கும் தமிழர்கள் நடாத்துகின்றார்கள். விடுதலைப்புலிகள் மேல் தடை விதிக்கப்பட்ட போது கூட சின்னதாக ஒரு சலசலப்போடு நிறுத்திக் கொண்டவர்கள், தொடர்ந்து சிங்கள இராணுவம் தமிழ் மக்கள் மேல் பிரயோகித்து வரும் வன்முறைகளுக்குப் பெரிதாகக் குரல் கொடுக்கவுமில்லை. அப்போதெல்லாம் கனடாவின் வாழ்க்கையில் இன்புற்றிருந்த இவர்கள் தற்போது விடுதலைப் புலிகள் அழியும் நிலைக்கு வந்த போதுதான் தொண்டை கிழியக் கத்துகின்றார்கள். இத்தனை பெரிய போராட்டங்களை ஏன் இவர்கள் முன்பு நிகழ்த்தாமல் போய் விட்டார்கள்? நிகழ்த்தியிருந்தால் எப்போதே உலக நாடுகளின் உதவியை நாடியிருந்தால் ஏதாவது ஓரு சுமூகமான தீர்வு எமக்குக் கிடைத்திருக்கலாம் அல்லவா? அப்போதெல்லாம் தமது சொந்தங்களைப் பாதுகாப்பாக எப்படி வெளிநாட்டிற்கு எடுக்கலாம் என்பதில்தான் அவர்கள் கவனம் இருந்தது போலும்.<br /><br />மின்தளங்களில் சிங்களமக்களின் வாசகங்களைப் பார்க்கும் போதுதான் உறைக்கின்றது. இனிமேல் எமக்கென்று சொல்லிக் கொள்ள ஒரு இடமில்லை. புலம்பெயர்ந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒட்ட முடியவில்லை. தமிழ் என்று குரல் கொடுத்துக் கொண்டு தமிழ் மக்களின் அழிவிலும், மண்ணின் அழிவிலும் வியாபாரம் செய்து தம்மைச் செழுமைப் படுத்திக் கொள்ளும் சிறுமைத்தனங்களைக் காணும் போது அடக்க முடியாத சினம் எழுகின்றது. அது மட்டும்தான் எம்மால் முடிகின்றது. இத்தனைக்கு அவர்கள்தான் தமிழ் உணர்வாளர்கள் என்ற பெயரோடு உலவுகின்றார்கள்.<br /><br />இத்தனை வருட கால போராட்டத்தில், இயக்கத்திடம் பாரிய திட்டம் எதுவும் இருக்கவில்லை. ஆயுதங்களின் மிரட்டல்கள் தனிநாட்டைச் சுலபமாகப் பெற்றுத் தந்து விடும் என்று நம்பினார்கள். சிங்கள அரசோ மிக நிதானமாக இனச் சுத்திகரிப்பை திட்டம் போட்டு உலக நாடுகளில் துணையோடு அமுல் படுத்தி வருகின்றது. வடக்கில் பல இடங்களில் இராணுவம் பெரிய பண்ணைகளை ஆரம்பித்து தமிழ் மக்களை வேலைக்கமர்த்தி அவர்களுடன் இணைந்து வேலை செய்கின்றது. வவுனியாவிலும், இனிமேல் கைப்பற்றப்பட்ட வன்னிப் பிரதேங்களிலும் இதே செயல்திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வர உள்ளது. பாடசாலைகள், மருத்துவமனைகளை இப்பிரதேசங்களில் அமைத்துக் தமிழ் மக்களுடன் சுமூகமான ஒரு நிலையை உருவாக்கிய பின்னர் பாடசாலைகளில் மெல்ல மெல்லத் தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்து காலப் போக்கில் தமிழை அழித்து இலங்கை எனும் நாடு தனிச் சிங்கள நாடாக மாற்றுவதே சிங்கள அரசின் திட்டம் என்றார் ஒரு தமிழ் அரசியல் ஆய்வாளர்.<br /><br />தான் சாய்ந்தாலோ தடுமாறிப் போனாலோ துணையாய்ப் பக்க பலமாய் தன்னோடு இணைந்து போராட விடுதலைப்புலிகள் இயக்கம் இன்னொரு வளத்தைத் தயார்படுத்தி வைக்கவில்லை. இன்று தனிக்கல்லில் கட்டப்பட்ட உயர்ந்த கட்டிடமாய் வளர்ந்து நிற்கும் இயக்கத்தின் அஸ்திவாரம் ஆட்டம் காணும் நிலையில், முற்று முழுதாகச் உடைந்து சுக்கு நூறாகப் போகும் நிலை தான் மிஞ்சி உள்ளது. விடுதலைப்புலிகளில் வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் குளிர்காய்ந்த புலம்பெயர் மக்களே அதிகம். வெளிநாடுகளில் இருந்து புலிக்கொடிகளோடு கத்தி ஒன்றும் நிகழப் போவதில்லை என்பது இவர்களுக்கு உறைக்கவும் போவதில்லை. ஓட்டாவா பத்திரிகை ஒன்றில் தமிழ் மக்கள் பாராளுமன்றத்தின் முன்னாள் நாடாத்தும் போராட்டம் பற்றிக் குறிப்பிட்டு விட்டு, வீதிகளில் வாகனங்களுக்கும், பிரயாணிகளுக்கு இவர்கள் இடஞ்சலாக உள்ளார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கின்றது. அதே வேளை இந்தியாவில் சீமான், வைகோ போன்றோரின் வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கள் தமிழ்நாட்டு மக்களிடம், பொதுவாகக் குடும்பப் பெண்களிடம் சினத்தைதான் வரவழைக்கின்றது. எந்த நாடும் தனது சீர்நிலை குலைவதை விரும்பவதில்லை. அதனைத் தூண்டும் பேச்சுக்களையும் அது அனுமதிப்பதில்லை. சிங்கள அரசிற்குத் தெரியும் எந்த ஒரு உலகநாடும் தனது இராணுவத்தை விடுதலைப்புலிகளுடன் இணைத்துக் கொண்டு தன்னை அழிக்கப் போராடாது என்று. அத்தோடு புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்களின் அழுத்தம், உலக நாடுகள், UN ஆகியவற்றின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தின் அது வன்னி மக்களைப் பாதுகாப்பாக போர் வலையத்திலிருந்து வெளியேற்றுவதாக மட்டுமே அமைந்திருக்கும். அதைத்தான் சிங்கள அரசும் வேண்டி நிற்கின்றது.<br /><br />புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் ஆயுதங்களுக்குப் பணத்தை மட்டும்தான் அனுப்ப முடியும். தாமும் இணைந்து கொண்டு இராணுவத்தைப் பலப்படுத்துவோம் என்று பேச்சுக்காவது இவர்கள் எண்ணினார்களா? கேட்டால் இங்கிருந்து வேலை செய்யவும் ஆட்கள் தேவை என்று முறைத்து விட்டு மறைந்து விடுவார்கள். இன்று புலம்பெயர்ந்த மக்களின் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட அத்தனை ஆயுதங்களும் சிங்கள இராணுவத்தின் கைகளில் அகப்பட்டு தமிழ் மக்களையே அழிக்க உபயோகிக்கப்படப் போகின்றது.<br /><br />இந்திய இலக்கியவாதி ஒருவரிடம் உரையாடிக்கொண்டிருக்கும் போது அவரின் தகவல்படி சிங்கள அரசு தனது உறுப்பினர்களை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிற்கும் அனுப்பி, அங்கிருக்கும் அரசியல்வாதிகள், முற்போக்குவாதிகள், பத்திரிகையாளர்களை சந்திக்கும் படி செய்து, விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றுமுழுதான ஒரு பயங்கரவாத இயக்கம், இதனால் தமிழ் மக்கள், சிங்கள மக்கள் அனைவருக்குமே பாதுகாப்பு இல்லை என்று உரை நிகழ்த்தி அவர்களை தம் சார்ப்பாக்கியிருக்கின்றது. அதே போல் உலக நாடுகள் பலவற்றுடனும் சந்திப்பு நிகழ்த்தியிருக்கினறது, ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கம் உலக நாடுகளில் ஆதரவைப் பெற்று கொள்வதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. தான் ஒரு மலையாள சஞ்சிகையில் தொடர்ந்து ஈழத்தமிழர்களில் நிலை பற்றி விளக்கி எழுதி வந்ததாகவும், கேரள அரசியல்வாதி ஒருவர் தன்னுடன் தொடர்பு கொண்டு தாங்கள் தவறான தகவல்களை மக்களுக்கு கொடுக்கின்றீர்கள் என்று கூறித் தன்னுடன் உரையாடியதாகவும் அந்த வேளையில் சிங்;கள அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அரசியல் பயணம் நிகழ்த்தியிருக்கும் தகவலைத் தான் அறிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.<br /><br />அடுத்தது என்ன?கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-9540420.post-79380464073623388822008-11-15T13:03:00.000-08:002008-11-15T13:55:14.976-08:00காஞ்சிவுரம்இயக்குனர் பிரியதர்சனின் 9வருட உழைப்பில் உருவாகியிருக்கும் கலைத் திரைப்படமான “காஞ்சிவுரம்” அவரது கனவுத் திரைப்படம் என்றும் அவர் கூறியுள்ளார். இத்;திரைப்படம் 33வது ரொறொன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் “விசா” திரையீட்டுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தது. முன்பு பல தமிழ் திரைப்படங்கள் ரொறொன்டோ சர்வதேச திரைப்படவிழாவிற்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் பிரியதர்சனின் “காஞ்சிவுரம்”; முதல் முறையாக “விசா” திரையீட்டுக்காத் தெரிவு செய்யப்பட்டு முக்கியத்துவம் பெறுகின்றது. இந்நிகழ்விற்காக இயக்குனர் பிரியதர்சன், படத்தின் கதாநாயகன் பிரகாஷ் ராஜ், மகளாக நடித்த ஷாமு, பிரபல கலைப்பட இயக்குனரும் காஞ்சிவுரம் திரைப்பட தயாரிப்பு உதவியாளருமான சபு சிரில் போன்றோர் திரைப்பட வெளியீட்டில் கலந்து கொண்டார்கள். திரைப்பட வெளியீட்டைத் தொடர்ந்து கனேடிய தமிழ் காங்கிரஸ் திரைப்படக் கலைஞர்களை கௌரவம் செய்த நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள், ரிவிஐ தொலைக்காட்சி தொழிலாளர்கள், தமிழ் திரைப்பட ஆவலர்கள், பலரும் கலந்து கொண்டார்கள். <br /><br /><img src="http://www.weblogimages.com/v.p?uid=thamilachi&pid=611756&sid=zNU50clru7" border=0> <br /> <br />காஞ்சிபுரம் நகரத்தை மையமாகக் கொண்டு 1940களில் காஞ்சிபுரம் பட்டை நெசவு செய்யும் நெசவாளிகளின் வாழ்வை திரைப்படமாக்கியிருக்கின்றார் இயக்குனர். வளர்ந்து வரும் நாடுகளின் முக்கிய பிரச்சனையான தொழிலாளி வர்க்க சுரண்டலை, காஞ்சிப் பட்டை நெசவு செய்யும் வெங்கடம் தனது மகளைத் திருமணத்தின் போது காஞ்சிப்பட்டைச் சீதணமாக் கொடுத்து அனுப்ப வேண்டும் என்ற பகல் கனவு மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றார். பட்டைக் கண்ணால் பார்க்கவும், தொட்டு உணரவும், நெசவு செய்யவும் மட்டுமே காஞ்சிபுரத்து நெசவாளிகள் அனுமதிக்கபட்டிருகின்றார்கள். தாம் நெசவு செய்யும் பட்டை வாங்கி உடுத்திப்பார்க்க அவர்கள் பொருளாதார நிலை மட்டுமல்ல, வர்க்கப்பாகுபாடும் அவர்களுக்கு இடம்கொடுக்கப் போவதில்லை. உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு விடிவு வேண்டுமெனின் அங்கே ஒரு போராட்டம் நிச்சயம் தேவை. நெசவாளிகள் பற்றி எழுதுவதற்கு வந்ததாகக் கூறிக்கொண்டு அந்த ஊருக்கும் நுழையும் எழுத்தாளக் கொம்யூனிச வாதியின் உரையில் கவரபட்ட வெங்கடம், முதலாளியை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்யும் துணிவோடு செயல் படுகின்றான். மிகக் குறுகிய காலத்தில் ஒரு மனிதன் கொம்யூனிசக் கொள்கையில் கவரப்பட்டு வேலை நிறுத்தம் செய்யும் நிலைக்குத் தள்ளப்படலாம், ஆனால் அவனை ஒரு முழுமையான கொம்யூனிச வாதியாக எப்படி இயக்குனர் கணிக்க முனைந்தார். அதே வேளை நேர்மையானவனாகக் காட்டப்பட்ட வெங்கடத்தின் நண்பன் கூட, வெங்கடம் திருடன் என்று தெரிந்த பின்னர் தனது மகனின் திருமணத்தை நிறுத்தி விடுகின்றான். காலணி ஆட்சியில் கொம்யூனிசக் கொள்ளை தடைச் சட்டத்தின் கீழ் கொல்லப்படுகின்றார் உண்மையான கொம்யூனிச வாதியான எழுத்தாளர். இங்கே இயக்குனர் பிரியதர்சனின் சுலோகமான ““Communists who preach a lot and practice little” by Priyadarshan. <br /><br /><img src="http://www.weblogimages.com/v.p?uid=thamilachi&pid=611758&sid=lwF28lxIJ7" border=0> <br />இந்துமதத்தின் படி, பட்டு வாழ்வில் இரு முக்கிய நிகழ்வுகளில் பங்கெடுக்கின்றது. திருமணத்தின் போது கூறைப் பட்டாக தாம்பத்திய உறவைத் தொடக்கி வைக்கும் பட்டு, மரணத்தின் போது அதன் தூய்மையால் மனித ஆவியை சொர்க்கத்திற்கும் அழைத்துச் செல்கின்றது. தன் வாழ்நாள் முழுவதையும் பட்டுச் சேலையைத் திறம்பட நெய்து பெயர் பெற்ற தனது தந்தை இறந்த போது உடலை மூடுவதற்கு ஒரு சிறு பட்டுக்கு வக்கில்லாமல் போய் விட்டோமே என்று வருந்தும் வெங்கடம் தன் வாழ்வில் பட்டை மகளுக்கு சீதனமாக்கி அனுபவிக்க வேண்டும் என்ற வேண்டாத ஆசை அவன் வாழ்வை அழிப்பதுதான் காஞ்சிவுரத்தின் சுருக்கமாக திரைக்கதை.<br /><br />பல ஜனரஞ்சக தமிழ் மலையாளத் திரைப்படங்களை இயக்கியிருக்கும் பிரியதர்சன் தனது முதல் கலைத் திரைப்படத்தை தரமானதாக வழங்கியிருக்கின்றாரா? வர்த்தகத்தை மட்டும் மனதில் கொண்டு எடுக்கப்படும் ஜனரஞ்சக தமிழ் திரைப்படங்களுடன் காஞ்சிவுரத்தை ஒப்பிட்டால் மிகவும் தரமானது, வித்தியாசமானது என்று பார்வையாளர்கள் கூறலாம். ஆனால் ரொறொன்டோ சர்வதேச திரைப்படவிழாவில் கலந்து கொண்டு பல வேற்று மொழித் திரைப்படங்களைப் பார்வையிட்டவள் என்ற முறையில் காஞ்சிவுரம் திரைப்படம் ஒரு திரைப்பட விழாவிற்கு எதையெல்லாம் கொடுத்தால் தெரிவு செய்வார்கள் என்பதை மனதில் கொண்டு வலிந்துசெய்யப்பட்ட திரைப்படமாகவே காணப்படுகின்றது. சென்ரிமென்டலாகக் காலணித்துவக் காலம், மனைவி, மகள் என்று கதைக்கு வேண்டாத ஒட்டாத இழப்புக்கள் இவைதான் காஞ்சிவுரத்தில் விஞ்சி நிற்கின்றது. <br />ஒரு நெசவாளி தான் நெய்யும் பட்டில் ஒன்றை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று ஏங்குகின்றான். சென்ரிமென்ரையெல்லாம் தூக்கிப் போட்டு விட்டு, இந்த ஒரு கருபோதும் தரமான திரைப்படத்தை வழங்க. இவனுக்குப் பட்டுக் கிடைத்து விடுமா என்று பார்வையாளர்கள் மனம் நெசவாளியோடு சேர்ந்து பதைக்க வேண்டும். பார்வையாளர்களின் மனதில் அந்த ஏக்கத்தைத் திரைப்படம் ஏற்படுத்தாத வரையில் அத்திரைப்படம் எங்கோ தவறி விட்டதென்றே கூற வேண்டும். <br />சென்ரிமென்ட் மனதைப் பிளிந்த காலம் எப்போதோ மலையேறிப் போய் விட்டது. இப்போதெல்லாம் எந்த கொம்பிரமைஸ்சும் இல்லாமல், மிக யதார்த்தமாக வாழ்வைக் கலைப்படமாக்குகின்றார்கள், யப்பான், இந்தோனேசியா, ஈரான், மற்றும் பல ஐரோப்பிய நாடுகள்.கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-9540420.post-74136482174085861812008-08-19T09:31:00.000-07:002008-08-19T13:07:44.371-07:0027வது பெண்கள் சந்திப்பும் கனேடிய இலக்கியச் சந்திப்பும்.தனிமனித சுதந்திரத்தின் அனைத்து அடையாளங்களிலிருந்தும் பெண் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றாள். ஆண் முதன்மையானவன் முழுமையானவன், உலகத்தின் தலைவன். அவன் உலகை நிறைவிற்குக் கொண்டு செல்லும் பெண் என்பவள் அவன் அக புற தேவைகளை உணர்ந்து நிறைவேற்றும் ஒரு துணை, அவன்; உபயோகப்படுத்தும் ஒரு பொருள். பெண்ணும் தன் இச்சார் நிலையை ஏகோபித்த மனதோடு ஏற்றுச் சந்தோஷித்திருக்கின்றாள். பெண் ஒரு துணைப்பொருள்<br /><br /><img src="http://www.weblogimages.com/v.p?uid=thamilachi&pid=606480&sid=AJR99hLXY7" border=0> <br /><br />பெண்ணியம் பெண்ணியவாதிகள் பெண்சுதந்திரம் என்றால் என்ன? பெண்களுக்கு என்ன பிரச்சனை இருக்கின்றது? எதற்காக பெண்கள் சந்திப்பு? <br /><br />பெண்ணியவாதிகள் தங்கள் பெண்மைத் தன்மையை இழந்து ஆண்கள் போல் மாற முயல்கின்றார்கள் என்பது பலரின் தாக்குதல். பெண்கள் இருப்பே கேள்விக்குரியதாகியிருக்கிறது என்கின்றார்கள். சில பெண்கள் பெண்ணின் பலவீனத்தை மறுக்கும் அதே தருணத்தில் ஓர் ஆண் தொண்டனுக்கு நிகராகக் தன்னை அவள் கற்பிதம் செய்துகொள்வதும் உண்டு. இதற்குக் காரணம் ‘பெண்மை’ கருத்தியல் அவர்களுக்கு ஏற்படுத்திய மனவுளைச்சல். திரைகளிலும், கதைகளிலும் சித்தரிக்கப்படும் பண்பாட்டுப் பெண் போல் தானாகி விடவேண்டுமோ என்ற அச்சத்தில் தன்னை ஒரு ஆண் போல் வரிந்து கொள்கின்றாள்.<br /><br />ஒரு பெண் தான் பெண் என்பதை இழிவாகவும் ஆணை பிரதானன், மேலானவன் ஆக ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவள் தன்னை ஓர் ஆணாக உருவகிக்க முயலலாம். எனவே அனைத்துப் பெண்ணியவாதிகளின் சிந்தனையிலிருந்து நான் பேசிவிட முடியாது. ஆண் குறி என்று ஒன்று பிறப்பில் கிடைத்து விடுவதனால் அவன் பெண்ணிலிருந்து அனைத்து தகுதிகளாலும் மேம்பட்டவன் என்று நினைக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அதே வேளை என்னை ஒரு கருப்பையாகவோ சூலகமாகவோ மட்டுமே ஆண் பார்க்கின்றான் என்று அலறும் பெண்களின் கருத்தோடும் ஒத்துப் போகமுடியாமல் இருக்கின்றது. எந்த ஒரு ஆணாலும் முடியாத பிரத்தியேகமான ஒரு உயிரைக் கருப்பைக்குள் தாங்கும் வல்லமை பெண்ணிற்கு இருக்கின்றது. எமது சமூகப் பார்வையில் பெண் உடல் ஆண்களுக்குச் சொந்தமானது, அவர்களின் சந்ததி விருத்திக்காக உருவாக்கப்பட்டது பெண் உடல் கோட்பாட்டிலிருந்து பெண்கள் தம்மை விடுவித்துக் கொண்டு தமது உடலைக் கொண்டாடும் பட்சத்தில் கருப்பையும் சூலகமும் அவளைச் சிறை வைக்காது.<br /><br />புலம்பெயர் பெண்களை நோக்கின் வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிக சுதந்திரம் பெற்றவர்களாகக் கணிக்கப்படுக்கின்றார்கள். பொருளாதார சுதந்திரம் அடையினும் இவர்களது உடல் உழைப்பு அலுவலக வீட்டு வேலை என இரட்டிப்பாக்கப் படுகின்றது. உயர் பதவியற்ற அலுவலக வேலை செய்யும் பெண்களிடம் அவர்கள் திறனை விட அகத்தோற்றமே முக்கியப்படுத்தப்படுகின்றது. இது அவர்கள் செலவை இரட்டிப்பாக்க, அவள் மீண்டும் செலவை சமநிலைப்படுத்த ஒரு ஆணின் துணையை வேண்டிநிற்கின்றாள்.<br /><br />குடும்பம் என்ற கட்டமைப்பு ஆண்களைச் சௌகர்யப்படுத்துவதாகவும், பெண்ணை அடிமைப்படுத்துவதாகவுமே அமைந்திருக்கின்றது. இந்நிலை தற்போதைய இளம் சமுதாயத்தை சிந்திக்க வைப்பதனால் திருமணத்தைக் கண்டு அவர்கள் அஞ்சுகின்றார்கள்<br /><br />தமிழ்திரை நிகழ்த்திக் காட்டும் பெண்மைச் செயல்பாட்டைப் பூரணப்படுத்துவதில் இன்னும் சில பெண்கள் திருப்தி அடைகின்றார்கள். சின்னத்திரை புகலிடத்துப் பெண்கள் அனைவரின் வாழ்விடங்களையும் கொள்ளை கொண்டுவிட்டது. புரிதல்களுக்கப்பாற்பட்ட புதிய கலாச்சாரத்திற்குள் எம் அடுத்த சந்ததியர் மூழ்கிப் போகின்றனர்.<br /><br />பெண்ணியவாதி சிமோன்தி பூவா கூறுகின்றார் “தனியொருவன் அல்லது தனியொருத்தி, காலங் காலமாய் தொடரும் பெண்ணின் பிற்போக்குத் தனத்தையும் அடையாளத்தையும் மறுப்பதென்பது நிகழ் காலத்தில் இவர்கள் இருப்பை மறுப்பதாகாது. அன்றியும் இம்மறுப்பு, சம்பந்தப்பட்டவர்களின் விடுதலைக்கு உதவாததோடு, உண்மையைக் கண்டு ஒளியும் தன்மையது.<br />மானுடமென்பது, பெண்ணினமும் சேர்ந்ததுதானென்பது, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை இன்றைக்கும், கடந்தகாலங்களை போலவே, மனிதரெண்ணிக்கையில் ஏறத்தாழ சமபாதியாக பெண்ணினமிருக்கிறது. இந்த நிலையில், ‘பெண்மை அழிகின்றது என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்” பெண்களைப் பார்த்து பெண்களாய் இருங்கள் என்கின்றார்கள். பெண்களாய் இருத்தல் என்றால்? பால் அடிப்படையிலும் பெண்ணை அடையாளப்படுத்த முடியாவி;ட்டால் பெண் என்பவள்தான் யார்? ஆணுக்கு ஒரு துணைப்பொருள் <br /><br />பெண்களுக்கான வெளி, பெண்ணிய வெளிப்பாடு என்பன அண்மைக் காலங்களில்தான் உயிர்போடு செயல்படத் தொடங்கியிருக்கின்றன. இருந்தும் தற்போது<br />பெண்ணியம் எனும் பதம் அனேகரால் ஓர் இழிவு சொல்லாகவே பார்க்கப்படுகின்றது. பெண்ணியவாதிகள் என்ற சொல்லாடலைக் கேட்டாலே சினம் கொள்ளும் இவர்கள் பெண்களுக்கு என்ன பிரச்சனை இருக்கின்றது என்கின்றார்கள். பெண்கள் எல்லோரும் சந்தோஷமாகவும் ஒழுங்காகவும்தான் இருக்கின்றார்கள் நீங்கள் உதை எல்லாம் விட்டு விட்டு உருப்படியாக எதையாவது பேசுங்கள் என்று எள்ளலாகவும் கூறுகின்றார்கள்<br /><br />தம்மை முற்போக்குவாதிகள் என்று அடையாளம் காட்டிக் கொள்ளும் ஆண்கள், பெண்ணியவாதிகள் எனின் அவர்களை சமூக சேவகியாகக் கணித்து, பாதிக்கப்படும் பெண்களுக்கு இவர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்விக் கணையை வேறு தொடுக்கின்றார்கள். ஒரு சூப்ப வுமன் போல் பறந்து பறந்து பிரச்சனைக்குள்ளாகும் பெண்களின் வீடுகளின் கதவுகளைத் தட்டி அவர்களைக் காக்கும் கடமையில் பெண்ணியவாதிகள் இயங்கவேண்டும் என்பது இவர்களின் கணிப்பு. <br />தற்போது அனேகரால் கண்டுபிடிக்கப்பட்ட இன்னொரு புதிய சொல் போலிப் பெண்ணியம் - போலிப்பெண்ணியம் என்ற ஒன்று இருப்பின் கலப்படமற்ற சுத்த பெண்ணியம் என்று ஒன்றும் இருக்க வேண்டுமல்லவா? அதற்கான வரைவிலக்கணத்;தை யாரால் வகுக்க முடியும்?<br /><br />குடும்பப்பெண் பத்தினிப்பெண் என்று வரைவிலக்கணம் கொடுத்து பெண்களின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்து வந்தவர்கள், தற்போதும் பெண்ணியவாதிகள் மேல் ஒரு வரையறையை வகுத்து மீண்டும் அதே கண்காணிப்பைத்தான் மேற்கொள்கின்றார்கள். எனவே எப்போதுமே ஒரு வகுக்கப்பட்ட வரையறைக்குள்தான் பெண்கள் வாழவேண்டும் என்பது இவர்களின் கணிப்பு. <br /><br />இன்றைய முற்போக்குவாதிகள் சமூகத்திலும் பெண்கள் தனது ‘பெண்மை’யை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில்தான் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் அனேகரின் பார்வைகள் கற்பெனும் பதத்திலிருந்துதான் ஆரம்பிக்கின்றது. முற்போக்கு ஆண்களெனில் தனது மனைவியின் பத்தினித்தன்னையில் மிகவும் பெருமை கொள்கின்றார்கள். அவர் மனைவியரோ தம்மைப் பத்தினியாக பிரகடனப்படுத்துவதில் அனேக நேரத்தை செலவிடுகின்றார்கள். உலக சமூக நோக்கில் முக்கியமாக (ஆசிய- புலம்பெயர்) தமிழ் பெண்களின் நிலை இவ்வாறாகவே இன்றும் இருக்கின்றது.<br /><br />இந்த நிலையில் 27வது பெண்கள் சந்திப்பும், கனேடிய இலக்கியச் சந்திப்பும் ரொறொன்டோவில் மிக ஆரோக்கியமாக நடந்து முடிந்திருக்கின்றன.<br />இந்நிகழ்வுகளுக்காக இலங்கை இந்தியா அமெரிக்கா ஐரோப்பா ஆகிய நாடுகளிலிருந்து பல பெண்ணிய, தலித்திய, இலக்கியவாதிகள், கனேடிய குறிப்பா ரொறொண்டோ நகரிலிருக்கும் பெண்களுடன் இணைந்து தமது கட்டுரையை வழங்கியிருக்கின்றார்கள். 90ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் சந்திப்பின் 27வது நிகழ்வு 2008ம் ஆண்டு கனடாவில் ரொறொன்டோவில் இடம்பெற்றுள்ளது.<br /><br />27வது பெண்கள் சந்திப்பிலும், கனேடிய இலக்கியச் சந்திப்பிலும் கலந்து கொண்டு கட்டுரைகளைச் சமர்ப்பித்த அனைத்து ஆய்வாளர்களுக்கும், நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற உதவிய அனைத்து நண்பர்களுக்கும் பெண்கள் சந்திப்பு, கனேடிய இலக்கியச் சந்திப்பு சார்பில் நன்றியைக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம்<br /><br />எந்த அரசியல் சார்பும் அற்ற நிலையில் நடுநிலையாக இயங்குவதே பெண்கள் சந்திப்பின் முக்கிய நோக்கமாகும். இருந்தும் ஒரு அமைப்போ, அரசோ, இயக்கமோ பெண்கள் மீது வன்முறை நடாத்துகின்றது எனும் பட்சத்தில் ஆதாரங்களுடன் ஒரு ஆய்வாளர் கட்டுரை சமர்பித்தால் அதை ஏற்றுக்கொள்வதுதான் நடுநிலையானது. அந்த வகையில் 27வது பெண்கள் சந்திப்பும், கனேடிய இலக்கியச் சந்தப்பும் நடுநிலையாகவே நடந்து முடிந்தன.<br /><br />உலகெங்கிலுமிருந்து பெண்ணியவாதிகள் கலந்து கொண்டு தமது ஆக்கமான ஆய்வுக்கட்டுரைகளை வழங்கி இந்நிகழ்வைச் சிறப்பித்ததுடன், நிகழ்விற்கான அனைத்து உதவிகளையும் முன்னின்று நிறைவேற்றினார்கள்.<br /><br />பெண்கள் சந்திப்பு மிகவும் காத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் வளர்ந்து வருகின்றது. தொடர்ந்து வரும் வருடங்களில் புதிய நாடுகளுக்கும் பெண்கள் சந்திப்பைக் கொண்டு செல்வதன் மூலம் உலகெங்கிலும் பெண்களுக்கெதிரா வன்முறைக்காகக் குரல் கொடுத்து பெண்களின் மத்தியில் விழிப்புணர்வைக் கொண்டு வரமுடியும். இதுவே பெண்கள் சந்திப்பின் முக்கிய நோக்கமுமாகும்.<br /><br />பல அரசியல் மோதல்களுக்கிடையிலேயும், உதவிகள் அற்ற நிலையிலும்தான் 27வது பெண்கள் சந்திப்பை எடுத்து நடத்த ஒத்துக்கொண்டிருந்தோம். இருந்தும் தாமாகவே முன்வந்து உதவிய அனைத்து நண்பர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கின்றோம் என்பதை மீண்டும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.<br /><br />அந்த வகையில் - நிகழ்சியைச் திறம்பட தொகுத்துத் தந்த தோடு மேலும் பல உதவிகளைச் செய்த ஜானகி பாலகிருஷ்ணன், அனைவருக்கும் தங்க இடம்கொடுத்து உதவிய ஜெபா, கற்சுறா குடும்பத்தினர், சக்கரவர்த்தி ராதிகா குடும்பத்தினர், ரவி குடும்பத்தினர், தன் வேலைகளுக்கு மத்தியிலும் வரைகலை செய்து தந்து உதவிய டிஜி மீடியா கருணா, அழைப்புக் கடிதத்தைத் தயாரித்துத் தந்த அ.முத்துலிங்கம், வீடியோ படப்பிடிப்பு செய்த ரூபன், பல உதவிகளையும் செய்த இளங்கோ, பவானி, அபிநயா, தர்சினி வரப்பிரகாசம், நீரஜா ரமணி ஆகியோருக்கும், விளம்பரம் செய்து உதவிய ரீ.வீ.ஐ தொலைக்காட்சி, சி.ரி.ஆர் வானொலி, பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக கனடா வந்ததோடு மற்றுமல்லாமல் பல உதவிகளைளும் செய்த அனைத்துலகப் பெண்களுக்கும், நாடகங்களுக்காக ஒளி அமைப்பைத் திறம்பட வழங்கிய ராகவன் அவர்களுக்கும் 27வது பெண்கள் சந்திப்பு சார்பில் நன்றிகளைக் கூறிக்கொள்கின்றோம்;.<br /><br />இனி வரும் வருடங்களிலும் இதே போன்று சிறப்புடன் சர்வதேச ரீதியில் பெண்கள் இணைந்து கொண்டு மீண்டும் கனடாவில் ஒற்றுமையாக ஒரு பெண்கள் சந்திப்பை நாடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.<br /><br />நன்றிகளுடன்<br /><br />சுமதி ரூபன்<br />வைகறைகறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-9540420.post-40665070257035553322008-08-08T14:38:00.001-07:002008-08-08T14:38:34.427-07:00பெண்கள் சந்திப்பும் சில பேய்க் கதைகளும் - எதிர்வாதம்தமிழ்நதியின் குமுறலான கட்டுரையைப் படித்த போது அதிர்வாகவே இருந்தது. பெண்கள் சந்திப்பின் போது ஒன்பது கட்டுரைகள் பெண்களால் படிக்கப்பட்டது. கனேடிய இலக்கியச் சந்திப்பன்று ஆறு கட்டுரைகள் என்று நினைக்கின்றேன் பெண்களால் வழங்கப்பட்டது. அதில் இரண்டாம் நாள் நிர்மலாவின் கட்டுரை தேசியமும் பெண்ணியமும் என்ற தலைப்பின் விடுதலைப்புலிகள் பெண்கள் மேல் பிரயோகிக்கும் அனர்த்தங்கள் பற்றிக் குறிக்கப்பட்டிருந்தன. தமிழ்நதியின் பதிவு ஏதோ ஒட்டு மொத்தமாக நிகழ்விலும் புலி எதிர்ப்புக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டது போல் ஒரு பிரமையை ஏற்படுத்துகின்றது.<br /><br />அடுத்து இந்தியாவிலிருந்து வந்திருந்த பெண்ணியவாதி மாலதிமைத்ரி, இலங்கையிலிருந்து வந்திருந்த நிவேதா ஆகியோரைத் தவிர நான் பிரத்தியேகமாக எந்த ஒருவருக்கும் அழைப்பு விடவில்லை. பெண்கள் சந்திப்பில் வருடாவருடம் கலந்து கொள்ளும் பெண்கள் தாம் வருவதாக அறிவித்திருந்தார்கள். அவர்களுள் நிர்மலாவும் ஒருவர். வருபவர்கள் ஒவ்வொருவரிடமும் கட்டுரைகள் வழங்கும் படி கேட்டிருந்தேன் அந்த வகையில் தங்களையும் நான் கேட்டிருந்தேன். நிர்மலா ஒத்துக் கொண்டு தரமான கட்டுரைகளை வழங்கினார். இதைப் புரிந்து கொள்ளாமல் வீணாக “தெரிந்து” “தேர்ந்து” என்று தாங்கள் போல்ட் பண்ணி எழுத வேண்டிய அவசியமில்லை. பல பேச்சாளர்களின் பின்னர் கேள்விகள் அதிகம் வரவில்லை. நிர்மலாவை நோக்கிப் பல கேள்விகள் வந்தன அதனால் அவருக்கு அதிக நேரம் கொடுத்தோம். அது தவறென்று நான் நினைக்கவில்லை. <br /><br /><br />மேலும் விடுதலைப்புலி எதிர்பாளர்களினால் நடாத்தப்பட்டது என்ற ஒரு தவறான கருத்தும் இங்கே வைக்கப்பட்டு கருத்துக் கூறுபவர்களும் அதே பாதையில் நகர்ந்து செல்கின்றார்கள். விடுதலைப்புலிகளின் சார்பானர்வள் ஒருபோதும் நடுநிலமையாளர்களை ஏனோ ஏற்றுக்கொள்வதில்லை. விடுதலைப்புலி சார்பு, இல்லையேல் அரசாங்கத்தின் சார்பு என்றே அவர்கள் கணித்துக்கொள்கின்றார்கள். மனித உரிமை மீறல்களுக்குக் குரல் கொடுப்பவர்கள் அரசாங்கம், விடுதலைப்புலிகள் இன்னும் மதம் மொழி இனம் என்று எந்த வர்க்கத்தினராலும் மனித உரிமை மீறல்கள் நடாத்தப்படும் போது குரல் கொடுக்கப்படல் வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளாது, விடுதலைப்புலிகளின் மனிதஉரிமை மீறல்கள் அடையாளப்படுத்தப்படும் போது மட்டும் கொதித்தெழுகின்றார்கள்.<br /><br />பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு உலகத்தமிழர் பெண்கள் அமைப்பின் பல<br />அங்கத்தவர்களை நான் நேரடியாகவே தொலைபேசியில் அழைத்துக் கேட்டிருந்தேன். அவர்கள் ஒருவரும் சமூகமளிக்கவில்லை. தான் வரமுடியாது காரணம் அன்று தமிழர் வொண்டலாண்ட் திருநாள் என்று உலகத்தமிழர் பெண்கள் அமைப்பின் முக்கிய உறுப்பினர் கூறினார். உலகெங்கிலுமிருந்து பெண்கள் தமது செலவில் கலந்து கொண்டு இந்த பெண்கள் சந்திப்பைச் சிறப்பிக்கும் போது இங்குள்ள பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்பின் பெண்களுக்கத் தமது விடுமுறைக் களியாட்டங்கள்தான் முன் நிற்கின்றது என்றால் அவர்கள் அமைப்பையும் வேலைத்திட்டங்களையும் நாம் என் என்பது. இருந்தும் கலந்து கொண்டு கட்டுரை தந்த பெண்களில் விடுதலைப்போராட்டத்தின் சார்பாளர்களே அதிகமாக இருந்தார்கள் என்பதனை நிச்சயமாக தமிழ்நதி கவனிக்கத்தவறியிருக்கமாட்டார் என்றே நம்புகின்றேன்.<br /><br />27வது பெண்கள் சந்திப்பு தனிமனித தாக்குதல், பெண்கள் மீதான தாக்குதல்கள் அற்ற அரசியல் வாதங்கள் என்பன ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதனைத் தெளிவாக எனது அறிமுக உரையில் வழங்கியிருந்தேன். அந்த வகையில் மீறல்கள் ஒருவரின் கட்டுரையிலும் நிகழவில்லை. நிர்மலா தேசியவாதமும் பெண்ணியமும் என்ற தலைப்பில் பெண்கள் மேலான விடுதலைப்புலிகளின் அராஜகம் பற்றிக் கட்டுரை படித்தார். இது பெண்கள் சார்ந்த கட்டுரையே தவிர விடுதலைப்புலிகளை விமர்சிக்கும் கட்டுரையல்ல. கட்டுரையின் ஆரம்பத்திலேயே அரசாங்கத்தின் பெண்கள் மீதான அராஜகம் எல்லோரும் அறிந்ததே, அதனால் அதனை கட்டுரையில் தவிர்த்து விடுகின்றேன் என்ற அவர் தெளிவாகத் தெரிவித்த பின்னரும், கலந்துரையாடின் போது தமிழ்நதி எழுந்து ஒருபக்க சார்பான தாக்கத்தை மட்டும் தாங்கியிருக்கின்றது நிர்மலாவின் வாதம் என்றது சிறுபிள்ளைத் தனமாகவே இருந்தது. தவிர தமிழ்நதி பல தளங்களில் வேலை செய்தவர். கனடா ஈழம், இந்தியாவென ஈழப்பெண்கள் புலம்பெயர் பெண்கள் பிரச்சனைகளை நன்கு அறிந்தவர். அவரிடம் நான் கட்டுரை கேட்டபோது கட்டுரை என்றால் போர் அடிக்கும் எனவே தான் இந்தியப் பெண்கவிஞர்கள் பற்றி ஒரு வீடியோ சமர்பிக்க உள்ளேன் என்றபோது எனக்கு உண்மையிலேயே விசனமாகவே இருந்தது. ஈழப் போராட்டம் பற்றிய ஆழமாக அறிந்தவர் போராட்டத்தால் பெண்களுக்கேற்பட்ட பாதி;ப்பு, கடைசி ஈழத்துப் பெண் அகதிகள் இந்தியாவில் எதிர்கொள்ளும் அவலங்கiளாயாவது கட்டுரையாக்கி அப்பிரச்சனைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கலாமே. <br /><br />பெண்கள் பற்றிய கட்டுரை அது எந்த வடிவில் வந்தாலும் பெண்கள் சந்திப்பு ஏற்றுக்கொண்டிருக்கும் என்பதை நான் கட்டுரை வழங்கிய எல்லோருக்கும் அறிவித்தேன். குறமகள் பெண்களுக்கு வீரம் வேண்டும் துணிவு வேண்டும் விடுதலைப்புலிகளில் இருக்கும் பெண்களைப் போன்று என்பதாய் தான் கட்டுரை படிக்கலாமா என்று கேட்டு என் அனுமதியைப் பெற்றார். <br /><br />மேலும் கட்டுரையென்றால் “போர்” அடிக்கும் என்று பலமுறை தமிழ்நதி குறிப்பிடக் கேட்டேன். இப்படியொரு கருத்தை எங்கிருந்து அவர் பெற்றார். பணம் கொடுத்து கட்டுரை அமர்வுகளைத் தேடிச் செல்கின்றார்கள் ஆய்வாளர்கள் ஒரு தரமான ஆய்வுக் கட்டுரை தரும் நிறைவு வேறு எதில் பெறமுடியும். சின்னப்பெண்ணான நிவேதா கட்டுரை வாசிக்கும் போது மண்டபமே அசையாது உறைந்து போனதைத் தாங்கள் அவதானிக்கவில்லையா?<br /><br />பெண்களின் அவலநிலைகளை ஆராயும் ஆரோக்கியமான கட்டுரைகள் எத்தனை இந்தப் பெண்கள் சந்திப்பில் வாசிக்கப்பட்டு கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டது. 27வது பெண்கள் சந்திப்பில் எத்தனை பெயர்களின் ஆய்வுகள் உடல் உழைப்புக்கள் அடங்கியிருக்கின்றன. எல்லாவற்றையும் தங்கள் ஒருவரின் அரசியல் பார்வையில் வைத்து ஒரு பதிவின் மூலம் கொச்சைப்படுத்தி விட்டீர்கள்.<br /><br />பெண்கள் சந்திப்பின் இறுதியில் மிக ஆரோக்கியமான பிரேரணை எடுக்கப்பட்டது. அதை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. இருந்தும் கனேடியச் சூழலில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் எத்தனையோ நிகழ்வுகளுக்கு சமூகமளிக்காத பலர் கலந்து கொண்டு 27வது பெண்கள் சந்திப்பை மிக வெற்றிகரமாக மாற்றியுள்ளார்கள். இது தமிழ் பெண்களுக்குக் கிடைத்த ஒரு வெற்றியென்றே நான் நம்புகின்றேன்.கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-9540420.post-41829812501818118192008-05-07T12:28:00.000-07:002008-05-07T12:31:13.710-07:00எவடம் எவடம்..நண்பர் ஒருவரிடம் உரையாடிக்கொண்டிருக்கும் போது என்னிடம் “நீங்கள் யாழ்ப்பாணத்தில் எவடம் என்று யாரிடமாவது கேட்டால் தவறா?” என்று கேட்டார். இலங்கையில் யாழ்ப்பாணத்தில் மட்டுமா தமிழர் வாழ்க்கின்றார்கள், மட்டக்களப்பு, திருகோணமலை இன்னும் எத்தனை எத்தனை யாழ்ப்பாணத்துக்குள் அடங்காத இடங்களிலெல்லாம் தமிழர்கள் வாழ்கின்றார்கள் எனவே தமிழர்களின் வாழும் வட்டத்தை ஒடுக்கி யாழப்பாணம் என்று குறுக்குவது தவறுதானே என்றேன். அதற்கு அவர் ஒருவரிடம் உரையாடும் போது அவரின் பேச்சுமுறையைக் கொண்டு அவரை ஓரளவுக்கேனும் என்னால் அடையாளம் காணமுடியும் அவர் யாழ்ப்பாணமாக இருப்பார் என்ற நம்பிக்கையில் நான் அப்பிடி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கலாம் தானே என்றார்;. <br />யாழ்ப்பாண மேலாதிக்கத் தமிழ் மக்களிடம்தான் இத்தகைய போக்கு இருக்கின்றது என்றும், மற்றைய வட்டாரத்தில் வாழ்பவர்கள் இப்படியான கேள்வியைக் கேட்பதில்லை என்பது பொதுவான அபிப்பிராயம் என்றும் அவரிடம் கூறினேன். <br /><br />யாழ்ப்பாணத் தமிழர்களிடம்தான் மேலாதிக்கத் தனம் இருக்கின்றது என்பது எமது தமிழ் மக்களின் பொதுவான கருத்தாக இருக்கும் பட்சத்தில் யாழ்ப்பாணத் தமிழர் என்றால் எல்லோருமே மேலாதிக்கவாதிகளாகவல்லவா இருத்தல் வேண்டும். அதே வேளை மற்றைய மாகாணங்களில் வாழ்பவர்கள் எல்லோரும் மேலாதிக்கத் தனமற்றவர்களாகவல்லவா வாழ வேண்டும். <br />இது பற்றி உரையாடும் போது இன்னுமொரு நண்பர் கூறினார், மட்டக்களப்பு மேல்மட்ட வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கும் மக்களிடமும் இதே மேலாத்திக்கத் தன்மை நிறைந்தே இருக்கின்றது என்றும், கனடாவில் இடம்பெற்ற மட்டக்களப்பு ஒன்று கூடலுக்குச் தான் ஒரு நண்பரோடு சென்று வந்த போது ஒரு குட்டி யாழ்ப்பாணத்தைத்தான் தன்னால் பார்க்க முடிந்தது, என்றும் கூறினார். மட்டக்களப்பு வாசிகள் இருவர் சந்தித்துக் கொள்ளும் போது நீங்கள் மட்டக்களப்பில் எவடம் என்று கேட்பதும் வழமையாக இருக்கலாம், அவர் குறிப்பாக எவடம் என்று தெரியும் போதுதானே அவரை சாதீய முறையில் அடையாளம் காணமுடியும். <br />தேசியவாதம், பிரதேசவாதம் என்பது எங்கும் நிறைந்துதான் உள்ளது. நான் யாழ்ப்பாணத்தில் கோண்டாவி;ல் எனும் கிராமத்தைச் சேர்ந்தவள். கோண்டாவில் கிராமத்தின் பிரிவாக கிழக்கு, மேற்று, வடக்கு கோண்டாவிலர்கள் என்று பிரவாக வாழ்ந்து வந்தார்கள். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நாங்கள் கோண்டாவில் கிழக்கில்தான் வசித்து வந்தோம். இருந்தும், எனது அப்பாவின் சொந்த இடம் “அன்னங்கை” என்று அழைக்கப்படும் கோண்டாவில் வடக்கு என்பதால், நாமும் “அன்னங்கையார்” என்று கிழக்கு கோண்டாவிலரால் அழைக்கப்பட்டவர்கள். எமது சொந்தங்கள் எல்லோரும் அன்னங்கையில்தான் வசித்தும் வந்தார்கள். இப்போதும் எனக்கு நினைவில் இருக்கும் ஒரு விடையம், எமது வீட்டுக் கொண்டாட்டம் ஒன்றிற்கு வந்திருந்த கோண்டாவில் கிழக்கு அயலவர் சிலர், சாப்பாட்டுப் பந்தி விரித்தபோது எழுந்து சென்றது. அதே வேளை கோண்டாவில் கிழக்கின் இன்னொரு பகுதியாக “கேணியடியர்கள்” வாழ்ந்து வந்தார்கள். இவர்களுடனும் இந்த கிழக்கு மேற்குடிகள் கலந்து கொள்வதில்லை. போய் வருவதோடு மட்டும் சரி தாம் “கை நனைப்பதில்லை” என்பதில் அவர்களுக்குப் பெருமை. அத்தோடு இதில் மிகவும் நகைச்சுவையான விடையம் என்னவென்றால், “கேணியடியர்கள்”, “அன்னங்கையர்” களோடு கலந்து கொள்ள விரும்புவதில்லை, அன்னங்கையர்களும் கேணியடியர்களை ஒதுக்கி வைத்தே பெருமை பேசிக்கொள்வார்கள். ஒரு சிறிய கிராமமான கோண்டாவிலில் இருக்கும் கிழக்குப் பகுதி மக்களிடம் மட்டுமே எத்தனை சின்னத்தனங்களும் பிரதேசவாதமும் இருக்கின்றது என்றால் இலங்கையின் அனைத்து இடங்களையும் மாவட்ட ரீதியாகப் பார்க்கப் போகின் எப்படித்தான் இறுதியில் யார் மேல்மட்டமக்கள், யார் கீழ்மட்டமக்கள் என்று அடையாளம் கண்டு கொள்ள முடியும்? <br />இந்தக் குழப்பங்களைத் தீர்த்துக் கொள்ளத்தான் தந்திரமாக “நீங்கள் எவடம்?” என்ற ஒரே கேள்வியோடு தமது காரியத்தை முடித்துக் கொள்கின்றார்கள். இந்த “நீங்கள் எவடம்?” என்பது யாழ்ப்பாணத்து மக்களின் “உரித்து” அல்ல. இது இலங்கையில் மட்டுமல்ல உலகெங்கும் பரவிக்கிடக்கும் “வாதப் பிரச்சனை” என்பதுதான் நிறைவான உண்மை. எனவே யாழ்ப்பாணத்தான் ஒருவர் நீங்கள் யாழ்பாணத்தில் எவடம் என்று யாரிடமாவது கேட்கும் போது உங்கள் இரத்த அழுத்தம் ஏறினால் அடக்கிக் கொள்ளுங்கள், அதே வேளை வேறு ஒரு இடத்தில் நீங்கள் திருகோணமலையில் எவடம் என்ற கேள்வியும் மட்டக்களப்பில் எவடம் என்ற கேள்வியும் யாரோ ஒருவரால் யாரிடமோ கேட்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கும்.கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9540420.post-13463292123357240582008-04-15T12:56:00.000-07:002008-04-15T13:49:52.687-07:00பெண் அடிமைத் தனத்தின் வேராய் இருப்பது “குடும்பம்” என்ற நிறுவனமே.கனேடிய விடுமுறை நாட்களில் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது “குடும்பநாள்” <br />காதல் தினம், அம்மா நாள், அப்பா நாள், பெண்கள் தினம் இப்படிப் பல தினங்கள் அடையாளப்படுத்தப்பட்டாலும் குடும்பநாள் என்பது விடுமுறையோடு அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று. <br /><br /><img src="http://www.weblogimages.com/v.p?uid=thamilachi&pid=595950&sid=nAY19dzTV9" border=0> <br /><br />உறவுகள் என்ற பார்வையை விடுத்து, வியாபாரம் என்ற பார்வையில் இந்நாளை நாம் ஆராய்ந்தால், இனி இந்நாளுக்காக வாழ்த்து மடல்கள், அன்பளிப்புப் பொருட்கள் அறிமுகப்படுத்தப் படும். உணவகங்கள் இந்நாளில் நிரம்பி வழியும், புதிய கழியாட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும், பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும் இவையனைத்தும் வியாபாரத்தந்திரங்கள்.<br /><br />உறவு முறை எனும் போது தற்போதைய இயந்திர வாழ்வோட்டத்தில் குடும்பங்கள் ஒன்றாகச் செலவிட நேரம் கிடைப்பதில்லை என்பதனால் இந்நாள் குடும்பங்கள் ஒன்றாகக் கழித்து மகிழ ஒதுக்கப்பட்ட நாள். ஆண்டுக்கு ஒருநாள் பெற்றோர் பிள்ளைகள் ஒன்றாக மேசையில் இருந்து சாப்பிட்டு தமது ஓராண்டு வாழ்நாளை அலசக் கொடுக்கப்பட்டுள்ளது.<br /><br />எம்மவர்கள் ஊரில் இருந்த குடும்ப நெருக்கம் புலம்பெயர்ந்த பின்பு இல்லாமல் போய்விட்டது என்று புலம்புகின்றார்கள். எமது நாடு, புலம்பெயர்ந்த நாடுகள் என்று இங்கே பிரித்துப் பார்த்து வாழ்க்கை முறையை நாம் கணித்துவிட முடியாது. போர் சூழலில் அடிபட்டுக்கொண்டிருக்கும் எமது நாட்டை வளமான ஒரு வாழ்க்கை முறைக் கணிப்பெடுப்பிற்குள் கொண்டு வருவது தவறு. பதிலாக இந்தியத் தமிழர்களின் வாழ்க்கை முறையை நாம் தற்போது பார்த்தோமானால் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் என்ற நிலை மாறி கணவன் மனைவி இருவரும் வேலைக்கும் போகும் நிலை உருவாகியுள்ளது. அத்தோடு கூட்டுக்குடும்பம் என்ற அமைப்பு முறையும் மருகி வருவதால் குழந்தைகளை ஆயாவுடன் விட்டுச் செல்வது, பிள்ளை பராமரிப்பு நிலையங்களில் விட்டுச் செல்வது என்ற நிலமைதான் அங்கேயும் உருவாகியுள்ளது. உலகெங்கும் தோற்றியுள்ள விஞ்ஞான வளர்ச்சி மாற்றம், அது கொண்டு வந்துள்ள பொருளாதார நெருக்கடி என்பனவே இந்த வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துள்ளது. <br /><br />குடும்ப அமைப்பின் உருவத்தைப் பார்த்தால்<br />"ஆதிகம்யூன்" காலத்தில் (காட்டு மிராண்டிக் காலம்) தாய்வழிச் சமூகமாகவே இருந்தது. அதாவது பெண்கள் எந்த ஒரு அடக்குமுறைக்குள்ளும் ஆளாகாமல் முழுச்சுதந்திரமாக வாழ்ந்து வந்தார்கள். அதன் பின்னர் தோன்றிய, அநாகரீக காலத்தில," குடும்பம் என்ற இரத்த சொந்தங்களான கட்டமைப்புக்குள் பெண்களை வீட்டு வேலைகள் விவசாயம் குழந்தை பராமரிப்பு போன்றவற்றால் வெளி உலகை விட்டு ஒதுக்கும் நிலை ஏற்பட்டது. அடுத்து "நாகரீக காலம்" என்று கூறப்படும் தற்கால அமைப்பு குடும்பம் அரசு தனிச் சொத்து போன்றவையின் தோற்றம் (இவை ஆண்களின் உருவாக்கம்) பெண்களை முற்று முழுதான அடிமைத் தனத்துக்குள் தள்ளி விட்டிருக்கின்றது. இந்தக் காலத்தில் உறவுகள் மிகச் சுருங்கி கணவன் மனைவி குழந்தைகள் (சில இடங்களில் பெற்றோர்) என்று மிகுந்த சுயநல சமுதாயமாக உருப்பெற்றிருக்கின்றது. ஒரு சமூகமாக வாழ்ந்த வாழ்க்கை மருகிக் கூட்டுக்குடும்பமாக உருப்பெற்றுப் பின்னர் தனிக்குடித்தனமாக மாறித் தற்போது தனிப்பெற்றோர்களினால் ஆன குடும்ப அமைப்பு, ஓரினச்சேர்க்கையாளர்களினால் ஆன குடும்ப அமைப்பு என்று உருப்பெற்றிருக்கின்றது. மாற்றங்கள் வேகமாகிக்கொண்டிருந்தாலும், சமூகமும் அரசும் அதனை அங்கீகரிப்பதாகப் பாவனை காட்டினாலும் இன்னமும் குடும்பம் என்றால் கணவன் மனைவி குழந்தைகள் என்ற வடிவம்தான் குடும்பம் என்ற அமைப்பின் வரையறையாகப் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக உள்ளது. இந்த அமைப்பில் முற்றுமுழுதாகப் பெண் அடிமைத் தனமே மேலோங்கி நிற்கின்றது. <br /><br />அடக்குமுறைக்குள் பெண்கள் தமது தனித்தன்மையை இழந்து அடிபட்டுப் போகாமல் சுதந்திரமாக வாழ பல வழிகள் இருப்பதாகப் பலர் (எம்மவர்கள் - அதாவது இறுக்கமான கலாச்சாரத்திற்குள்ளிருந்து வந்தவர்கள்) சொல்லிச் செல்கின்றார்கள். குடும்ப அமைப்பு சீராக இருக்கப் புரிந்துணர்வு, விட்டுக் கொடுத்தல் தேவை என்றும் வழி முறைகளையும் சொல்லிச் செல்கின்றார்கள். இவர்கள் கூறும் விட்டுக்கொடுப்பென்பது பெண்களிடம் மட்டும் எதிர்பார்க்கும் ஒன்றாகவே இன்னமும் உள்ளது.<br /><br />பெண்கள் சுதந்திரமாக வாழப் பல வழிகள் இருக்கின்றன என்று விட்டு பெண்கள் தனியாக வாழலாம் என்று ஒரு கருத்து வைக்கப்பட்டது. இதைச் சற்று ஆராய்ந்து பார்த்தால் - முதலாவது காதல் தோல்வி. காதலித்தவள் என்பதால் திருமணங்கள் பொருந்தி வராமை. கடந்த காலங்களில் இந் நிலமை மிக மோசமாகவே எம் நாட்டில் இருந்து வந்தது. அடுத்து வரதட்சணையின்னை (வறுமை) இறுதியாக தமது அந்தஸ்த்திற்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்று திருமணப்பேச்சை இழுத்தடித்து பெண்ணிற்கு வயது ஏறிப்போய் திருமணமாகாமல் இருந்தல் போன்ற காரணங்களால் பல பெண்கள் தனித்து விடப்பட்டுள்ளார்கள். இந்நிலை இவர்கள் தாம் தனித்து வாழ வேண்டும் என்று எடுத்துக் கொண்ட முடிவல்ல. எனது சமூகத்தின் சீரழிவால் ஏற்பட்ட நிலமைகள் இப்படிப்பட்ட பல பெண்களை தனிமையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். என் கேள்வி இவர்களது பாலியல் தேவைகளை எப்படி எமது சமூகம் பார்க்கின்றது. திருமணம் ஆகாதவர்கள் எனவே இவர்களுக்கு அந்தத் தேவையில்லை என்பதுதான் எனது சமூகப்பார்வையாக உள்ளது. தவறி இவர்கள் யாருடனாவது உறவுகொள்ள நேடிட்டு அது வெளியே தெரியவரும் பட்சத்தில் அவர்கள் ஒதுக்கப்படுகின்றார்கள்..<br /><br />திருமணமாகிப் பின்னர் ஒத்துவராததால் பிரிந்த பெண்களை எடுத்துப் பார்ப்போம். கனடாவில் பல பெண்கள் இருக்கின்றார்கள். சிலர் மீண்டும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். சிலர் பல ஆண்டுகளாகத் தனியே இருக்கின்றார்கள். எனவே ஒரு பெண் தானாக விரும்பி தனியான வாழ்வு முறையைத் தெரிவு செய்வதென்பது எமது சமூகத்தில் மிகக் குறைவாக இருப்தோடு, எமது சமூக அமைப்புக் காரணமாகப் பலவந்தமாகத் தனிமைக்குள் தள்ளப்படும் பெண்களின் தொகையே அதிகமாக உள்ளது. இவ்வேளையில் எமது சமூக அமைப்பிலும், அதன் சிந்தனைகளிலும் எந்த மாற்றங்களையும் கொண்டு வர முனையாமல் குடும்பம் அதன் முக்கியம், அதன் பெறுமதி என்று வெறுமனே புலம்பித்திரிவதில் எப்பயனும் இல்லை. <br /><br />சமதர்ம அரசின் தோற்றத்தில் பெண்கள் பொருளாதார பலத்தை பெற்று உற்பத்தியில் ஈடுபடும் போது சமத்துவமாகவே நடத்தப்படுவார்கள, இது மாக்ஸின் கூற்று. ஆண்டுகள் கடந்தாயிற்று சமதர்ம அரசு மூழ்கி முதலாளித்துவம் தலை தூக்கி ஆட்டம் காணும் நிலையில் பெண் விடுதலை என்பது வெறும் பேச்சோடு மறைந்து விடும் ஒன்றாகிப் போய்க்கொண்டிருக்கின்றது. <br />தமிழ் சூழலைப் பார்க்கும் போது படிப்படியாக பெண்களின் சிந்திக்கும் திறன் பெருகி பெண்நிலைவாதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது என்பது ஒரு புறம் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் இது மிகக் குறைந்த வீதத்திலேயே இன்னும் இருக்கின்றது. இந்தப் பெண்நிலைவாதிகள் கூட ஒரே கோணத்திலான பிரச்சனைகளை மட்டுமே அடையாளம் காண்கின்றார்கள். உதாரணத்திற்கு கணவனை இழந்தவளைப் (விதவை) புறக்கணித்தல், பெண் குழந்தை வளர்ப்பில் வேறுபாடு, உயர்கல்வி, சீதணப் பிரச்சனை, பூப்புனித நீராட்டுவிழாக் கொண்டாட்டம், சமனற்ற சம்பளம், இத்யாதி,.. இத்யாதி இப்படியாப் பலராலும் ஏற்கெனவே அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சனைகளை மீண்டும் மீண்டும் சமூகத்திற்கு எடுத்துச் சொல்வதனால் பெண் ஒடுக்கு முறைக்காக அடித்தளங்கள் அடையாளம் காணப்படாமலே போய் விடும் அபாயம் இருக்கின்றது. இன்னும் பெரும்பாலான பெண்கள் ஆண்-பெண் அசமத்துவ நிலையை உணராதவர்களாகவே இருக்கின்றார்கள்.கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9540420.post-58312473626512326582008-04-13T15:19:00.000-07:002008-04-13T15:30:46.268-07:00“ராமேஸ்வரம்”“ராமேஸ்வரம்” திரைப்படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. “நந்தா”, “கன்னத்தில் முத்தமிட்டால”; அந்த வரிசையில் இன்று “ராமேஸ்வரம்”. ஈழத்தமிழரின் அகதி நிலையை எடுத்துக்காட்டும் திரைப்படமாக இந்திய இயக்குனர்களால் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் இவை. இந்த மூன்று திரைப்படங்களிலும் ஒரு ஒற்றுமை என்னவென்றால் இந்தியர்கள் ஈழத்து அகதிகளுக்கு எந்த அளவிற்கு உதவி செய்யத் தவிக்கின்றார்கள் என்பதே. நான் படித்த கட்டுரைகள், சிறுகதைகளிலில் இருந்தும், தனிப்பட்ட முறையில் கேட்டறிந்த சம்பவங்களில் இருந்தும் ராமேஸ்வரத்தில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்கள் எந்த அடிப்படைத் தேவையும் பூர்த்தி செய்யப்படாமலும், அதே வேளை பலவிதமாக வன்முறைக்குள்ளாக்கப்பட்டும் வருகின்றார்கள் என்பதே. ஆனால் மேற்கூறப்பட்ட எந்த ஒரு திரைப்படத்திலும் அதற்கான அடையாளங்கள் எதுவும் காட்டப்படவில்லை. தமிழ்நாட்டின் அரசியல் அட்டூழியங்கள், வன்முறைகள், போன்றவற்றை படத்திற்குப் படம் புடம்போட்டுக் காட்டும் எந்த ஒரு இயக்குனரும் ரமேஸ்வரத்தில் ஈழத்து அகதிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை சிறிதேனும் காட்டுவதற்கு எதற்காக அஞ்சுகின்றார்கள்? <br /><br /><img src="http://www.weblogimages.com/v.p?uid=thamilachi&pid=595809&sid=FIN44lwDV5" border=0> <br /><br /><br />இதற்கான முக்கியகாரணம் இன்றைய இந்திய தமிழ் சினிமா புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களை மிகவும் நம்பியிருக்கின்றது. 80, 90களில் உருவான திருட்டு வீ.சீ.டி விற்பனையும் அதன் பின்னர் சின்னத்திரையின் வரவும் தமிழ் சினிமா உலகை ஆட்டம் காண வைத்தது. திரைப்படத்துறையிலிருந்து பலரும் பகிரங்கமாக உரைகள் நிகழ்த்தி திருட்டு வீ.சீ.டியில் திரைப்படங்களைப் பார்க்காதீர்கள் என்று பொதுமக்களைக் கெஞ்சிக் கேட்கும் அளவிற்கு இறங்கியும் வந்திருந்தார்கள். தொடர்ந்த வருடங்களில் உலகெங்கும் பரவிக்கிடக்கும் ஈழத்தமிழர்கள் இந்தியத் தமிழ் திரைப்படங்களை திரையரங்குளில் திரையிடத் தொடங்கியதும் அவர்கள் தமிழ் சினிமா மீண்டும் உயிர்ப்பெற்றது. தமிழ் சினிமாவை நல்ல முறையில் தக்க வைத்துக் கொள்ள ஈழத்தமிழர்களை தடவிக்கொடுக்கின்றார்கள் இந்திய இயக்குனர்கள். இது முற்று முழுதான வியாபார தந்திரம் இதில் தவறொன்றுமில்லை. <br />ஈழத்தமிழரும் பாட்டும், சண்டையும் நிறைந்த படங்களைத்தான் வேண்டி நிற்கின்றார்கள். ராமேஸ்;வரத்தில் ஈழத்தமிழருக்கும் நடக்கும் அநியாயங்களை வெறுமமே விவரணப்படமாக எடுத்தால் ஈழத்தமிழர்கள் கூட அதனைப் பணம் கொடுத்து வாங்கிப் பார்க்க மாட்டார்கள் என்ற நிலையில்;தான் புலம்பெயர்ந்த தமிழர்களும் வாழ்கின்றார்கள். இது ஒருபுறமிருக்க இந்திய சினிமாக் கலைஞர்களிலிருந்து, சின்னத்திரைக் கலைஞர்கள் வரை வருடா வருடம் ஈழத்தழிழர்களினால் உலகெங்கும் உலாப் போகின்றார்கள். கலைஞர்களை அழைத்துக் கௌரவிப்பது என்பது நல்ல விடையம்தான், ஆனால் சினேகாவோடு சினேகாவின் அம்மா, சியாமோடு சியாமின் அம்மா என்று குடும்பமாக வந்து பணம் பெற்று ஊர் சுற்றிப்பார்த்துச் செல்வதோடு, கடைகடையா ஷொப்பிங் சென்று ஈழத்தமிழ் இளிச்சவாயர்களை ஒன்று இல்லையென்று ஆக்கிவிட்டுப் பறந்து போகின்றார்கள். கிரடிட் காட்டை அடித்து அடித்து சினேகாவிற்கு ஷொப்பிங் செய்துகொடுத்து விட்டு அந்த பெருமையோடு காலத்தைத் தள்ளுகின்றார்கள் இவர்கள். <br /><br />இந்தியக் கலைஞர்களை கனடாவிற்கு அழைத்து நிகழ்ச்சி செய்து அதனால் எம்மவர் ஏதாவது உழைக்கின்றார்கள் என்றால் அது வியாபாரம் என்று விட்டுப் போகலாம். ஆனால் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் வெறும் தற்பெருமைக்காக பெரும் பணத்தைக் கொட்டி தமிழ் சினிமாக்காறர்களை மேலும் மேலும் கொழுக்கப்பண்ணுகின்றார்கள். ஈழத்தமிழர்கள் இளிச்சவாய்கள், எங்களைத் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள் என்று கண்டு கொண்ட சினிமாக் கலைஞர்களும் முடிந்தவரை எம்மவரிடமிருந்து வறுகிக்கொண்டு பறந்து விடுகின்றார்கள். சினிமாக்காறர்களைக் கூப்பிட்டு நொடிச்சுப் போன எம்மவர்களின் பட்டியல் அதிகரித்துக் கொண்டே போகின்றது. ஈழத்தமிழர்களின் கடைகளெல்லாம் இந்தியக் கலைஞர்களின் வருகையை அறிவிக்கும் துண்டுப்பத்திரங்களினால் நிறைந்து வழிகின்றது, சின்னத்திரையில் மிமிகிரி செய்யும் வெட்டிப் பெடியங்கள் கூட பணம் பெற்று கனடா சுற்றுலா வந்துவிட்டுப் போகின்றார்கள். ஈழம் கிடைக்கிறதோ என்னவோ புலம்பெயர் ஈழத்தமிழர்களால் தமிழ் சினிமாவிற்கு விடுதலை கிடைத்து விட்டது என்பது தான் உண்மை.கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-9540420.post-49107232553802094042008-02-05T08:26:00.000-08:002008-02-05T08:36:03.202-08:00Discovering Domingaby Patricia Flynn with Mary Jo Mchonahay<br /><br /><img src="http://www.weblogimages.com/v.p?uid=thamilachi&pid=589679&sid=krz30vABN0" border=0><br /><br />The Centre for Women’s Studies in Education ஆதரவில் கடந்த செவ்வாய் கிழமை “Discovering Dominga” எனும் விவரணத் திரைப்படம் ரொறொண்டோ பல்கலைக்கழகத்தில் திரையிடப்பட்டு தொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெற்றது.<br /><br />தற்போது ஐஓவாவில; வாழும் டெனீஸ் பெக்கர் இரு குழந்தைகளுக்துத் தாயான 29வயது நிரம்பிய பெண். அமைதியான குடும்ப வாழ்க்கை வாழும் இந்தப் பெண்ணின் இளமைப்பருவம் மறக்கமுடியாத காயங்களைக் கொண்டது. இளமைக்காலக் கொடூரங்களில் இருந்து விடுபட முடியாமல் திணறும் இவர் இறுதியில், தனது வளர்ப்புக் குடும்பத்தால் கிடைத்த உறவினர் ஒருவருக்குத் தனது இளமைக்கால வாழ்வு பற்றிக் கூற அவர் மின்கணனியில் நடத்திய தேடல் டெனீஸ் பெக்கரின் தொலைந்த சில உறவுகள் பற்றிய தகவலை அவருக்கு அறியத்தருகின்றது.<br /><br />டெனீஸ் குவாட்டமாலாவுக்குப் பயணம் செய்கின்றார். அங்கே அவர் மறந்து போயிருந்த சொந்தங்களின் அறிமுகம் மீண்டும் கிடைக்கின்றது. கண்ணெதிரே பெற்றோர்கள் குவாட்டமாலா இராணுவத்தால் கொலைசெய்யப்படும் போது டொமிங்காவுக்கு ஒன்பது வயது. கைக்குழந்தையான தனது தங்கையுடன் காட்டுப்பாதையூடே பலநாட்கள் ஓடி வழியில் தனது தங்கையையும் பறிகொடுத்து, இறுதியில், ஒரு அகதிமுகாமிற்கு வந்து சேருகின்றார். இரண்டு வருடங்களின் பின்னர் ஒரு அமெரிக்க குடும்பத்தினரால் வளர்ப்பு மகளாக எடுக்கப்பட்டு “டொமிங்கோ”, “டெனீஸ்” ஆக மாறித் தனது 29ஆவது வயது வரை ஐஓவாவில் பழையவற்றை மறக்க முனைந்து வாழ்ந்து வந்தார். காயங்களை மூடினாரே தவிர ஆற்ற முடியவில்லை. <br /><br />பொன், நிலக்கரி, நிக்கல் போன்றவற்றின் மேல் மோகம் கொண்ட அமெரிக்க, கனேடிய முதலாளிகள் குவாட்டமாலா அரசுடன் இணைந்து 1980 தொடக்கம் 1983ஆம் ஆண்டுவரை ரியோ நெக்ரோ, குவாட்டமாலாவில் மட்டும் 6,000 வரையிலான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் அழித்திருக்கின்றார்கள். இந்த கொடுமையான அழிவின் நேரடிச் சாட்சியான எஞ்சியிருக்கும் மூவரில் டெனீசும் ஒருவர். 96இல் சமாதானம் அறிவிக்கப்பட்டாலும், இன்றும் இராணுவத்தின் கை மேலோங்கி நிற்பதால் தனது பெற்றோரின் அழிவிற்கு காரணமானவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாமல் போராடுகின்றார் டெனீஸ்.<br />ரொறொண்டோ பல்கலைக்கழக மாணவியான கிறிஸ்டீன் குவாட்டமாலா பற்றி அறிந்து கொண்ட போது எழுந்த ஆர்வம் அவரை அங்கு கொண்டு சென்றுள்ளது. இன்றும் கனேடிய, அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் அங்கு சென்று கிராம மக்களை வெளியேற்றம் செய்ய முயல்வது நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் தான் ஒரு கனேடியப் பெண்மணி என்று சொல்வதற்கு வெக்கப்பட்டதாகவும் அந்த மாணவி கலந்துரையாடலின் போது கூறினார். <br />பல பெண்களும், சில ஆண்களும் கலந்து கொண்ட இந்தப் பட்டறையின் இறுதியில், மனிதத் தன்மையை இழந்து எவ்வாறு சமூகம் மாறி வருகின்றது என்பது பற்றிக் கலந்துரையாடி பல நாடுகளில் இடம்பெற்ற, இடம்பெறுகின்ற அழிவுகளைச் சுட்டிக்காட்டினார்கள். எப்போதோ நடந்து போன சீன நான்கிங் அழிவுகள் கூடச் சுட்டிக்காட்டப்பட்டது. அழிவுகளைச் சுட்டிக்காட்டக் கால நேரம் தேவையில்லை, எனினும் 2 இலட்சத்திற்கும் மேலாக ஈழத் தமிழர்கள் கனடாவில் வாழ்கின்றார்கள், இந்த நிமிடத்திலும் எமது நாட்;டில் கொலைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன, இவை எல்லாம் உள்நாட்டுப் போர் என்று ஒதுக்கிவிட முடியுமா? ஒருவர் கூட தமிழ் மக்களின் அழிவு பற்றி அங்கே குறிப்பிடவில்லை. இறுதியாக அது பற்றி நான் கேட்ட போது அதிகமான மாணவர்களுக்கு குவாட்டமாலா, கொலம்பியா பிரச்சனை தெரிந்த அளவிற்கு ஈழத்தமிழரின் பிரச்சனை தெரியவில்லை. அதற்கான காரணம் ஈழத்தமிழர் தமது பிரச்சனை பற்றி கனேடிய மக்களுக்கு அறியத்தருவதில்லை, உங்கள் நாட்டுப்பிரச்சனை பற்றிய விவரணப்படங்ளைப் பொதுமக்களுக்குக் காட்டிக் கலந்துரையாடல் செய்யுங்கள், ஆனால் உங்கள் அரசியல் சிக்கலானது, பலர் அது பற்றித் திறந்த மனதோடு கதைக்கத் தயங்குகின்றார்கள் என்று பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் கூறினார். இறுதியில் தான் “ ழே ஆழசந வுநயச ளுளைவநச” விவரணப்படம் பார்த்ததாகவும் இப்படியான பட்டறைகளில் அவற்றைக் காண்பித்து உங்கள் நாட்டில் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை கனேய மாணவர்களுக்கு அறியத் தாருங்கள் என்றவர், அந்த விவரணப்படம் கூட இங்கு வாழும் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டது என்று அறிந்தேன் என்றும் கூறினார். <br /><br />குவாட்டமாலப் பிரச்சனைக்கு மாணவர்கள் ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டு, அங்கு சென்று தளம் பதிக்க முயலும் கனேடியத் தனியார் நிறுவனங்களின் மின்அஞ்சல் வழங்கப்பட்டு, எல்லோரும் கண்டனக்கடிதம் எழுதுவதாகவும் முடிவு செய்யப்பட்டது. <br />எம்நாட்டுப் பிரச்சனைக்கு எமது மக்களே முட்டுக்கட்டையான நிற்கின்றார்கள்கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9540420.post-77060009600265753152007-06-06T10:42:00.000-07:002007-06-06T10:46:26.929-07:00ரொறொண்டோ வலைப்பதிவாளர்கள் சந்திப்புடீசே கடைசி நேரம் ரொறொண்டோ வலைப்பதிவாளர்கள் சந்திப்பை ரத்துச் செய்து விட்டது எனக்குக் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. சரி டீசே கிடக்கட்டும் நான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பில் சிலரைத் தொடர்புகொண்டு கடந்த ஞாயிறு சந்திப்பு நிகழ்வை நடத்தினேன். மிகவும் ஆக்க பூர்வமான கருத்துக்களை கலந்து கொண்டவர்கள் தந்தார்கள். மிகவும் தரமான அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். நாம் அடிக்கடி சந்திக்க வேண்டும் என்ற ஆவல் தற்போது எனக்கு எழுந்துள்ளது. கலந்து கொண்டடவர்களின் படங்களை இங்கே இணைத்துள்ளேன்.<br /><br /><img src="http://www.weblogimages.com/v.p?uid=thamilachi&pid=560325&sid=EHS63mrAX1" border="0" />கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-9540420.post-53584179643609958292007-05-08T11:29:00.000-07:002007-05-08T12:42:41.524-07:00Rootless but Green are the Boulevard Treesநான் கலந்து கொள்ளும் ஒரு நாடக அமைப்பின் நாடகப்பட்டறையில் புலம்பெயர்ந்த ஆசிய எழுத்தாளர்களின் நாடகப்பிரதிகளை வாசித்துக் கலந்துரையாடுவோம். கடந்த நிகழ்வின் போது தமிழ் நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்போது வினிபெக் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகவும் பணியாற்றும் உமா பரமேஸ்வரனின் “Rootless but Green are the Boulevard Trees” எனும் நாடகக் பிரதியை வாசித்துக் கலந்துரையாடினோம். இப்பிரதி 1987ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. புலம்பெயர்ந்து வாழும் இந்தியத் தமிழ் குடும்பங்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளை இப்பிரதி ஆராய்ந்துள்ளது. நேரடியாக பிரச்சனைகளை நீண்ட உரையாடல் மூலம் நகர்த்திச் சென்றது இப்பிரதியை ஒரு வானொலி நாடகப்பிரதியாக மட்டுமே என்னை பார்க்க வைத்தது.<br /><br />இருந்தும் இப்பிரதியில் வரும் ஒரு காட்சி அனேகரின் கவனத்தையும் ஈர்த்தது. அதாவது கல்லூரி மாணவியான தனது மகளின் காதல் வாழ்க்கையை அறிந்து கொண்ட தாயார் அவளைத் தன்னுடன் சென்று குடும்ப வைத்தியரைப் பார்த்து கருத்தடைக்கான மாத்திரையை வாங்கி உட்கொள்ளும் படி கேட்கின்றார். அவளது காதல் வாழ்க்கை அவள் கல்வியைக் குலைத்துவிடுமளவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல் பாதுகாப்பதே அத்தாயின் எண்ணமாக் காட்டப்பட்டுள்ளது. பல பெற்றோர்களைப் போல் கத்திக் கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணாமல், மிக ஆசுவாசமாகத் தன் மகளுடன் உரையாடுவது போல் அந்தக் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இருபது வருடங்களுக்கு முன் இந்தியத் தமிழ் நாட்டுப் பெண் எழுத்தாளரிடமிருந்து இப்படியான ஒரு பிரதி வெளிவந்திருந்தது பட்டறையில் கலந்து கொண்ட அனைவருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. நாடகப் பிரதியின் கனம், காட்சிகள் அமைக்கப்பட்ட முறை, பாத்திரங்களின் தேவை போன்ற வழமையான ஆய்வுகளை விடுத்து இப்படியான ஒரு கருவைக் கொண்ட நாடகப் பிரதியை எழுத முடியுமே தவிர யதார்த்தத்தில் இது எந்த அளவிற்குச் சாத்தியம் என்பதைத்தான் அன்று நாடகப் பட்டறை ஆராய்ந்தது. எமது மக்களிடையே இப்படியான பிரதிகளை மேடை ஏற்றுவது கூட எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறப் போகின்றது என்ற கேள்வியும் எழுந்தது.<br /><br />அங்கு பட்டறையில் கலந்து கொள்ளும் ஒரே ஈழத்தமிழ் பெண் என்ற வகையில் என்னுடைய கருத்துக் கேட்கப்பட்ட போது இப்படியான கருவைக் கொண்ட நாடகங்களை மேடை ஏற்ற என்னால் முடியும் ஆதரவு கிடைக்குமா என்பது கேள்விக் குறியே என்றேன்.<br /><br />பின்னர் கடந்த வாரம் பெண்களுக்கெதிரான வன்முறையைப் பற்றிக் சில பெண்களுடன் கலந்துரையாட நேர்ந்த போது அங்கு கலந்து கொண்ட குடும்ப ஆலோசகர் ஒருவர் குடும்பவன்முறை என்று நாம் பிரச்சனையை ஒடுக்கி விடுவதால் சிறுமிகள், பதின்மவயதினர் முதியோரின் பிரச்சனைகள் அதிகம் ஆராயப்படுவதில்லை என்றும் நாம் அது பற்றியும் ஆராய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அப்போது நாடகப்பட்டறையின் எனது அனுபவத்தைக் கூறி எமது சமுதாயத்தில் இளம் பெண்களுக்குப் பெற்றோர் கருத்தடை சாதனங்கள் பற்றி அறிமுகப்படுத்துவது எந்த அளவிற்குச் சாத்தியம் என்று கேட்டேன். எமது சமுதாயத்தில் கணிசமான அளவிற்குப் திருமணமாகாத இளம் பெண்கள் கருச்சிதைவு செய்து கொள்ளுவதாகவும், இதனால் குடும்பத்தில் அப்பெண் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அவர்களை உளவியல் தாக்கத்திற்கு தள்ளி விடுவதனால் தன்னிடம் உதவிக்கும் வருகின்றார்கள் என்றும் அவர் கூறினார்.எமது சமுதாயத்தின் மீது கொண்டுள்ள அதிகபட்சமான பயம் காரணமாக உறவு கொள்ளத் துணியும் பெண்கள் கூட கருத்தடைப் பாதுகாப்பைப் பெறத் தயங்குகின்றார்கள். இது பற்றி பொதுவாக மக்களிடையே நாம் உரையாடும் அளவிற்கு வளர்ந்து விட்டோமா என்பது கேள்விக் குறியே. அப்படி உரையாட முயன்றாலும் சும்மா இருக்கும் பெண்களுகளைத் தூண்டி விடுகின்றார்கள் என்ற முறைப்பாடே எஞ்சும். அத்தோடு எமது பிள்ளைகள் இப்படியான கேவலம் கெட்ட வேலையை செய்ய மாட்டார்கள் என்பது இன்னொரு வாதமாக இருக்கும். தமது எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு தமது சுயசிந்தனையில் தேவையற்ற உறவுக்குள் செல்லாத பெண்கள் பலர் இருக்கின்றார்கள். இவர்களுக்கு ஆலோசனைகள் தேவையில்லை. அவர்கள் தமது எதிர்காலத்தையும் தமது உறவு பற்றியும் தெளிவு கொண்டவர்கள். அதே வேளை எதிர்காலம், உறவுகள் பற்றிய தெளிவற்ற இளம் பெண்கள் பலர் தகாத உறவுக்குள் சிக்கி, தமது எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கிப் பின்னர் ஆலோசனைக்கு அலைகின்றார்கள். ஒரு சிறிய பாதுகாப்பைப் பெறத் தயங்குவதால் அவர்கள் எதிர்காலமே அழிந்து போகும் நிலைக்குத் தள்ளப்படுகின்றது. வெறுமனே முகமூடிகளைப் போட்ட படி அலைய மட்டுமே பலருக்குத் தெரிந்திருக்கிறது. யதார்த்தை எதிர்கொண்டு அதற்கான வழிமுறைகளை இனிமேலாது கையாளுவார்களா?கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-9540420.post-27242581962957155192007-05-06T05:34:00.000-07:002007-05-06T05:46:50.752-07:00VanajaDirector: Rajnesh Domalpalli<br />Principal Cast:: Mamatha Bhukya, Urmila Dammannagari, Ramachandriah Marikanti, Krishnamma Gundimalla, Karan Singh<br /><br /><img src="http://www.weblogimages.com/v.p?uid=thamilachi&pid=554801&sid=oLM19hySU9" border="0" /> <br /><br />ஆணோ பெண்ணோ சிறுவர் பிராயத்தைக் கடந்து பதின்ம வயதில் கால் வைக்கும் போது உடல் உள மாற்றங்களால் பல வித உணர்வு போராட்டங்களுக்குத் தள்ளப்படுவது வழமை. வளர்ச்சியடைந்த நாடுகளில் இவ்வயதினருக்கு அவர்கள் உடல், உணர்வு மாற்றங்கள் பற்றிப் பாடத்திட்டத்திலேயே அடக்கி விடுகின்றார்கள். கலாச்சாரக் கட்டுப்பாடு நிறைந்த நாடுகளில் பிள்ளைகளுக்கு இந்த மாற்றம் பற்றி எடுத்துரைக்கும் பொறுப்பு பெற்றோரிடம் விடப்படுகின்றது. ஆனால் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் பிள்ளைகளுக்கு அதிலும் தலித்தாகப் பிறந்து, ஒதுக்கபட்ட நிலையில் தனது அன்றாட உணவுக்காக எங்காவது வேலை செய்து, எதையாவது உண்ண வேண்டிய நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு உடல் மாற்றங்கள் உணர்வுகள் என்பன அவர்களுக்கு ஏற்படும் பாலியல் விபத்துக்கள் மூலமே அறிந்து கொள்ளக் கூடிய ஒன்றாக இருக்கின்றது.<br /><br /><img src="http://www.weblogimages.com/v.p?uid=thamilachi&pid=554800&sid=beJ52ghGS4" border="0" /> <br /><br />ரொறொண்டோ சர்வதேச திரைப்படவிழாவில் நான் பார்த்துப் பிரமித்த இன்னுமொரு இந்தியத் திரைப்படம் “வனஜா”. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் திரைப்படத்துறையில் கல்வி பயிலும் ராஜேஸ் டுமால்பாலியின் முதல் படைப்பாகிய “வனஜா” ஒரு பதினைந்து வயது சிறுமியை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டிருக்கின்றது. பதின்ம வயதில் ஏற்படும் உடல், உணர்வு மாற்றங்களாலும், அது அவள் வாழ்வில் பெண், தலித், அந்தஸ்த்து என்பவற்றோடு பின்னிப் பிணைந்து எப்படி அவள் வாழ்வை மாற்றி அமைக்கின்றது என்பதை மம்தா எனும் தலித் சிறுமியின் அபார நடிப்பின் மூலம் பார்வையாளர்களை வியக்க வைத்திருக்கின்றார் இயக்குனர். ஆந்திரப் பிரதேசத்தில் வாழும் ஒரு ராஜ குடும்பத்துப் பெண்ணின் வீட்டில் வேலைக்கு சேர்ந்து கொள்ளும் தலித் பெண்ணான பதினைந்து வயது வனஜா அந்தக் குடும்பத்தினரால் எப்படி நடத்தப்படுகின்றாள் என்பதே கதையின் கரு. முதலாளி அம்மாள் வனஜாவை அன்பாக நடத்துகின்றார். இந்த அன்பு நிலை என்பது ஒரு எல்லையைத் தாண்டாத வண்ணம் அவர்களின் வாழ்க்கை முறை அமைந்து விடும் அவலம். வேலைக்காறி என்றால் நிலத்தில் சாக்கைப் போட்டுப் படுப்பது, பழயதை உண்பது உடுப்பது என்பது எழுதப்படாத சட்டம். இதற்கு மேல் இருபக்கத்தினரும் எதையும் எதிர்பார்ப்பதில்லை. வனஜா குச்சிப்புடி நடனத்தில் ஆர்வம் உள்ளவள் என்று கண்ட முதலாளி அம்மா அவளுக்கு நடனம் கற்றுத் தருக்கின்றார். அதிஉச்சமாக இதைத்தான் அவர்களால் செய்ய முடிகின்றது. அமெரிக்காவிலிருந்து வந்த முதலாளி அம்மாளின் மகன் சேகர் குளிக்கும் போது அவன் வெற்றுடலை ஒளிந்திருந்து பார்க்கும் வனஜா, கடிதக்காறப் பெடியனை தனியாக அழைத்து அவனுடன் குழைந்து கதைத்துச் சிரிக்கும் வனஜா, இந்த இடங்களில் சிறுமி மம்தாவின் முகபாவம், நடிப்பு மிகவும் தத்ரூபமாக வியக்கும்படி அமைந்திருக்கின்றது.<br />சேகரால் பலாத்காரத்துக்குள்ளான வனஜா கற்பம் தரித்துப் பெற்ற குழந்தை ராஜவம்சத்தைச் சேர்ந்து என்பதால் குழந்தையை முதலாளி அம்மாள் தன்னுடன் வைத்திருப்பதும், தனக்கு அந்த வீட்டில் ஒரு அந்தஸ்தான இடம் கிடைக்குமா என்று ஏங்கும் வனஜாவை, வெறும் வேலைக்காறியாக மட்டும் அந்த வீட்டில் உலவ விட்டிருப்பதும், முதலாளி அம்மாளுக்கு வனஜா மேல் அன்பு, பாசம் வைக்க முடிகின்றது, ஆனால் அவரால் எந்த ஒரு நிலையிலும் அவளை தன் வீட்;டுப் பெண்ணாக நினைக்க முடியவில்லை, இப்படியே போனால் தான் சேகரின் வெறும் பாலியல் பொம்மையாகவும், வேலைக்காறியாகவும் மட்டுமே அந்த வீட்டில் வாழ்நாள் முழுக்க வாழ்ந்து இறக்க நேரிடும் என்பதை உணர்ந்த வனஜா, தனது குடிசைக்குத் திரும்பச் சென்று எப்படியாவது தனது குழந்தையை மீட்டுத் தன்னுடன் கொண்டு வந்து விட வேண்டும் என்ற தவிப்போடும், நம்பிக்கையோடும் காத்திருப்பதோடு திரைப்படம் நிறைவு பெறுகின்றது.<br /><br />திரைப்பட இறுதியில் பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த இயக்குனர், இத்திரைப்படம் ஆந்திராவில் ஒரு கிராமத்தில் படமாக்கப்பட்டது என்றும் இதில் நடித்த பலருக்கு இத்திரைப்படமே முதல் நடிப்பு அனுபவம், முக்கியமாக சிறுமி மம்தாவிற்கு என்றும், சிறுமியின் நடிப்புத் திறனை அடையாளப்படுத்தியதோடு, இரண்டு மாதங்களில் மிக ஆர்வமாக குச்சிப்புடியை கற்றுக் கொண்டார் என்றும் கூறினார். ஞனரஞ்சகத் திரைப்படங்களைத் தான் வெறுப்பதாகவும், தனது அடுத்த திரைப்படமும் இந்தியக் குக்கிராம மக்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்பதையும் தெரிவித்தார்.கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9540420.post-52107350424616182192007-05-04T09:01:00.000-07:002007-05-04T09:03:24.029-07:00Toronto Newsஇன்று காலை செய்தியில் மிசிசாகாவைச் சேர்ந்த 12 வயது நிரம்பிய மனவளர்ச்சி குன்றிய சிறுமி ஒருத்தியை அவளது தாயாரும், ஆறு ஆண் நண்பர்களும் சேர்ந்து கொண்டு பலவிதமான பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கி வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அறியத்தந்தார்கள். பலவந்தமாக அந்தச் சிறுமிக்கு போதை மருந்துகளும் ஊட்டியுள்ளார்கள் (கொகேயின் உட்பட) சிறுமியின் பெயர் விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இதில் வேதனையான விடையம் என்னவென்றால் அந்த ஆறு ஆண்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்ட போது அதில் ஒருவரின் பெயர் முரளி பாலா (பாலசுப்ரமணியம்) மற்றையோர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காலையில் வேளைக்கு வெளிக்கிடும் வேளையில் அவசரமாகச் செய்தியை மேலோட்டமாகப் பார்ப்பதுண்டு. மனம் எம் பெண்கள் யாராவது கொலைசெய்யப்பட்டார்களா, தற்கொலை செய்து கொண்டார்களா என்ற பதட்டம் எப்போதுமே இருந்துகொண்டிருக்கும். ஆனால் இன்றைய செய்தி, வேலைத்தளத்தில் இது பற்றி மற்றவர்கள் கதைக்கும் போது நான் கலந்து கொள்ளாமல் தவிர்த்துக் கொண்டேன்.கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9540420.post-24634210729469092872007-05-03T09:12:00.000-07:002007-05-03T09:16:06.760-07:00Male supremacy<strong>"<em>Male supremacy has kept woman down. It has not knocked her out</em>"</strong>. – by: <a href="http://www.yourquotations.net/author/Clare%20Boothe%20Luce.html">Clare Boothe Luce</a><br /><br />அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். எங்கள் சமுதாயக் கட்டமைப்பும், நோக்கும் பாறாங்கல்லைத் தூக்கித் தலையில் போட்டாலும் மாற்றங்களைக் காணுமா என்ற கேள்விக் குறிதான் தற்போது எனக்குள் எஞ்சி நிற்கின்றது. சிலவாரங்களுக்கு முன்பு ரொறொன்டோவில் நடந்த இரட்டைக் கொலைகளுக்காக ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன்.<br /><br />சாடுதல்கள் அற்று நடுநிலையாக எமது மக்களின் உளவியல் தாக்கங்கள்தான் இப்படியான தற்கொலை, கொலைகளுக்குக் காரணம் என்பதாய் பலரின் பார்வைகள் இருந்ததும், இந்த உளவியல் தாக்கங்களை எமது மக்கள் அடையாளம் கண்டு தக்க நேரத்தில் அதற்கான மருத்துவத்தையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டால் இவற்றிலிருந்து விடுபட முடியும் என்ற மருத்துவ ஆராய்சியாளர்கள் ஆலோசகர்களின் உரைகளைக் கேட்டதாலும், படித்ததாலும் இப்படியான உயிரிழப்புகளிலிருந்து எம் மக்களுக்கு நிவாரணம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை எனக்குள் எழுந்திருந்தது. மாறாக ஒரு சம்பவத்தின் பின்னர் அரைத்து அலசும் கும்பல்களின் வாயில் இருந்து வந்த தகவல்களை அண்மையில் செவிமடுத்ததால் இருந்த நம்பிக்கை எல்லாம் போய், முன்னேற்றப் பாதையை விடுத்து எமது சமூகம் எப்போதோ அழிந்து புதைந்து போயிருக்கும் எமது கலாச்சாரங்களை சிறப்பு என்று வெளியே இழுத்து விட்டுவிடுமே என்று பயமாக இருக்கின்றது. கொலைசெய்யப்பட்ட இளம் பெண், குழந்தைகளின் தாய், தாய் தந்தையரின் மகள், சகோதரங்களின் அன்புச் சகோதரி, உற்றார் உறவுகளின் தோழி இவையனைத்தையும் விடுத்து, தனக்குள்ளான கனவுகளைச் சுமக்கும் ஒரு சாதாரண மனுசி. எம்மக்கள் சிலரின் தீர்ப்பு செய்த குற்றத்திற்கான தண்டனை என்பதே. கணவன் கடுமையான உழைப்பாளி, மென்மையான குணம் கொண்டவன், அன்பானவன். அவனுக்கு வாழ்வில் கிடைத்த பெரிய ஏமாற்றம்தான் இந்த கொலைக்குக் காரணம் என்று கூசாமல் கொலைசெய்த கணவனுக்காக குரல் கொடுக்கும் ஒரு சாரார்.<br />ஒருவனுக்கு ஒருத்தி என்றும், சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது திருமணம் என்றும் இந்திய நாடக வசனங்களைக் கேட்டுக் கேட்டுப் பழகிப் போனவர்களுக்கு, இருவருக்கிடையிலான அலைவரிசை என்பது புரியப் போவதில்லை. உறவுக்குள் விரிசல் ஏற்படின் அதனைப் புரிந்து கொண்டு குடும்பம் பிளவு படக்கூடாது என்று இருவருமே விரும்பின் அதற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்குப் பல ஆலோசனை நிலையங்கள் இருக்கின்றன. அதைக் கூடப் பெறுவதற்கு எம்மக்களுக்குத் தயக்கம். தமது திருமணம் ஆட்டம் காண்கின்றது என்பதை மற்றவர் அறியக் கூடாது என்ற எண்ணம்தான் இவர்களுக்குப் பெரிதாக இருக்கின்றது. இப்படியாகப் பிறருக்கான வாழ்ந்து முடிவில் உளவியல் தாக்கத்தின் உச்சத்தில் கொலை தற்கொலை என்று தள்ளப்பட்டு ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையுமே அழித்துக் கொள்கின்றார்கள்.இதில் பெரிய நகைச்சுவை என்னவெனின் சட்டத்தைப் பற்றிய குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமல் ஒருவர், மனைவி செய்த பெரீய்யய தவறுக்காக கணவன் கோவம் கொண்டு கொலை செய்து விட்டானாம் எனவே அவனுக்கு அதிகம் தண்டனை கிடைக்காது என்பதுதான். இவர்கள் எல்லாம் இந்தியா சென்று பஞ்சாயத்துப் பண்ணத்தான் லாயக்கு.<br />அண்மையில் பெண்கள் அமைப்புகளில் தாக்கங்களுக்கு உள்ளாகும் பெண்களின் பதிவு கணிசமான அளவு உயர்ந்துள்ளது. உப்புசப்பற்ற விடையங்களுக்கும், முக்கியமாக சந்தேகம் எனும் நோய்க்குமே பெண்கள், ஆண்களால் மிக்கக் கடுமையாகத் தாக்கப்படுகின்றார்கள். அமைப்புகளுக்கு வந்து மனம் திறந்து தமது கவலைகளைக் கூறி கண்ணீர் விட்டுச் செல்ல இவர்களால் முடிகின்றது. அடுத்த படியாக அதற்கான தீர்வு எனும் போது தமது சமூகம், குடும்பவாழ்வு, குழந்தைகள் என்ற தயக்கம் தான் இவர்களை ஆட்கொள்கின்றது. தொடர்ந்து பலதரப்பட்ட வன்முறைகளுக்கு முகம் கொடுக்கும் பெண்கள், உளவியல் தாக்கங்களுக்குத் தள்ளப்பட்டு, முடிவில் தவறான முடிவையே நாடுகின்றார்கள். இதனைப் பற்றி எனது மக்களுக்கோ குறிப்பாக இந்த நிலைக்குப் பெண்களைத் தள்ளும் ஆண்களுக்கோ எந்தக் கவலையும் இல்லை.<br />தமது குடும்ப கௌரவம், கலாச்சாரம் என்று வரட்டுப் பிடி பிடித்துத் தொங்குகின்றார்கள். இப்படியே போனால் மனைவியின் கற்பை நிரூபிக்க தீ மிதிக்கச் சொன்னாலும் சொல்வார்களோ என்று சந்தேகமாக உள்ளது.<br />செப்டெம்பர் மாதம் 21ம் திகதி வெளியான உலக சுகாதார அமைப்பின் கணிப்பின்படி 2020 ஆண்டு "யூனிபோல டிப்பிறஷன்” எனும் மனஅழுத்த நோய், மேற்குலக நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் இரண்டாவது முக்கிய நோயாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்நோயினால் ஆண்களை விடப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகின்றது. தற்போது உலகளாவிய அளவில் 121 மில்லியன் மக்கள் மனஅழுத்தம், உளவியல் தொடர்பான நோயினால் பீடிக்கப்பட்டிருக்கின்றார்கள். கடந்த ஒரு வருடத்திற்குள் 6சதவீதம் பெண்களும், 3சதவீதம் ஆண்களும் இவ்வகை நோயினால் ஒன்றாரியோ நகரத்தில் பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றார்கள். அனேகர் 15-25 வயதுக்குள்ளான பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.<br />ஆய்வாளர்கள் தரவுகளை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றார்கள். பாதிப்பிற்குள்ளாவோர் எங்கே எப்படி உதவிகளைப் பெறலாம் என்று தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், சுவரொட்டிகள் சுட்டிக்காட்டிய வண்ணம் இருக்கின்றன. இருந்தும் உதவி பெறுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கின்றது. இதற்கான காரணம் அடையாளம் காணப்படாமை என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருப்பினும், எமது மக்கள் எனும் போது அறியாமை, போலி கௌரவம் என்பதே உண்மையாக உள்ளது.கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9540420.post-74153284412234913572007-05-02T08:24:00.000-07:002007-05-03T05:36:02.757-07:00Killing us softly….விளம்பரங்கள் இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கங்களை மையமாக வைத்து ஜீன் கில்போன் பல விவரணப்படங்களை எடுத்து விருதுகளையும் பெற்றுள்ளார். “Spin the Bottle”, “Deadly Persuasion” போன்ற இவரது விவரணப்படங்கள் மதுபானங்கள், சிகரெட் போன்றவற்றை விளம்பரங்கள் மூலம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் எப்படி வியாபாரிகள் நுழைக்கின்றார்கள் என்றும் அதனால் மாணவர்களிடையே ஏற்படுத்தும் தாங்களை ஆதாரங்களோடும் விளக்கியுள்ளார். ஜீன் கில்போனின் ““Killing us softly” ” விளம்பரங்கள் பெண்களை எப்படியான இழிவுபடுத்துகின்றன என்பதோடு, விளம்பர நடிகைகளின் தோற்றங்கள் இளம்பெண்களின் மத்தியில் எப்படியான தாகங்களை ஏற்படுத்துகின்றன என்பதைக் காட்டி நிற்கின்றது. மின்னும் கன்னங்களும், பட்டுப்போல குலுங்கும் தலைமயிரும், வாரி எடுத்து விட்டது போல் கால்கள், இடுப்பு என்று ஆறு அடி உயரப் பெண்களை விளம்பரங்கள் மூலம் அலையவிட்டு இளைஞர்கள் மத்தியில் அழகு என்பதற்கு வரைவிலக்கணம் வகுத்து உடல்பருத்த, முகப்பரு கொண்ட பெண்களை மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கி தற்கொலைக்கு தூண்டும் அளவிற்கு கொண்டு சென்றிருக்கிறது.<br />இப்படியான விளம்பரங்களை கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு எடுத்துச் சென்று மாணவர்கள் மத்தியில் அதனைப் போட்டுக்காட்டி அவர்களுடைய கருத்துக்களையும் இந்த விவரணப்படங்களில் இணைத்திருக்கின்றார்கள். பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்குக் கூட இந்த விளம்பரங்கள் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை விளம்பர நடிகைகளின் தோற்றங்கள் கொண்ட பெண்களை தங்கள் மனம், கண்கள் நாடுகின்றன என்றும், தமது காதலி உடல்பருத்தால் தமக்குள்ளும் தாக்கங்கள் ஏற்படுகின்றது என்பதாய் இந்த மாணவர்கள் கூறுகின்றார்கள். அழகு என்றால் என்ன என்பதை வியாபாரிகள், ஊடகங்கள் விளம்பரங்கள் மூலம் தமக்கான குறுகியவட்டத்திற்குள் வரவிலக்கணம் கொடுத்து இஞைர்களை அதற்கு அடிமையாக்கி தம் அழகு சாதனப்பொருட்களைச் சந்தைப்படுத்துகின்றார்கள். அத்தோடு தேவையற்ற பல பொருட்களுக்கும் பெண்களின் உடல் அங்கங்கள், அரைகுறை உடையணிந்த பெண்களின் தோற்றங்கள் என்பனவற்றைப் பயன்படுத்தி பெண்களை ஒருகாட்சிப் பொருளாக்குகின்றார்கள். இவையனைத்து மேற்குலக வியாபாரத் தந்திரங்கள். இந்த வியாபாரிகளுக்கும், விளம்பதார்களுக்கும் எதிராக ஜீன் கில்போன் போன்றவர்களும், பல பெண்ணியவாதிகளும் குரல் கொடுத்த வண்ணமே இருக்கின்றார்கள்.<br />அண்மையில் “டவ்” சவர்காரப் பொருட்களுக்கு ரொறொண்டோவின் அனைத்துப் பாகங்களிலும் விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருந்தது. பல நிறங்களில, பல அளவுகளில் பெண்களை இந்த சவர்க்காரப் பொருளுக்குப் பயன்படுத்தி ஒரு சாதனையை ஏற்படுத்தியிருக்கின்றார்கள் என்றால் மீண்டும் பெண்களின் உடல்கள்தான் இங்கே காட்சிப் பொருளாக்கப்படுகின்றது. இவையனைத்தும் அமெரிக்க கனேடிய சஞ்சிகைகள், தொலைக்காட்சிகளுக்கான விளம்பரங்கள். போன கிழமை எனது நண்பர் ஒருவரின் வீட்டில் கனேடிய தமிழ் தொலைக்காட்சியை சில மணிநேரம் பார்க்க முடிந்தது. அந்த சிலமணி நேரங்களில் தமிழ் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட விளம்பரங்கள் அதிர்சி தரக்கூடியதாக அமைந்திருந்தன.<br />ஒன்று – "ரப்பின் புளோரிங்" இற்கான விளம்பரம். ஒருவர் வேட்டி சால்வையோடு மரத்தின் மேல் கையில் தாலிக்கயிற்றோடு தொங்குகின்றார், அந்த இளைஞன்?? இவரின் பேச்சு மூளை பாதிக்கப்பட்டவர் போல் காட்டப்பட்டது. அதன் தேவை எனக்குப் புதியவில்லை. கீழே அவரின் தந்தை என்று சொல்லிக் கொண்டு அதே ஆண் வேறு வேடத்தில் நின்று கொண்டு “வடிவான பிள்ளை வீடும் சீதணமாத் தருகின்றார்கள் முகூர்த்த நேரம் போகப்போகுது வந்து தாலியைக் கட்டு” என்பதாய் கெஞ்ச மரத்தில் தொங்கும் மகன் “வீட்டுக்கு ரப்பிட் புளோரிங்கை கூப்பிட்டு காட்வூட் புளோர் காப்பெட் போன்றவை போட்டால்தான் வந்து தாலி கட்டுவன” என்று கேட்பதாய் அந்த விளம்பரம் அமைந்திருக்கின்றது.<br />பெண்ணுக்குத் தாலி கட்டுவதென்பது எவ்வளவு சிறுமைத்தனமாக பெண்ணால் ஒன்றும் செய்ய முடியாது என்பது போலும், புளோரின், காட்பெட் போன்று பெண்ணையும் ஒரு பொருளாக்கி இந்த விளம்பரத்தில் காட்டியிருக்கின்றார்கள். அந்த ஆண் எதற்கு அசட்டுத்தனமாகவே கதைக்கின்றார் என்பது எனக்கு எப்போதும் புரியாத புதிராகவே இருக்கின்றது. இந்த ஆணை எந்த ஒரு பெண்ணும் முன்வந்து கட்டிக்கொள்ளுவாளா என்பது பற்றி இந்த விளம்பரத்தை எடுத்தவருக்கு ஏன் சிந்தனை எழவில்லை. இந்த விளம்பரம் எந்த வகையில் ரப்பிட் புளோரிங்கின்று வியாபாரத்தைக் கூட்டிக்கொடுக்கப் போகின்றது.<br /><br />அடுத்து “நிரு ப்ராண்ட்” சமையல் பொருட்களுக்காக இந்தியா சென்று டொலர்களை அள்ளிக் கொடுத்து ஒரு விளம்பரம் பண்ணிக்கொண்டு வந்திருக்கின்றார்கள். “சமையல் நல்லாவே இல்லை, அம்மா சமையல் போல் இல்லை” என்று சாப்பாட்டு மேசைமேல் இருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் இளைஞன் முகத்தைச் சுளித்து தனது அருகில் நிற்கும் இளம் மனைவியைப் பார்த்துச் சொல்லி விட்டுப் போகின்றார். இளைஞனின் தாயார் “நிரு ப்ராண்ட்” பொருட்களோடு வந்து மருமகளுக்கு சாப்பாட்டில் அதனை சேர்த்துக் கொள்ளச்சொல்லி குடுக்கின்றார் என்பதாய் விளம்பரம் அமைந்திருக்கின்றது.<br /><br />புலம்பெயர்ந்து வந்த ஈழத்து ஆண்களில் பலரும், கனடாவில் பிறந்து வளரும் பல ஆண்களும் தமது வீட்டு வேலைகளை தமது மனைவிமாருடன் சந்தோஷமாகப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கி விட்டார்கள். மீண்டும் எதற்காக இந்தியக் குப்பைகளை இங்கே இழுத்து வந்து தொலைக்காட்சியில் போட்டுக்காட்டுகின்றார்கள். திரும்பத் திரும்ப ஒன்றை பார்ப்பதன் மூலம் மனதில் அது சரி என்று பதிந்து விடுவதாய் ஆய்வுகள் கூறுகின்றன. அதனால்தான் தற்போது இரவில் குழந்தை அழும்போது எழுந்து கொள்வது, டயப்பர் மாத்துவது, வீடு துப்பரவு செய்வது, உடுப்பு துவைப்பது போன்ற பல விளம்பரங்களுக்கு ஆண்களையும் பயன்படுத்துகின்றார்கள் சிந்திக்கத் தெரிந்த சமூக அக்கறை கொண்ட விளம்பரதார்கள்.<br />தமிழ் தொலைக்காட்சிகளில் இந்திய நாடகங்கள் தேவையில்லைத மனஅழுத்தங்களை புலம்பெயர்ந்த பெண்கள் மத்தியில் கொடுத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் இப்படியான விளம்பரங்களை எதற்கான விளம்பரதாரர்கள் இணைத்துக்கொள்ளுகின்றார்கள் என்பது தெரியவில்லை. புலம்பெயர்ந்த எம்மவர் தயாரிப்பு நிரூப்ராண்ட் பொருட்கள். இதற்கு இப்படியான விளம்பர தேவை எதற்கு??பழக்க தோசத்தில் நிரூ ப்ராண்டை வாங்கி வந்த நான் அந்த விளம்பரம் பார்த்த பின்னர் வாங்குவதில்லை. என்னால் முடிந்தது இவ்வளவே.<br /><br />பின் குறிப்பு இது கனேடித் தமிழ் பத்திரிகை ஒன்றிற்காக நான் எழுதிய கட்டுரை இக்கட்டுரை வெளிவந்த பின்னர் இரு கனேடிய வர்த்தகர்களும் தமது விளம்பரங்களை நிறுத்திவிட்டிருந்தார்கள். ஆனால் "ரப்பிர் புளோர்" மீண்டும் அந்த விளம்பரத்தை போடத் தொடங்கியுள்ளது. பலர் ஒன்று சேர்ந்து ஒரு போராட்டமாகக் கொண்டு வந்துதான் கனேடியத் தமிழ் ஊடகங்களில் பெண்களைக் கொச்சைப் படுத்துவதைத் தடுக்க முடியுமே தவிர வெறுமனே ஒரு சில பெண்கள் குரல் கொடுப்பதால் ஒன்றும் நடந்து விடப் போவதில்லை. என்ன செய்வது கனேடியப் பெண்களின் நிலை இப்படியாக உள்ளது.கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9540420.post-53590983254030838892007-05-01T20:02:00.000-07:002007-05-01T20:04:26.733-07:00சாயவனம் கந்தசாமிஒருவர் அவர் வாழ்க்கை முறை எப்படியிருப்பினும், பிறருக்குத் தன்னை அடையாளம் காட்டும் போது தனக்கு ஒத்த கூட்டத்திற்குப் பொருத்தமானவராகவே அடையாளப்படுத்திக் கொள்வார். சமூகநலவாதி, அரசியல்வாதி, முற்போக்குவாதி, பெண்ணியவாதி, இலக்கியவாதி என்று பல வடிவங்களில் தனது வட்டத்திற்கு ஏற்றபடி தன்னை உருமாற்றிக் கொண்டு, அதற்கேற்ப தனது கதையையும் மாற்றிக் கொள்பவரான இருந்தால்தான் அவரால் வாழ்வைக் கொண்டு நடத்த முடியும். இவை எல்லாம் வெளித்தோற்றத்திற்காகப் போடும் வேசம் எனினும் கட்டாயமாகிப் போன ஒன்றாகவே உள்ளது.சிலமாதங்களின் முன்னர் கனடா வந்திருந்த எழுத்தாளர் “சாயவனம்” கந்தசாமியுடன் ஒரு இலக்கியச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. அதற்கு நானும் சென்றிருந்தேன். “வைகறை” பத்திரிகையில் வெளிவந்திருந்த அவரது நேர்காணல் அவர் மேல் எந்த வித மரியாதையையும் எனக்கு வழங்கவில்லை. மாறாக இப்படியாக ஒரு பிற்போக்குத்தனமான பேட்டியைக் கொடுக்கும் ஒரு இலக்கியவாதி எப்படி சாகித்திய அகாதெமி விருதைப் பெறும் நாவலை எழுதினார் என்ற கேள்வியே எஞ்சியிருந்தது. இருந்தும் சந்திப்பின் நேரம் அவரின் உரை அவர் மேல் எனக்கு ஒரு மதிப்பை உண்டு பண்ணலாம் என்ற நம்பிக்கையில் சென்றிருந்தேன். இருந்தும் மீண்டும் எனக்கு ஏமாற்றத்தை அவரது உரை வழங்கியிருந்தது. கொடுத்த தலைப்பை விட்டு எதையோ நீண்ட நேரமாகப் பேசி முடித்தவர் தொடர்ந்து வந்த கேள்விகளுக்கும் பொருத்தமற்ற தனமாக பதிலளித்த வண்ணமிருந்தார். ஒரு நல்ல இலக்கியவாதிக்கான எந்த ஒரு அடையாளத்தையும் நான் அவரிடம் காணவில்லை. இருந்தும் மிகவும் புகழ் பெற்ற “சாயவனம்” நாவலில் அவரின் எழுத்தை நான் பார்த்து விடவேண்டும் என்று முயன்றும் நாவல் எனக்குக் கிட்டவில்லை. கடந்த வாரம் தற்செயலாக அவரின் “அவன் ஆனது” நாவல் கிடைக்கப்பெற்று இருமுறைகள் வைப்பதற்கு மனமின்றி வாசித்து முடித்தேன். நாவலின் தரம் சா.கந்தசாமியா இப்படி எழுதினார் என்று என்னை வியக்க வைத்தது. இப்படி ஒரு தரமான நாவலை எழுத முடிந்த எழுத்தாளருக்கு ஏன் நாகரீகமாக பேச முடியவில்லை. ஒரு படைப்பாளிக்கு அவனின் மனதில் இருக்கும் கருத்தே படைப்பாக வெளிப்படும். அப்படியிருக்கும் போது படைப்பில் இவ்வளவு சிந்தனைத் தெளிவைக் கொண்ட இந்த எழுத்தாளரால் ஏன் கூட்டத்தில் முறையாக உரையாட முடியவில்லை என்பது எனக்கு இன்னும் புரியாமல் உள்ளது. இனி அவரின் “அவன் ஆனது” நாவலைப் பற்றிச் சிறிது பார்த்தோமானால், கடினமான வார்த்தை பிரயோகங்களைக் காட்டி வாசகரைப் பிரமிக்கவும், சிரமப்படுத்தவும் முயலும் பல முற்போக்கு இலக்கியவாதிகள் மத்தியில் எளிய எழுத்து நடையில் ஒரு மனேதத்துவ நாவலைப்; படைத்துள்ளார் சாயவனம் கந்தசாமி. ஒவ்வொரு மனிதனும் ஏதோவகையில் மனநிலை பாதிக்கப்படுபவனாகவே இருக்கின்றான் என்பதை அன்றாடம் நாம் காணும் மனிதர்களில் இருந்து அடையாளப்படுத்தியிருக்கின்றார். ஒவ்வொருவரும் தம்மை தமது வாழ்வை முழுமையாப் பார்த்த படி மற்றையோரை ஏன் இப்பிடி இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பிய வண்ணமே இருக்கின்றார்கள். இந்தச் சுழற்சியின் எழுத்து வடிவம் தான் “அவன் ஆனது” நாவல். ஜானகிராமனும், ஜெயகாந்தனும் ஆர்ப்பாட்டமாகவே கலாச்சார உடைப்புக்களை எழுதிப் பெயர் பெற்றிருக்கின்றார்கள், ஆனால் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் “ரோஸ்மேரி” என்ற ஒரு பெண்பாத்திரத்தைப் படைத்து பெண்களுக்கான அத்தனை அடைப்புக்களையும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் உடைத்தெறிந்திருக்கின்றார்.<br /><br /><br />“சாயவனம்” கந்தசாமி ஒரு எழுத்தாளராகவும், ஓவியராகவும், சிற்பிகள் பற்றிய விவரணப் படம் எடுப்பவராகவும் பெயர் பெற்றிருக்கின்றார். இருந்தும் என்னுள் எஞ்சியிருக்கும் கேள்வி எதுவெனில் ஒரு தரமான இலக்கியவாதியாக ஏன் சா.கந்தசாமியால் பொதுக்கூட்டம் ஒன்றில் பேச முடியவில்லை?. அவர் தனது எழுத்தில் வேஷம் போடுகின்றாரா என்றால், இவ்வளவு தூரம் மனித மனங்களை ஆராய்து எழுத்தில் கொண்டு வரும் ஒரு எழுத்தாளன் நிச்சயமாகத் சிந்தனைத் தெளிவுடையவனாகவே இருப்பான். எனவே சா.கந்தசாமியுடனான சந்திப்பை ஒரு கெட்ட கனவாக மறந்து அவரின் படைப்புக்ளைத் தேடி வாசிப்போம்.கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9540420.post-26424141062947998522007-04-26T13:43:00.000-07:002007-04-26T13:59:05.535-07:00The Namesake" "We all came out from under Gogol's 'Overcoat' ரஷ்ய எழுத்தாளர் Nikolai Gogol's “Overcoat” சிறுகதைத் தொகுதி வெளியானதிலிருந்து இந்த வரிகள் பிரபல்யமான "quote" ஆகப் பாவனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றது. தன்னை மிகவும் பாதித்த Nikolai Gogol's இன் “Overcoat” உம் வேறு பல நாவல்களும்தான் சாதாரன மக்களின் அன்றாக வாழ்வை நகர்த்திச் செல்லும் ஒரு எளிமையான “The Namesake” எனும் நாவலை எழுதத் தூண்டியது என்கின்றார்; லண்டனில் பிறந்து அயர்லாந்தில் வளர்ந்து தற்போது போஸ்டனில் வாழும் நாற்பது வயதுடைய Jhumpa Lahiri. தன்னிடம் யாராவது நீ எந்த நாட்டைச் சேர்ந்தவள் என்று கேட்டால் தான் வளர்ந்த படித்த நன்றாகப் பரிச்சயப்பட்ட நாடான அயர்லாந்தைக் குறிப்பிடும் போது அவர்கள் தன்னை வினோதமாகப் பார்ப்பதாகவும், தன் நிறத்தையும் உருவத்தையும் வைத்து தான் அறியாத தனது பெற்றோரின் நாடான இந்தியாவைக் குறிப்பிடும் போது மட்டுமே அவர்கள் ஏற்றுக்கொள்வதாகவும் இதனால் தான் அடையாளத்தைத் தொலைத்தவளாகப் பல தருணங்களில் உணர்ந்திருப்பதாகவும் குறிப்பிடுகின்றார். ஒரு பெண் படைப்பாளியா இருந்து கொண்டு அவரது படைப்புக்களின் ஆண் பாத்திரத்தை முன்நிறுத்துவதற்கு ஏதாவது பிரத்தியேக காரணம் இருக்கின்றா என்று கேட்ட போது, அப்படி ஒரு பிரத்தியே காரணமும் இல்லை ஆர்வம்தான் காரணம் அத்தோடு ஆண்கள் என்பார்வையில் மிகவும் வினோதமானவர்களாக தெரிகின்றார்கள் என்றும் கூறும் ஹ_ம்பா லாஹிரி தனக்கு ஆண் சகோதரர்கள் இல்லை என்றும் கூறுகின்றார்.<br /><img src="http://www.weblogimages.com/v.p?uid=thamilachi&pid=553509&sid=uAR53kEFU8" border="0" /> <br /><br />இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான “Interpreter of Maladies” 2000 ஆம் ஆண்டு “Pulitzer” பரிசைப் பெற்று 16 மொழிகளில் மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டது. “The Namesake” இவரது முதலாவது நாவல். மிகவும் பிரபல்யமாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது. மீரா நாயரின் இயக்கத்தில் வெளியான “The Namesake” திரைப்படம் நாவல் அளவிற்குப் பாதிப்பைத் தரவில்லை என்று பார்வையாளர்கள் கூறுகின்றார்கள். எந்த ஒரு நாவலுமே திரைப்படமாக வெளியாகும் போது இதே குற்றச்சாட்டைத்தான் பெறுகின்றது.<br /><br />எனது பார்வையில் “The Namesake”<br />நான் நாவலைப் படிக்கவில்லை திரைப்படம்தான் பார்த்தேன் எனவே பார்வை திரைப்படத்திற்கு மட்டும்தான். தீபா மேத்தா அதிகமாக அதிரடியான கருக்களை எடுத்துத் திரைபடமாக்கி பார்வையாளர்களை அதிர வைப்பார். மாறாக மீரா நாயர் அனேகமாக குடும்பங்களுக்குள்ளான சிக்கல்களை ஒரு மெல்லி நீரோட்டமாக ஓட விட்டுப் பார்வையாளர்களைச் சிந்திக்க வைப்பார். தீபா மேத்தாவின் திரைப்படங்கள் பார்த்த உடனே தாக்கத்தை ஏற்படுத்தும், பின்னர் சிந்திக்கும் போது அதிகம் பாதிப்பைத் தராது. மீரா நாயரின்; திரைப்படங்கள் சிந்திக்கச் சிந்திக்கப் புதிய அர்த்தங்களைத் தோற்றுவித்துக் கொண்டே இருக்கும். இத்திரைப்படம் நெருக்கமான குடும்ப உறவுகளோடு வசதியாக வாழ்ந்த ஒரு பெண் திருமணம் காரணமாக புலம்பெயர்ந்து புதியநாட்டில் எதிர்கொள்ளும் பிரச்சனை, குழந்தைகள் பிறந்து வளர்ந்த பின்னர் ஏற்படும் சந்ததி இடைவெளி என்று ஒரு நெருக்கமான குடும்பஉறவில் ஏற்படக் கூடிய சிக்கலைக் ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இன்றி நகர்த்திச் செல்கின்றது.<br /><img src="http://www.weblogimages.com/v.p?uid=thamilachi&pid=553510&sid=jsD94eALO4" border="0" /> <br /><br />ஒரு ரெயில் பயணத்துடன் திரைப்படம் ஆரம்பமாகின்றது. பயணம் செய்யும் முதியவர் ஒருவர் சக பிரயாணியான இளைஞனிடம் அமெரிக்கா சென்றிருக்கின்றாயா? இங்கிலாந்து சென்றிருக்கின்றாயா? என்று கேள்விகள் கேட்டு, வாழ்வில் அனுபவிப்பதற்கு எத்தனையோ இருக்கின்றன கிடைத்ததை கையில் எடுத்துக் கொண்டு நாடுநாடாகச் சென்று வா என்கின்றார். அதற்கு இளைஞன் என் தந்தை கூறுவார் உலகமே உன் கையில் வரும் நீ புத்தங்களைப் படிப்பதனால் என்று விட்டு தனக்குப் பிடித்த எழுத்தாளர் நிகொலாயின் ஓவர் கோட் எனும் படைப்பைப் படிக்கின்றான். அவன் சென்ற ரயில் விபத்திற்குள்ளாகின்றது.<br />அடுத்த காட்சியாக அதே இளைஞன் அமெரிக்காவிலிருந்து வந்து இந்தியாவில் தபுவைப் பொம்பிளைப் பார்த்துத் திருமணம் செய்து கொள்வதாக் காட்சி அமைக்கப்பட்டிருக்கின்றது. ரெயில் விபத்தும் அந்த முதியவரின் பேச்சும் இளைஞனை மனம்மாறச் செய்துள்ளது.<br />அமெரிக்கா என்ற போது கற்பனையில் கிடைக்கக் கூடிய அத்தனை ஆடம்பரங்களும் நிஜத்தில் அழிந்து போக ஒடுக்கமான அந்த வீட்டினை ஏக்கத்துடன் பார்க்கின்றார் மனைவி (தபு). பயணக் களைப்பால் எழுந்து, புதிய நாடு, அதிகம் அறிமுகமற்ற கணவன் என்ற புதிய உறவு, அடுத்து என்ன என்பது போல் குழம்பி நின்றவளை “இப்பிடி இரு நான் இருவருக்குமாய் தேனீர் போடுகின்றேன்” என்று கணவன் (இஃரான் கான்) கூறிய போது ஆச்சரியத்துடன் கூடிய புன்சிரிப்பு மனைவியின் முகத்தில் தோன்ற அவர்களின் உறவின் நெருக்கம் மிக இயல்பாக பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்தப்படுகின்றது. கணவனின் உடைகளை வோஷின் மெஷினில் போட்டு அவை சுருங்கி அளவில் சிறுத்து விட, கணவன் சினந்து கொண்ட போது பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாமல் குளியல் அறைக்குள் ஒளிந்து கொள்ளும் மனைவி. பின்னர் அவளைச் சமாதானப் படுத்த பூட்டிய அறையின் வெளியில் நின்று பாட்டுப் பாடும் கணவன். சின்னச் சின்னச் சம்பவங்கள் புலம்பெயர்ந்த ஒவ்வொருவரின் நினைவுகளை மீட்டுகொண்டு வரும்.<br />கருத்தரித்தபோது வாயில் ஏற்படும் தவனத்துக்காய் சீரியலில் மிளகாய்த்தூளையும் உப்பையும் போட்டுச் சாப்பிடும் பெண். மிக மலிவான விலையில் இந்திய வீதிகளில் விற்பனையாகும் பொருட்கள் கூட கருத்தரித்த பெண்ணின் ஏக்கமான நேரத்தில் கிடைகப்பெறாத வாழ்க்கை நிலை.“தனிமையான இந்த நாட்டில் எனது பிள்ளையை வளர்க்க விரும்பவில்லை” மனைவி முதல் மகன் பிறந்த போது கூறுகின்றார். “தனிமைதான் ஆனால் இந்த நாட்டில் இருக்கும் சுதந்திரத்தையும் குழந்தை வளர்ந்து அவனுக்கு எதிர்காலத்திற்காய் கிடைக்கக் கூடிய சந்தப்பங்களையும் சிந்தித்துப் பார்” கணவன் கூறுகின்றார். குழந்தை அங்கேயே வளர்கின்றான். சாத்திர சம்பிரதாயம் பார்த்துப் பெயர் வைக்க நேரம் கிடைக்காமல் மருத்துவரின் அவசரத்திற்கிணங்க முதலில் தன் நினைவிற்கு வந்த தனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரான நிகலாய் கோகுல் இன் பெயரில் கோகுலை மட்டும் வீட்டுப் பெயராக மகனுக்கு வைக்கின்றார்கள். அதுவே அவன் வாழ்வில் பல இடங்களில் அவனைச் சங்கடத்துக்கு உள்ளாக்குகின்றது. எழுத்தாளர் ஹ_ம்மா லாஹிரி இந்தியர்கள் தமது குழந்தைகளுக்கு வீட்டிற்கான செல்லப்பெயர் என்று மிகவும் விசித்திரமான பெயர்களைச் சூட்டிப் பின்னர் அதுவே பாடசாலைகளிலும் அழைக்க வசதியாக இருக்கின்றது என்று நிலைத்து விடும் வழக்கம் இருக்கின்றது என்றும், தன்னை ஹ_ம்மா என்று செல்லப் பெயர் கொண்டு அழைப்பது நிலைத்த போதும், கல்கத்தாவின் தன் உறவினர் ஒருவரின் மகனை கோகுல் என்று செல்லப்பெயர் கொண்டு அழைப்பதைப் பார்த்த போதும் இது பற்றித் தனது படைப்பில் எழுத வேண்டும் என்று எண்ணியிருந்ததாகவும் கூறுகின்றார்.<br />தனக்கு ஏற்பட்ட கொடூரமான விபத்தை மறக்காமல் இருப்பதற்காக அப்போது தான் படித்துக்கொண்டிருந்த நிகொலாய் கோகுலின் ஞாபகார்த்தமாய் கோகுல் என்ற பெயரை செல்லப்பெயராக வைத்ததாக மகனுக்குக் கூறிய தந்தை ஒருநாள் நீ இதைப் புரிந்து கொள்ளுவாய் என்கின்றார். உறவின் ஆழம் என்பது ஒருவரை இழந்த பின்னர்தான் புரிந்து கொள்ளப்படுகின்றது.<br />இறுக்கமாக தமது கலாச்சாரங்களுக்குள் பிள்ளைகளை வளர்க்க விரும்பும் பெற்றோர். பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களான போது கலாச்சாரத்தை விட்டு விலகிப் போகும் தருணம் பிள்ளைகள் மேல் அவர்கள் கொண்ட பாசம் அவர்களை வெறுக்கி ஒதுக்கவும் முடியாமல் அவர்கள் வாழ்வு முறையை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் தடுமாறச் செய்யும். பிள்ளைகள் வளர்ந்து கல்வி, வேலை என்று பெற்றோரைப் பிரிந்து செல்வதும், வேலை காரணமாகக் கணவன் மனைவியே சிலகாலம் பிரிந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதும் எங்குமே சகஜம் எனினும், புலம்பெயர்ந்த நாடுகளில் சொந்தங்கள், உறவினர்களின் இல்லாமை வயது முதிர்ந்த நிலையில் அவர்கள் வாழ்வு நிலை பற்றித் தடுமாறச் செய்யும். திடீரென்று கணவன் இறந்து, பிள்ளைகளும் தமக்கான எதிர்காலத்தில் இணைந்து விட இனி அமெரிக்காவில் தனக்கான வாழ்வு என்று ஒன்றுமில்லை என்று தனது கடைசிக்காலத்தை இந்தியாவில் கழிப்பதற்காகக் கிளம்புகின்றார் தபு. வெள்ளைஇனப்; பெண்ணைக் காதலித்து தந்தையின் திடீர் மரணத்திற்குப் பின் குடும்;பம் உறவு என்று தடுமாறி காதலியின் காதலின் ஆழத்தை அலட்சியம் செய்து, பின்னர் தாயின் விருப்பத்திற்கு இணங்க இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த பெங்காலிப் பெண்ணை மணந்து அவளின் அதிநவீன வாழ்க்கை முறையை எதிர்கொள்ள முடியாமல் மணவாழ்வை முறிந்துக் கொண்டு தந்தை பிறந்தநாள் பரிசாகக் கொடுத்த நிகலாய் கோகுலின் படைப்பைப் படித்த வண்ணம் பயணம் செய்யும் கோகுல். திரைப்படம் நிறைவிற்கு வருகின்றது.<br /><br />தபு சிறந்த ஒரு நடிகை. தனது பாத்திரத்தை இயக்குனர் எதிர்பார்ப்பதிலும் திறமையாகச் செய்யக் கூடியவர். இருந்தும் என்னை நடிப்பில் கவர்ந்தவர் இஃபன் கான். ஏக்கம், குழப்பம், காதல் போன்ற உணர்வுகளில் திரைப்படத்தில் வாழ்ந்திருக்கின்றார்.<br />எங்கோ பிறந்து வளர்ந்து வாழ்ந்து, பின்னர் புலம்பெயர்ந்த நாம் எமது இறுதிக்காலத்தில் கூட எமக்காக ஒரு நாடு இருக்கின்றது என்று புறப்பட முடியாத நிலை.கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-9540420.post-31038619078370275982007-03-14T13:24:00.000-07:002007-03-14T13:37:07.891-07:00Uyirppu"உயிர்ப்பு நாடக அரங்கப்பட்டறையின் 2வது நாடக நிகழ்வு"<br /><br />மார்ச் மாதம் 24ம் திகதி மாலை 6:00 மணிக்கு யோர்க் வூட் லைபிறரி தியேட்டரில் இடம் பெற உள்ளது.<br /><br />இந்நிகழ்வில்:-<br /><br /><strong><em>தோற்ற மயக்கம்</em></strong> (David Mamet இன் "American Buffalo " எனும் நாடகத்தின் தழுவல்)<br /><br /><em><strong>அடையாளம் -1</strong></em><br />(குடும்பவன்முறையின் அதி உச்ச பாதிப்பை அடையாளம் காண்போம்)<br /><br /><strong><em>அணங்கு</em></strong><br /><strong><em>(</em></strong>இலக்கியப் பெண்களை மீள்வாசிப்பு செய்வோம்)<br /><em><strong>அடையாளம் -2</strong></em><br />(பெண்ணின் அடையாளம் ஆணையும் கட்டிப் போடும்)<br /><br />ஆகிய நாடகங்கள் சுமதி ரூபனின் ஆக்கம் இயக்கத்தில் இடம் பெறும்.<br /><br />இலவச பிள்ளை பராமரிப்பு சேவை வழங்கப்படும்.கட்டணம் $10.00<br /><br />தொடர்புகளுக்கு:-சுமதி ரூபன்<br />416-347 5087கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.com0