Saturday, May 30, 2009

இதுதான் தருணம்.

“வணங்காமண்” என்ற பெயரில் லண்டனில் இருந்து கப்பல் ஒன்றில் மருந்துப் பொருட்களையும், உணவுப்பொருட்களையும் வன்னிமக்களுக்கு அனுப்புவதற்காக சேகரித்திருந்தார்கள். மிகப்பெரிய தொகையில் பொருட்கள் சேகரிக்கப்பட்டதோடு பணமும் தொகையாகச் சேர்ந்து கொண்டதாக அறிகின்றேன். இதுவரை காலமும் போர் தீவிரமடைந்திருந்த நேரம் அப்பொருட்களை அனுப்புவதற்குப் பல தடைகள் இருந்திருக்கும். ஆனால் தற்போது போர் முற்றுப்பெற்ற நிலையில் வன்னி மக்களுக்கு மருந்து உணவுப்பொருட்களின் தேவை அதிகம் இருக்கின்றது. லண்டன் வாழ் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செஞ்சிலுவைச்சங்கம், ஐநாசபை அங்கத்தவர்களுடன் தொடர்பு கொண்டு வணங்காமண் கப்பலுக்காகச் சேகரிக்கப்பட்ட பொருட்களையும், பணத்தையும் வன்னிமக்களுக்குச் சென்றடைவதற்கான ஒழுங்குகளைச் செய்யவேண்டும். பொருட்களையும் பணத்தையும் கொடுத்;துதவிய தமிழ் மக்கள் அப்பொருட்கள் வன்னிமக்களைச் சென்றடைவதற்கு ஒன்றாகக் கூடி செஞ்சிலுவைச் சங்கத்திடமும் ஐநாவிடமும் வேண்டுகோள் விடுத்தால் இது நிச்சயமாகச் சாத்தியப்படும். சாத்தியப்பட வைக்க வேண்டியது லண்டன் வாழ் மக்களின்; கடமை. தேசம் மின்தள உரிமையாளர்களும் வணங்காமண் ஒழுங்காளர்களுடன் தொடர்புகொண்டு அவர்களோடு இணைந்து இதனைச் செய்துமுடிக்கலாம். வன்னிமக்களுக்கு உதவுவதற்கு இதுதான் சரியான