Friday, May 20, 2005

பிரிதலின் ரகசியம்....


சிறு இடைவெளியின் பின்னர்
மீண்டும் அதே கேள்வி உன்னிடமிருந்து.
மென்று விழுங்குகின்றேன் நான்.
வாய் வரை வந்த பதில்
எச்சிலாய் உள்ளே அடங்கிற்று.
உன் ஏக்கப் பார்வை நெஞ்சைத் தாக்க
உதிர்கிறது என் உறுதி.

கைகோர்த்து நீண்ட தூரம் நடக்கின்றோம்.
திரும்பிப் பார்க்க,
நினைவுகள் நிழலாய் தொடர்கிறது...

காலமறிந்து இடம்பெயரும் பறவைக் கூட்டம்.
வண்டுகளமரா பூக்களின் வாடல்.
சினத்துடனான சிறுவனின் அழுகை.

இன்னும் நடக்கின்றோம்;
எதிர்பார்ப்புகளோடு நீ...

No comments: