Wednesday, February 23, 2005

புலிநகக்கொன்றை

(பி.ஏ கிறிஷ்ணனின் படைப்பு நீண்டு போனதால் மூன்று பிரவுகளாக்கித் தருகின்றேன்.
இது ஓரு Penguin வெளியீடு)


1.

தோழி கேள்,
அவனுடைய மணலடர்ந்த கரையில் ஒரு புலிநகக் கொன்றை மரம். அதன் தாழ்ந்த பூத்துக் குலுங்கும் கிளைகளில் எப்போதும் கூச்சலிட்ட அழிவு செய்யும் பறவைகள் கூட்டம். அவனை நான் இனி நினைக்க மாட்டேன். எனது கண்களுக்கு சிறிது தூக்கமாவது கிடைக்கும்.

The Tigerclaw Tree
What she said
Friend, listen.
I’ll not think anymore
of that man on whose sandy shore
birds occupy the tigerclaw tree
and play havoc with the low flowering branches,
and my eyes will get some sleep

தமிழ் நாட்டில் வசித்த “தென்கலை ஐயங்கார் குடும்பம்?”; ஒன்றில் மூன்று தலை முறைக்கான கதை இங்கே முன்னும் பின்னுமாக சொல்லப்பட்டிருக்கின்றது.
ஆரம்பம் 1970
பிரிவு
மது ஆண்டுகள்
வருகை
எனப்பிரித்துக் கதையை நகர்த்தியிருக்கின்றார் கதை சொல்லி.
பொன்னம்மாள் எனும் பொன்னா பாட்டியில் தொடங்கி அவளது கொள்ளுப் பேத்தி இந்து வின் பிறப்பு வரையிலான கதை எனும் போது பாத்திரங்களும் சம்பவங்களும் விரிந்து கிடக்கின்றன. பாத்திரங்கள் ஒவ்வொன்றும் மிக நுணுக்கமாக தமது அடையாளத்திலிருந்து சிறிதும் விலகாமல் வாழ்க்கைக்குள் முதிர்ந்து செல்கின்றார்கள். ஒரு சமூகத்தின் அத்தனை பிரச்சனைகளையும் சார்பற்ற நிலையில் கதை சொல்லி நகர்த்திச் சென்றிருக்கின்றார். அரசியல், கலாச்சாரம், மதம், காதல் என்று ஒட்டு மொத்தத்தையுமே கேள்விக்குறியாக்கி மனித மனப்பிறழ்வுகள் அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றன.

கதையில் ஹீரோஇஸத்தோடு வந்து போகும் நம்பியை நாவல் வாசித்த எல்லோருக்கும் பிடித்துப் போயிருக்கும். வாழ்வை விளங்கி இறுக்கம் நிறைந்த கூ10ழலிலும் திடமாக முடிவெடுக்கும் ஒரு படித்த பண்பான கொம்யூனிஸ்ட். இருப்பினும் என்னைக் கவர்ந்தவன் கண்ணன்தான். தனது கொள்கையிலேயே அவனுக்குக் குழப்பம். எப்போதும் நம்பியின் கருத்திற்காகக் காத்திருப்பவன். நம்பியென்றால் இப்படிச் சொல்லிச் செய்திருக்கக் கூடும் என்று சிந்திப்பவன். காதலி, கொள்கை, வேலை என்று எங்கு போயினும் குழம்பிப்போகும் பாத்திரம். அரசியல் கொள்கைக்காக காதலையும், கல்வியையும் விட்டுக்கொடுப்பது போல் கதையில் நகர்வு இருப்பினும் காதலி உமாவிற்கு கண்ணனின் தங்கை ராதா கூறுவது:

“கம்யூனிஸ்ட் கட்சியோட சாவாசமா? இந்தப் பைத்தியம் மெட்றாஸ் போனாப்பிறகு புதுசா பிடிச்சிண்டிருக்கு. அதுக்கு முன்னால திமுக பைத்தியம். அதுக்கும் முன்னால எம்ஜியார் பைத்தியம். போன வாரம் கூட எஸ்க்பிரஸ்சில வந்த ஒரு ஆர்டிகல படிண்ணு குடுத்தான் “Beyond the Bamboo Curtain” நினைக்றன். நான் இங்க இருக்கிற துணிக் கேட்டிணுக்குப் பின்னால என்ன இருக்கெண்டு பாக்க முடியல அங்க மூங்கில் கேட்ணுக்குப் பின்னால என்ன இருக்குண்ணு ஏன் பாக்கப் போற எண்டு கேட்டன் அவனுக்கு ரொம்ப கோபம்”
“அப்ப நக்ஸ்லைட்டோட”
“சே சே அதெல்லாம் ஒண்ணுமில்லை எல்லா நதிகளிலையும் குளிச்சுப் பாக்கணும் எண்ணு அவனுக்கு ஆசை ஆழம் அதிம்ணா அவனா திரும்பி வந்திடுவான். உயிர் நம்ம மாதிரியே அவனுக்கும் வெல்லம். நம்பியைச் சொல்லு அவன் உண்மையான கொம்யூனிஸ்ட் ஆனால் இவன் மாவோ சீனாவென்று சொல்லிக்கிட்டு அலையிவன்களோட சேந்து சுத்துறான். சரியான நேரத்தில வெளியில வந்திடுவான்”


மிகுந்த நகைச்சுவை உணர்வோடு கதை நகர்ந்து செல்கின்றது