Friday, May 04, 2007

Toronto News

இன்று காலை செய்தியில் மிசிசாகாவைச் சேர்ந்த 12 வயது நிரம்பிய மனவளர்ச்சி குன்றிய சிறுமி ஒருத்தியை அவளது தாயாரும், ஆறு ஆண் நண்பர்களும் சேர்ந்து கொண்டு பலவிதமான பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கி வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அறியத்தந்தார்கள். பலவந்தமாக அந்தச் சிறுமிக்கு போதை மருந்துகளும் ஊட்டியுள்ளார்கள் (கொகேயின் உட்பட) சிறுமியின் பெயர் விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இதில் வேதனையான விடையம் என்னவென்றால் அந்த ஆறு ஆண்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்ட போது அதில் ஒருவரின் பெயர் முரளி பாலா (பாலசுப்ரமணியம்) மற்றையோர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காலையில் வேளைக்கு வெளிக்கிடும் வேளையில் அவசரமாகச் செய்தியை மேலோட்டமாகப் பார்ப்பதுண்டு. மனம் எம் பெண்கள் யாராவது கொலைசெய்யப்பட்டார்களா, தற்கொலை செய்து கொண்டார்களா என்ற பதட்டம் எப்போதுமே இருந்துகொண்டிருக்கும். ஆனால் இன்றைய செய்தி, வேலைத்தளத்தில் இது பற்றி மற்றவர்கள் கதைக்கும் போது நான் கலந்து கொள்ளாமல் தவிர்த்துக் கொண்டேன்.

3 comments:

துளசி கோபால் said...

அடப்பாவிகாளா (-:

மாசிலா said...

:-(
பன்றிகளோடு கூடிய கன்று ...

கறுப்பி said...

Thulasi & Masila thanks