ஏதாவது எழுது என்பாய்.
என்ன எழுதுவது என்பது தெரியாமல்
நீ கேட்டதற்காய் எழுதுகின்றேன்.
இந்த எழுத்து உனக்குத் திருப்தி தந்தால்,
அது எனக்கும் திருப்தியே.
நீ எதிர்பார்த்ததை நான் எழுதவில்லை என்று நீ நினைத்தால்,
நீ என்னிடம் எதிர்பார்த்தது தவறு.
எழுத ஒன்றுமில்லாத போது
இவ்வளவு எழுதியதே பெரிய விடயம்;
அதுவும்
உன் எழுதப்படாத மின்அஞ்சலுக்கு.
எனக்கு நிறையவே நேரம் இருப்பதாய் நீ குற்றம் சொல்லலாம்.
நேரம் மட்டும் போதுமானதல்ல எழுதுவதற்கு.
ஒருநாள் எழுதுவேன் நீ எதிர் பார்த்தவற்றையும்,
எதிர்பாராதவற்றையும்.
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
கறுப்பி,
நல்லா கவிதை எழுதுறீங்க.
//திருப்பி//
தி?
//நேரம் மட்டும் போதுமானதல்ல எழுதுவதற்கு.
ஒருநாள் எழுதுவேன் நீ எதிர் பார்த்தவற்றையும்,
எதிர்பாராதவற்றையும். //
அருமையான வரிகள்.
/பெரிய விடையம்;/
ஒரு சின்ன விடயம்;
அது பெரிய விடயம்.
ஏதாவது எழுது என்னும் போது ….
நீ எழுதுவாய்ää எழுதக் கூடியவள் என்ற நம்பிகை இருந்ததுää இருக்கிறது
ஆனால்
நீ கேட்டதற்காய் எழுதுகிறேன்….
சலிப்பு வருகிறது! உங்களை வருத்தி எழுதுகிறாய்.. இதுவே திருப்பிதி தரக் கூடியது அல்ல.
பொய்யான திருப்தியில் உங்களுக்கு விரும்பம் இருப்பதை காட்கிறது.
நீ எதிர்பார்த்ததை………….
அன்புக்குரியவள்ää நம்பிக்கைக்கு உரியவர்களிடம் எதிர்பார்ப்புகள் வீண்போவது குறைவு
எழுத ஒன்றும் இல்லா போது……………..
எழுத ஏன் ஒன்றும் இல்லாமல் போனது… அன்று எழுதி எழுதித்தானே இவ்வளவும் நடந்து… ஆனால் இன்று மட்டும்??????????????
நிறையவே நேரம் இல்லாத போது எழுதப்பட்ட பந்திகள் இன்று நேரம் இருக்கும் போது வரிகளையேனும் காணவில்லை என்ற ஏக்கம் சாதாரணம்.
கேட்கப்படாமலே வரையப்பட்ட காகிதங்கள் இன்றும் என் அஞ்சலில்!!!!!!!!!!!! சாட்சிகளாக….
நேரம் மட்டும் போதுமானது அல்ல……..
அது உண்மை மனமும்ää இடமும் வேண்டும்
ஆனால் அது இன்று இல்லை அதுவும் உண்மை!!!!!!!!!!!!1
ஒரு நாள் எழுதுவேன்………..
நல்ல வரி………. ஆனால் கொஞ்சம் அகங்காரம் தொனிக்கிறது.. இது நல்ல சகுனமாய்த் தெரியவில்லை.
எல்லா வற்றிக்கும் காரணமாக இருந்து விட்டு விடைகளை விரும்பாத கேள்விகளை மட்டும் கேட்கத் துணிவது மனசுக்கு கொஞ்சம் கஸ்டமாக இருக்கு கறுப்பி…………..
முத்து நன்றி
சுந்தரவடிவேல் மாற்றி விட்டேன் நன்றி
போஸ்டன் பாலா நன்றி
பெயரிலி – உம்மோட பெரிய பேஜாராப் போச்சு – மாற்றி விட்டேன் நன்றிகள்
வெளிச்சம் - என்ன ஏதோ ஒரு கவிதை என்று நான் சின்னதாக எழுதியதை அக்குவேறு ஆணி வேறாக ஆராய்ந்திருக்கின்றீர்கள். இதற்குள் இத்தனை அர்த்தமா என்று எனக்கு இப்போது ஆச்சரியமாக இருக்கிறது. நன்றிகள்.
சொல்லிய சொல்லிற்கு ஓரர்த்தம்
சொல்லாத சொல்லுக்கு பல அர்த்தம்
என்று நானெழுதிய தமிழின் தலை சிறந்த கவிதை வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றன. :)
கறுப்பி - அழகான செல்லப் பெயர். அழகான கவிதை.
"நேரம் மட்டும் போதுமானது அல்ல…….."
நேரம் இருந்தும் மனம் இருந்தும், வார்த்தைகள் இல்லாமல் வெற்று காகிதங்களாக.. பல!
வெளிச்சம்: பல அர்த்தங்கள் - பல உண்மைகள்!
நல்ல கவி மனசு. நல்வாழ்த்துக்கள்
Post a Comment