Friday, February 25, 2005

Passion of the Christ


யேசுவின் வாழ்க்கையின் மிக முக்கிய நாட்களாகிய அவரது கடைசி மூன்று நாட்களை நடிகர் Mel Gibson இயக்குனராக மாறி Passion of the Christ மூலம் தந்திருக்கின்றார். யேசுவின் வாழ்க்கை பல இயக்குனர்களால் படமாக்கப்பட்டிருந்தாலும் Pier Paolo Pasolini யின் “The Gospel of Matthew”எனும் படம் பலரைக் கவர்ந்திருந்தது.. தற்போது Mel Gibson இன் Passion of the Christ வெளிவந்து வசு10ல் முதலிடம் பெற்று பலரையும் பேச வைத்தது.
கடைசி விருந்திற்குப் பின்னர் தலிவ மலையில் சீடர்களுடன் களித்துக்கொண்டிருக்கும் போதே யேசு தனது இறுதி நாட்கள் நெருங்கி விட்டதாகவும் அதனால் தான் அனுபவிக்கப்போகும் வேதனையும் உள்ளார்த்தமாக உணர்ந்து கொள்கின்றார். மலையடிவாரத்தில் அவர் வானைப் பார்த்து தந்தையுடன் உடையாடுவது போது படமாக்கப்பட்ட காட்சிகள் மட்டுமே சிவப்பு நிறமற்ற காட்சிகள் எனலாம்.

யேசு யூதராக இருந்த போதும் அவரைப் பணக்காற யூதர்கள் வெறுக்கின்றார்கள். அவர் தன்னை கடவுளின் தூதர் என்பதை மக்கள் ஏற்கமறுக்கின்றார்கள். யேசுவின் சீடன் ஒருவரிடமே பணத்தைக் கொடுத்து யேசுவின் கன்னத்தில் முத்தமிடுவதன் மூலம் தமக்கு அடையாளம் காட்ட வைக்கின்றார்கள். கைது செய்யப்பட்ட யேசுவை பிலாத் எனும் தலைவர் முன் நிறுத்தி கடுமையாகத் தண்டிக்கும் படி மக்கள் கோஷமிட்டு வேண்டிக்கொள்கின்றார்கள். ஆனால் பிலாத்திற்கு யேசு குற்றமற்றவராகவே தெரிகின்றார். யேசுவைத் தண்டிக்க அவரால் முடியவில்லை. இருந்தும் மக்களின் கோஷம் அவரைத் தடுமாற வைக்கின்றது. தெற்கு இத்தாலியின் புழுதி படிந்த பகுதியில் பிரமாண்டமான கட்டிடங்களுக்கு மத்தியில் அன்றைய கால உடைகளுடன் பல விதமாக தோற்றமுற்ற மக்களை வைத்து அற்புதமாகக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

யேசு அங்குமிங்குமாகக் கைமாற்றப்பட்டு இறுதியில் மக்களின் கோஷம் வெற்றி பெற கடுமையான தண்டனை வழங்கும் படி தீர்ப்பைக் கூறி விட்டு பிலாத் விலகிக்கொள்கின்றார். அதன் பின்னர் வந்த காட்சிகள் அனைத்தும் மிகவும் குரூரமான முறையில் யேசு கசையடிகளாலும் முள் ஆயுதங்களாலும் இரத்தம் பீறிட தாக்கப்படுவது மட்டுமே திரையில் காணக்கூடியதாக இருந்தது. மனிதன் எந்த அளவிற்கு குரூபியாக மாறி இன்னொருத்தனைத் தாக்கலாம் என்பதை மிக குலோஸ் அப்பில் யேசுவில் உடல் தசைகள் வெடித்துச் சிதறுவதைக் காட்டி மனிதர்களுக்கு உணர்த்த வைக்கும் எண்ணம் மெல்கிப்ஷனுக்கு இருந்திருக்கலாம். இருந்தும் யேசு மேல் அனுதாபம் வருவதற்குப் பதில் காட்சி அமைப்புக்களில் அருவருப்பே எஞ்சியிருக்கின்றது.
ஏதாவது ஒரு வகையில் சென்டிமெல் கூறி திரைப்படத்தை வெற்றி கொள்ளச்செய்யலாம் என்பதில் மெல்கிப்சன் வெற்றி பெற்றுள்ளார். எமது யேசு எமக்காக எவ்வளவெல்லாம் சித்திரைவதை அனுபவித்திருக்கின்றார் என்று கண்கலங்கிய பார்வையாளர்கள் பலர். இத்திரைப்டத்தை ஒருவகை சமய பிரச்சாரம் என்றும் கூறலாம். யேசுவின் பொறுமை கருத்துக்கள் துணிவு என்பவற்றைப் பல திரைப்படங்கள் கூறிவிட்டன எனவே அவர் அனுபவித்த கடைசி மூன்று நாள் சித்திரவதையைக் கூறலாம் என்ற எண்ணம் இயக்குனருக்கு இருந்திருப்பினும் பிரமாண்டமான திரையரங்குகளில் முழுதாக ஒரு மனித உடல் வெடித்துச் சிதறுவதை அங்குல அங்குலமாக எவ்வளவு நேரத்திற்குத் தான் பொறுமையாகப் பார்க்க முடியும்.

வெடித்துச் சிதறிய உடலுடன் சிலுவையை மலையடிவாரத்திற்கு சுமந்து செல்லும் யேசுவை அவரின் தாயார் மேரி கண்ணீர் வடிய பின்தொடர்ந்து செல்கின்றார் சிலுவையில் அறையப்பட்ட யேசுவின் உயிர் உடலில் இருந்து பிரிகின்றது. மூன்றாம் நாள் யேசு உயிர்த்தெழுகின்றார். பைபிளில் உள்ள படியே திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கின்றது. வசனங்கள் லத்தீன் மொழியில் அமைக்கப்பட்டு ஆங்கில சப்டைட்டிலுடன் திரையிடப்பட்டுள்ளது.

பல பாடசாலைகள் சமய ஸ்தலங்கள் குழந்தைகளை இப்படத்திற்கு அழைத்துச் சென்றதாகக் கேள்விப்பட்டேன். வன்முறைகள் எந்த வகையாக இருப்பினும் குழந்தைகளிற்கு அதைக் காட்டுதல் தடைசெய்யப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏன் சமயப் பெரியவர்களுக்கு இல்லாமல் போய் விட்டது.

மொத்தத்தில் வன்முறையின் உச்சக்கட்டத்தைப் பார்க்க விரும்புவோர் மட்டுமே ரசித்துப் பார்க்கக் கூடிய ஒரு திரைப்படம் இந்த Passion of the Christ என்பது என் எண்ணம்

2 comments:

Thangamani said...

வன்முறையின் ஆணிவேர் மதமாய் இருப்பதால் அதன் காட்சி வடிவமும், எண்ணமுன் அப்படி வெளிப்பட்டிருப்பது ஆச்சர்யப்படச் செய்வதில்லை.

கறுப்பி said...

தங்கமணி நன்றி. ஆனால் இப்படம் சக்கை போடு போட்டது